பூமகள்
10-07-2008, 06:51 AM
வெளுத்த நீலம்..!
ரத்தக் காட்டேரி கதை எல்லாரும் படிச்சி பயந்து ஓய்ந்திருப்பீங்க… இப்போ அடுத்த கதைக்கு வருகிறேன்..
இது நடந்ததும்.. ஒரு ஞாயிறன்று தான்.. எப்போதும் எனக்கென்று ஏதும் வாங்கச் செல்வதென்றால் ஒரே துள்ளலாகிவிடும் மனம்… அது ஒரு பாதணி வாங்கினாலும் தான்.. ஆனா பாருங்க.. பூவு ரொம்ப சிக்கனம்.. செலவெல்லாம் அதிகம் செய்ய மாட்டேன்.. (நாம மத்தவங்களுக்கு தானே செலவு வைப்போம்..!! :D:D)
ஒரு நாள் துணிகள் வாங்க எங்கள் ஊரில் போடப்படும் கடைத் தெருவுக்குள் சென்றோம்.. இரு நாட்கள் மட்டுமே அவை இருக்குமென்பதால் அதிக கூட்டமாக இருக்கும்.. முண்டியடித்து ஒரு வழியாக உள்ளே சென்ற பொழுது.. வண்ண வண்ண சுடிதார்கள் கண்ணைப் பறித்தன.. சரி.. அப்பாவிடம் சொல்லி ஒரு சுடிதார் வாங்கிவிடலாமென ஐடியா மனதில் உதித்தது..
அப்பாவிடம் அடம் பிடிக்க .. அப்பாவும் சம்மதிக்க.. சரியென்று சுடிதார் துணிவகைகளைத் தேடிக் கொண்டிருந்தேன்..
அருகே ஒரு பெரிய பெண்மணி வந்து நின்று.. நான் தேர்வு செய்வதையே அவரும் எடுத்து.. இது போல என் பொண்ணு கேட்டா.. அது போல என் பொண்ணு கேட்டா என்று.. உரைத்துக் கொண்டிருந்தார்கள்..
நான் ஒரு 3 அல்லது 4 சுடிதார் தேர்வு செய்தபின்.. கடைசியில் அதில் இரண்டு அல்லது மூன்று எடுப்பது வழக்கம்.. அதே போல.. தேர்வு செய்தவற்றை கடைக்காரரிடம் கொடுத்து தனியாக வைக்கச் சொல்ல..
ஒரு நீல வண்ண சுடிதார் எனக்காக என்னிடம் கடைக்காரர் காட்டிக் கொண்டிருந்தார்.. நான் அதையும் எடுத்து வையுங்க.. நான் கடைசியில் முடிவெடுக்கிறேன் என்று சொல்ல..
கடைக்காரர் எடுத்து வைப்பதற்குள்.. அந்த பெண்மணி அந்த சுடிதாரை எடுத்து வைத்துக் கொண்டு.. “ஏம்மா.. எடுத்துட்டியா இதை.. செலக்ட் செய்திட்டியா..” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.. எத்தனை நேரம் தான் பூவு அதை சமாளிக்க..
“இல்லீங்க.. எடுத்து வைக்க சொல்லியிருக்கேன்.. கடைசியா செலக்ட் செய்வேன்” என்று சொல்ல.. அவர் விடாப்பிடியாக மறுபடி மறுபடி கேட்டுக் கொண்டே இருந்தார்..
கொஞ்சம் கோபமாக வந்தாலும்.. அடக்கிக் கொண்டு..
“உங்களுக்கு பிடிச்சா எடுத்துக்கோங்க.. எனக்கு பிரச்சனையில்லை” என்று நான் ஒரேயடியாக சொல்ல… அப்பெண்மணி வாயடைத்துப் போய்.. அதை எடுத்துக் கொண்டார்..
சரி அதோடு விட்டால் பரவாயில்லை.. அதுக்கப்புறம் செய்தாரே பார்க்கனும் ஒரு காமெடி..
நான் தேர்வு செய்து எடுத்து வையுங்க என்று சொன்ன சுடிதாரை எடுத்துஎன்னிடம் நீட்டி.. "என் பொண்ணும் இதே கலரில் கேட்டா.. சரி இதை இவுங்களேஎடுத்துக்கட்டும்.." அப்படின்னு சொல்லி என்னிடம் தந்தாங்க..
