சூறாவளி
09-07-2008, 06:22 PM
எனக்கு வாழ்க்கையே
அஸ்தமனமாகியது போல்
தோன்றியது..
ஆனால்...
அது
உதயத்திற்கு
சற்று முன்னுள்ள
விடியலின் நிசப்தம்
என்பது
இன்றுதான்
உணர்ந்து கொண்டேன்....
என் நேசத்திற்குரியவளே !
என் கன்னங்களை
இதமாய் வருடும்
இந்த நேசக்கரங்களோடு
எங்கிருந்தாய் ?..
உன்
படபடக்கும்
பஞ்சுக் கரங்களை
என் கரங்களால்
அணைக்கும் போதே
இந்த
நெஞ்சமும் விம்முகிறதே !
உன்
மைவிழி போன்ற
கண்களுக்குள்
என்னையும்
என் "உயிரையும்"
எப்படி
அடைத்து வைத்தாய்?
என் உயிரே
உலர்ந்து விட்டது
எனும் வேளையில்,
என்
உயிரையும்
உயிரோவியமாய்
தீட்டியவளே !
என் சங்கு கழுத்தில்
உன்
மென் இதழ்கள்
பதியும் தருணத்தில்
என் உடல்முழுவதும்
நனையாமலயே
சிலிர்கின்றதே
இந்த ஒரு
நொடிக்காகத்தான்
என் உயிர் நாடியும்
இவ்வளவு நாளும்
துடித்ததோ!!!...
அஸ்தமனமாகியது போல்
தோன்றியது..
ஆனால்...
அது
உதயத்திற்கு
சற்று முன்னுள்ள
விடியலின் நிசப்தம்
என்பது
இன்றுதான்
உணர்ந்து கொண்டேன்....
என் நேசத்திற்குரியவளே !
என் கன்னங்களை
இதமாய் வருடும்
இந்த நேசக்கரங்களோடு
எங்கிருந்தாய் ?..
உன்
படபடக்கும்
பஞ்சுக் கரங்களை
என் கரங்களால்
அணைக்கும் போதே
இந்த
நெஞ்சமும் விம்முகிறதே !
உன்
மைவிழி போன்ற
கண்களுக்குள்
என்னையும்
என் "உயிரையும்"
எப்படி
அடைத்து வைத்தாய்?
என் உயிரே
உலர்ந்து விட்டது
எனும் வேளையில்,
என்
உயிரையும்
உயிரோவியமாய்
தீட்டியவளே !
என் சங்கு கழுத்தில்
உன்
மென் இதழ்கள்
பதியும் தருணத்தில்
என் உடல்முழுவதும்
நனையாமலயே
சிலிர்கின்றதே
இந்த ஒரு
நொடிக்காகத்தான்
என் உயிர் நாடியும்
இவ்வளவு நாளும்
துடித்ததோ!!!...