டாக்டர் அண்ணாதுரை
08-07-2008, 04:24 AM
மொட்டை மாடியில்
மஞ்சல் வானம் கருபூத்த வேளையில்
தென்னை ஓலை வெண்ணிலவை
உரசிக் கிறுக்கையில்
மனம்.....
உருகி உருகி
பெருகி பெருகி வருகின்ற இன்பம்.....
மனதை திருடியவள்
கருங்கூந்தலை தென்றலில்
உலரவைக்கையில்.......
முடிக்கீற்றல்கள் முகத்தில்
பறந்து படர்ந்து
தொடந்து வந்து தருகின்ற இன்பம்.....
அந்திச்சுருங்கும் அந்த வேளை...
அலைனுரையும் மணல்கறையும்
காதலால் கட்டிப்புரண்டு அமிழ்கையில்...
சல்லாபச் சங்கமச்சிதறல்கள்
வெறித்தமுகத்தில்
சில்லென்று தொடுகின்ற இன்பம்.....
பொத்திவச்ச மல்லிகையாய்
பத்துதிங்கள் கடந்து கைதவழும்போது...
மழலைச்சிரிப்பொலியில்,
அவள் கண்ணக்குழியில் மனம் விழுந்து
உவகையில்....
துள்ளி துள்ளி
சொல்லி சொல்லி பெருகுகின்ற இன்பம்......
முதல் பிறைபோல....
எட்டிப்பார்க்கும் நரையொன்று,
அதனைக்கண்டுபிடித்து மகள்,
பிஞ்சுவிரலில்......
சுண்டிப்போட்டு பிடுங்கித்தருகையில்..
வாழ்க்கையின்....
பரிணாம வளர்ச்சியிலும்;
தளர்ச்சியின் அங்கீகாரத்தை
அமைதியாக ஏற்கும் பக்குவ இன்பம்.....
பிறை பல மாறி
பொளர்ணமியாய் வாழ்க்கையை...
வாழ்ந்து வென்ற அமைதியில்,
சுடர்வெளிர் வானில்...........
கடைசி சுவாசத்தில் மரணத்தை
சுகமாக வரவேற்கும் இன்பம்........
இதைவிட வேறென்ன வேண்டும்?
மஞ்சல் வானம் கருபூத்த வேளையில்
தென்னை ஓலை வெண்ணிலவை
உரசிக் கிறுக்கையில்
மனம்.....
உருகி உருகி
பெருகி பெருகி வருகின்ற இன்பம்.....
மனதை திருடியவள்
கருங்கூந்தலை தென்றலில்
உலரவைக்கையில்.......
முடிக்கீற்றல்கள் முகத்தில்
பறந்து படர்ந்து
தொடந்து வந்து தருகின்ற இன்பம்.....
அந்திச்சுருங்கும் அந்த வேளை...
அலைனுரையும் மணல்கறையும்
காதலால் கட்டிப்புரண்டு அமிழ்கையில்...
சல்லாபச் சங்கமச்சிதறல்கள்
வெறித்தமுகத்தில்
சில்லென்று தொடுகின்ற இன்பம்.....
பொத்திவச்ச மல்லிகையாய்
பத்துதிங்கள் கடந்து கைதவழும்போது...
மழலைச்சிரிப்பொலியில்,
அவள் கண்ணக்குழியில் மனம் விழுந்து
உவகையில்....
துள்ளி துள்ளி
சொல்லி சொல்லி பெருகுகின்ற இன்பம்......
முதல் பிறைபோல....
எட்டிப்பார்க்கும் நரையொன்று,
அதனைக்கண்டுபிடித்து மகள்,
பிஞ்சுவிரலில்......
சுண்டிப்போட்டு பிடுங்கித்தருகையில்..
வாழ்க்கையின்....
பரிணாம வளர்ச்சியிலும்;
தளர்ச்சியின் அங்கீகாரத்தை
அமைதியாக ஏற்கும் பக்குவ இன்பம்.....
பிறை பல மாறி
பொளர்ணமியாய் வாழ்க்கையை...
வாழ்ந்து வென்ற அமைதியில்,
சுடர்வெளிர் வானில்...........
கடைசி சுவாசத்தில் மரணத்தை
சுகமாக வரவேற்கும் இன்பம்........
இதைவிட வேறென்ன வேண்டும்?