View Full Version : சாபம் தா
shibly591
07-07-2008, 09:06 AM
தவமிருக்கிறேன்
வரம் தரத்தேவையில்லை
தேவதையே...
சாபமாவது தந்துவிட்டுப்போ........
நமக்கு தரிசனம் போதுங்க..
நல்லா இருக்குங்க.
அகத்தியன்
07-07-2008, 09:25 AM
சாபம் தர தேவதைகள் தேவையில்லை நண்பரே.
சாத்தான்கள் போதும்.
தேவதைகள் வரம் மட்டுமே தரும்.
அதை சாபமாக்குவதும், வரமாக்குவதும், பக்தனின் கையில்தான் உண்டு.
என்ன நண்பரே?
சௌக்கியமா? எப்படி போகின்றது வாழ்க்கை?
இப்பொதும் சம்மாந்துறை பக்கம் மழை பெய்கின்றதா என்ன? :icon_b::icon_b::icon_b:
shibly591
07-07-2008, 10:42 AM
வாருங்கள் நண்பரே..உப்படி போகிறது வாழ்க்கை?எங்களை நினைவிருப்பது கண்டு மகிழ்ச்சியே...சம்மாந்துறையா?மழையா?வரண்டு போய்விட்டது
அகத்தியன்
07-07-2008, 10:54 AM
உங்களை மறக்கலாமா?
உங்கள் வளாகம் என்ன சொல்கிறது?
நீங்கள்தான் மறந்தது போல ஒரு பிரமை.
மழை இல்லாததால்தான் நீங்கள் கவிதை யால் வாய்க்கால் வெட்டுகின்றீர்களோ?
shibly591
07-07-2008, 10:58 AM
வளாக வாழ்வு இந்த 25ம் திகதியுடன் உடன் முடிகிறது....சம்மாந்துறை என்றாலே வரட்சிதானே...வாய்க்கால் வெட்ட அங்கே வாய்ப்பேயில்லை.றிஸ்வானின் அவளுக்கு திருமணம் முடிந்துவிட்டது அகத்தியன்..(வேறு ஒருவருடன்)
ஓவியன்
07-07-2008, 11:07 AM
தவமிருக்கிறேன்
வரம் தரத்தேவையில்லை
தேவதையே...
சாபமாவது தந்துவிட்டுப்போ........
பாவம் இந்தக் காளை
சாபம் தந்து விட்டுப் போ
இன்னும் ஆயிரமாயிரம்
கவிதைகள் எழுதக் கடவென... :aetsch013:
அகத்தியன்
07-07-2008, 11:12 AM
றிஸ்வானின் அவளுக்கு திருமணம் முடிந்துவிட்டது அகத்தியன்..(வேறு ஒருவருடன்)
:traurig001::traurig001:
உண்மையில் வலிக்கிறது நண்பரே.
எல்லாம் முடிந்த பின் ஓர் மழைநாளில் அவனை சந்தித்தேன்.
காதல் என்ன பருவம் என்று கேட்டதற்கு, காலம் சொல்லும் என்றான்.
ஊமைக்காதல் ஒன்றுக்கும் உதவாது.
அவ்வூர் மண்ணில் எத்தனை பேரின் கண்ணீர்?
தவமிருக்கிறேன்
வரம் தரத்தேவையில்லை
தேவதையே...
சாபமாவது தந்துவிட்டுப்போ........
அந்த சாபம் நான் கேட்க நினைத்த வரத்தைவிட சிறப்பாக இருக்கட்டும்.
அகத்தியன்
07-07-2008, 11:22 AM
அந்த சாபம் நான் கேட்க நினைத்த வரத்தைவிட சிறப்பாக இருக்கட்டும்.
இது கவித
அருமை நண்பரே
நிராகரிப்பு - உதாசீனத்தைவிட மேல்..
எதிர்மறையாகவாவது ஓர் அங்கீகாரம் என்பதால்..
பாராட்டுகள் ஷிப்லி!
அக்னி
08-07-2008, 08:25 AM
தவமிருக்கிறேன்
வரம் தரத்தேவையில்லை
தேவதையே...
சாபமாவது தந்துவிட்டுப்போ........
சாபமும் தர வராவிட்டால்,
சாவையேனும் தர, வந்துவிட்டுப் போ...
ரசித்தேன்... பாராட்டுக்கள்...
shibly591
08-07-2008, 08:54 AM
விமர்சனங்களுக்கு நன்றிகள்..கவிதையை படித்துவிட்டு பாராட்டிய வாழ்த்துக்கள் அத்தனையும் எனக்கு வரம்தான்...