எனக்கு ஒரே அதிர்ச்சியாகிவிட்டது.. நான் எடுத்ததை இவுங்க எதுக்கு எனக்குதருவது போல் தரனும்னு...
அப்புறம் மெதுவாகப் புரிஞ்சது.. நான் எடுத்துக்கச்சொன்னதால் அவுங்களும் தாராள மனம்னு காட்ட சொல்லியிருக்காங்கன்னு....
கடைக்காரர் அந்த பெண்மணி சென்றவுடன்… “ஏங்க.. இருந்தது ஒரே பீஸ்.. நீங்க எடுத்துட்டேன்னு சொல்ல வேண்டியது தானே.. நான் உங்களுக்கு தானே காட்டினேன்.. அவுங்க வியாபாரம் செய்யறவங்க தான்..” அப்படின்னு சொன்னார்..
“இல்லீங்க அவுங்க ஆசையா கேட்டுட்டே இருந்தாங்க.. அதான்.. எடுத்துக்க சொல்லிட்டேன்” அப்படின்னு நான் சொன்னேன்..
என்ன தான் நான் விட்டுக் கொடுத்திருந்தாலும்.. ஒரு சின்ன பொண்ணிடம்.. நான் தேர்வு செய்வதாகப் பார்த்து அதையே தனக்கு வேண்டுமென்பது போல சண்டைக்கு வந்த அப்பெண்மணியையும்.. அந்த நீல நிற சுடிதார் மெட்டீரியலையும் அன்றிரவு முழுக்க மறக்க முடியவில்லை..:traurig001::traurig001:
இத்தனைக்கிடையிலும்…
பெரியவங்க மனசு இத்தனை சின்னப் புள்ளத்தனமா இருக்கேன்னு கொஞ்சம் சிரிப்பும் வந்தது…!!:icon_ush::icon_rollout:
இதுலிருந்து எனக்கு தெரிஞ்சது என்னன்னா… நமக்கு பிடிச்சதை உடனே தக்க வைச்சிக்கனும்.. இல்லாட்டி நம் கண்முன்னே.. நாளை அது வேறொருவருடையதாகிடும்…:icon_rollout:
ரத்தக் காட்டேரி கதை எல்லாரும் படிச்சி பயந்து ஓய்ந்திருப்பீங்க… இப்போ அடுத்த கதைக்கு வருகிறேன்..
இது நடந்ததும்.. ஒரு ஞாயிறன்று தான்.. எப்போதும் எனக்கென்று ஏதும் வாங்கச் செல்வதென்றால் ஒரே துள்ளலாகிவிடும் மனம்… அது ஒரு பாதணி வாங்கினாலும் தான்.. ஆனா பாருங்க.. பூவு ரொம்ப சிக்கனம்.. செலவெல்லாம் அதிகம் செய்ய மாட்டேன்.. (நாம மத்தவங்களுக்கு தானே செலவு வைப்போம்..!! :D:D)
ஒரு நாள் துணிகள் வாங்க எங்கள் ஊரில் போடப்படும் கடைத் தெருவுக்குள் சென்றோம்.. இரு நாட்கள் மட்டுமே அவை இருக்குமென்பதால் அதிக கூட்டமாக இருக்கும்.. முண்டியடித்து ஒரு வழியாக உள்ளே சென்ற பொழுது.. வண்ண வண்ண சுடிதார்கள் கண்ணைப் பறித்தன.. சரி.. அப்பாவிடம் சொல்லி ஒரு சுடிதார் வாங்கிவிடலாமென ஐடியா மனதில் உதித்தது..
அப்பாவிடம் அடம் பிடிக்க .. அப்பாவும் சம்மதிக்க.. சரியென்று சுடிதார் துணிவகைகளைத் தேடிக் கொண்டிருந்தேன்..
அருகே ஒரு பெரிய பெண்மணி வந்து நின்று.. நான் தேர்வு செய்வதையே அவரும் எடுத்து.. இது போல என் பொண்ணு கேட்டா.. அது போல என் பொண்ணு கேட்டா என்று.. உரைத்துக் கொண்டிருந்தார்கள்..
