rambal
23-07-2003, 01:26 PM
அவன்..
இலக்கில்லா ஓடுகிறான்
எதை எதையோ தேடுகிறான்
பரிகசிக்கவும் ஆளில்லை
பரிகாசத்திற்கும் கூடத்தான்..
ஊனை உருக்கி தின்னப்பார்க்கும்
தனிமையில் தவிக்கிறான்..
பிரபஞ்சத்தின்
காற்று எல்லைகளுக்கப்பாற்பட்ட
வீதிகளில் பயணிக்கிறான்..
சில சமயம் மிருகமாகி
சுகிக்கிறான்
சில சமயம்
ஞானியாகி போதிக்கிறான்..
சில சமயம்
குழந்தையாகி மகிழ்கிறான்..
அவனும் வாழ்கிறான்
கோடிக்கணக்கான தூசுகளுக்கிடையில்
ஒரு தூசுவாய்..
இப்போது..
எங்கோ யாத்திரைக்கு கிளம்புகிறான்..
மீண்டு வருவானா?
மீண்டும் வருவானா?
இலக்கில்லா ஓடுகிறான்
எதை எதையோ தேடுகிறான்
பரிகசிக்கவும் ஆளில்லை
பரிகாசத்திற்கும் கூடத்தான்..
ஊனை உருக்கி தின்னப்பார்க்கும்
தனிமையில் தவிக்கிறான்..
பிரபஞ்சத்தின்
காற்று எல்லைகளுக்கப்பாற்பட்ட
வீதிகளில் பயணிக்கிறான்..
சில சமயம் மிருகமாகி
சுகிக்கிறான்
சில சமயம்
ஞானியாகி போதிக்கிறான்..
சில சமயம்
குழந்தையாகி மகிழ்கிறான்..
அவனும் வாழ்கிறான்
கோடிக்கணக்கான தூசுகளுக்கிடையில்
ஒரு தூசுவாய்..
இப்போது..
எங்கோ யாத்திரைக்கு கிளம்புகிறான்..
மீண்டு வருவானா?
மீண்டும் வருவானா?