ராஜா
10-07-2008, 04:53 AM
20-20 எதிரொலி: ஒரு நாள் போட்டி பார்முலாவை மாற்றும் ஐசிசி
டெல்லி: டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டிருப்பதால், 50 ஓவர் ஒரு நாள் போட்டிகளுக்கு மவுசு குறைந்து போய் விடாமல் தடுக்கும் வகையில், அதில் அதிரடி மாற்றங்களை செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது.
ஒரு காலத்தில் டெஸ்ட் போட்டிகள் கோலோச்சின. பின்னர் 60 ஓவர் ஒரு நாள் போட்டிகள் வந்தன. அதை பின்னர் டிரிம் செய்து தலா 50 ஓவர்களைக் கொண்டதாக அவை மாறின. தற்போது 20-20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் வந்து விட்டன.
20-20 ஓவர் போட்டிகளால் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் செல்வாக்கிழந்து போய் விடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து ஒரு நாள் போட்டிகளில் பல மாற்றங்ளைக் கொண்டு வந்து அவற்றை சுவாரஸ்யம் மிக்கதாக மாற்ற ஐசிசி தீர்மானித்துள்ளது.
ஒருநாள் போட்டிகளை இரண்டு இன்னிங்ஸ் கொண்டதாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன என்று ஐசிசியின் பொது மேலாளர் டேவ் ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளை 40 ஓவர் கொண்டதாக குறைப்பது அல்லது 20 ஓவர்களை கொண்ட இரண்டு இன்னிங்ஸ் போட்டிகளாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனவாம்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டி ஆகிய 3 வடிவங்களையுமே பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், ஒருநாள் போட்டிகள் 60 ஓவர் போட்டிகளாக அறிமுகமாகி பல்வேறு மாற்றங்களை சந்தித்து வந்துள்ளதால் மேலும் சில மாற்றங்களை செய்யலாம் என்று தெரிவித்தார்.
Source: Oneindia
டெல்லி: டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டிருப்பதால், 50 ஓவர் ஒரு நாள் போட்டிகளுக்கு மவுசு குறைந்து போய் விடாமல் தடுக்கும் வகையில், அதில் அதிரடி மாற்றங்களை செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது.
ஒரு காலத்தில் டெஸ்ட் போட்டிகள் கோலோச்சின. பின்னர் 60 ஓவர் ஒரு நாள் போட்டிகள் வந்தன. அதை பின்னர் டிரிம் செய்து தலா 50 ஓவர்களைக் கொண்டதாக அவை மாறின. தற்போது 20-20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் வந்து விட்டன.
20-20 ஓவர் போட்டிகளால் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் செல்வாக்கிழந்து போய் விடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து ஒரு நாள் போட்டிகளில் பல மாற்றங்ளைக் கொண்டு வந்து அவற்றை சுவாரஸ்யம் மிக்கதாக மாற்ற ஐசிசி தீர்மானித்துள்ளது.
ஒருநாள் போட்டிகளை இரண்டு இன்னிங்ஸ் கொண்டதாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன என்று ஐசிசியின் பொது மேலாளர் டேவ் ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளை 40 ஓவர் கொண்டதாக குறைப்பது அல்லது 20 ஓவர்களை கொண்ட இரண்டு இன்னிங்ஸ் போட்டிகளாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனவாம்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டி ஆகிய 3 வடிவங்களையுமே பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், ஒருநாள் போட்டிகள் 60 ஓவர் போட்டிகளாக அறிமுகமாகி பல்வேறு மாற்றங்களை சந்தித்து வந்துள்ளதால் மேலும் சில மாற்றங்களை செய்யலாம் என்று தெரிவித்தார்.
Source: Oneindia