நான் ஒரு 3 அல்லது 4 சுடிதார் தேர்வு செய்தபின்.. கடைசியில் அதில் இரண்டு அல்லது மூன்று எடுப்பது வழக்கம்.. அதே போல.. தேர்வு செய்தவற்றை கடைக்காரரிடம் கொடுத்து தனியாக வைக்கச் சொல்ல..
ஒரு நீல வண்ண சுடிதார் எனக்காக என்னிடம் கடைக்காரர் காட்டிக் கொண்டிருந்தார்.. நான் அதையும் எடுத்து வையுங்க.. நான் கடைசியில் முடிவெடுக்கிறேன் என்று சொல்ல..
கடைக்காரர் எடுத்து வைப்பதற்குள்.. அந்த பெண்மணி அந்த சுடிதாரை எடுத்து வைத்துக் கொண்டு.. “ஏம்மா.. எடுத்துட்டியா இதை.. செலக்ட் செய்திட்டியா..” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.. எத்தனை நேரம் தான் பூவு அதை சமாளிக்க..
“இல்லீங்க.. எடுத்து வைக்க சொல்லியிருக்கேன்.. கடைசியா செலக்ட் செய்வேன்” என்று சொல்ல.. அவர் விடாப்பிடியாக மறுபடி மறுபடி கேட்டுக் கொண்டே இருந்தார்..
கொஞ்சம் கோபமாக வந்தாலும்.. அடக்கிக் கொண்டு..
“உங்களுக்கு பிடிச்சா எடுத்துக்கோங்க.. எனக்கு பிரச்சனையில்லை” என்று நான் ஒரேயடியாக சொல்ல… அப்பெண்மணி வாயடைத்துப் போய்.. அதை எடுத்துக் கொண்டார்..
சரி அதோடு விட்டால் பரவாயில்லை.. அதுக்கப்புறம் செய்தாரே பார்க்கனும் ஒரு காமெடி..
நான் தேர்வு செய்து எடுத்து வையுங்க என்று சொன்ன சுடிதாரை எடுத்துஎன்னிடம் நீட்டி.. "என் பொண்ணும் இதே கலரில் கேட்டா.. சரி இதை இவுங்களேஎடுத்துக்கட்டும்.." அப்படின்னு சொல்லி என்னிடம் தந்தாங்க..
எனக்கு ஒரே அதிர்ச்சியாகிவிட்டது.. நான் எடுத்ததை இவுங்க எதுக்கு எனக்குதருவது போல் தரனும்னு...
அப்புறம் மெதுவாகப் புரிஞ்சது.. நான் எடுத்துக்கச்சொன்னதால் அவுங்களும் தாராள மனம்னு காட்ட சொல்லியிருக்காங்கன்னு....
கடைக்காரர் அந்த பெண்மணி சென்றவுடன்… “ஏங்க.. இருந்தது ஒரே பீஸ்.. நீங்க எடுத்துட்டேன்னு சொல்ல வேண்டியது தானே.. நான் உங்களுக்கு தானே காட்டினேன்.. அவுங்க வியாபாரம் செய்யறவங்க தான்..” அப்படின்னு சொன்னார்..
“இல்லீங்க அவுங்க ஆசையா கேட்டுட்டே இருந்தாங்க.. அதான்.. எடுத்துக்க சொல்லிட்டேன்” அப்படின்னு நான் சொன்னேன்..
என்ன தான் நான் விட்டுக் கொடுத்திருந்தாலும்.. ஒரு சின்ன பொண்ணிடம்.. நான் தேர்வு செய்வதாகப் பார்த்து அதையே தனக்கு வேண்டுமென்பது போல சண்டைக்கு வந்த அப்பெண்மணியையும்.. அந்த நீல நிற சுடிதார் மெட்டீரியலையும் அன்றிரவு முழுக்க மறக்க முடியவில்லை..:traurig001::traurig001:
இத்தனைக்கிடையிலும்…
பெரியவங்க மனசு இத்தனை சின்னப் புள்ளத்தனமா இருக்கேன்னு கொஞ்சம் சிரிப்பும் வந்தது…!!:icon_ush::icon_rollout:
இதுலிருந்து எனக்கு தெரிஞ்சது என்னன்னா… நமக்கு பிடிச்சதை உடனே தக்க வைச்சிக்கனும்.. இல்லாட்டி நம் கண்முன்னே.. நாளை அது வேறொருவருடையதாகிடும்…:icon_rollout: