எஸ்.எம். சுனைத் ஹஸனீ
05-07-2008, 06:42 AM
ஒன்றுக்கொன்று உறவின்றி
முரண் கொண்டிருக்கும்
திருமண மண்டபத்தின்
நுழைவு வாயில் வாழை மரங்கள்
நாற்புறமும் ஒழுங்கின்றி
சிதறி கிடக்கும்
வாடகை நாற்காலிகள்
அலங்கோலப்பட்டிருக்கும்
பலமணி நேரங்களை விழுங்கிய
மேடையலங்காரங்கள்
அம்மாக்களுக்கு அல்வா கொடுத்து
கூட்டத்தோடு கூட்டமாய்
கலந்துவிட்ட பொடிசுகளின்
கோரஸான அழுகை சப்தங்கள்
கூட்டம் கலையத் தொடங்கும்போது
பலநாள் பட்டினிகிடந்தவர்கள்
பயங்கரமாய் புகுந்தாடியதைப்போல்
ஏகத்திற்கும் இறைந்துகிடக்கும்
முறையாய் சமைக்கப்பட்டு
நேர்த்தியாய் பரிமாறப்பட்ட
எக்கச்சக்க உணவுவகைகள்
அல்பாயிசில் சென்றவனின்
இரண்டாம் நாள் வீட்டின்
மயான அமைதியை ஒத்திருக்கும்
நாலு சுவற்றுக்குள் சற்றுமுன்
நடந்தேறிய திருவிழா
இவையெல்லாம் சேர்த்து
பெண்ணைப் பெற்றவரின்
எஞ்சியிருக்கும் வாழ்வை
பறைசாற்றுவதாய் தோன்றுமெனக்கு.
எஸ்.எம். ஜுனைத் ஹஸனி
www.junaid-hasani.blogspot.com
முரண் கொண்டிருக்கும்
திருமண மண்டபத்தின்
நுழைவு வாயில் வாழை மரங்கள்
நாற்புறமும் ஒழுங்கின்றி
சிதறி கிடக்கும்
வாடகை நாற்காலிகள்
அலங்கோலப்பட்டிருக்கும்
பலமணி நேரங்களை விழுங்கிய
மேடையலங்காரங்கள்
அம்மாக்களுக்கு அல்வா கொடுத்து
கூட்டத்தோடு கூட்டமாய்
கலந்துவிட்ட பொடிசுகளின்
கோரஸான அழுகை சப்தங்கள்
கூட்டம் கலையத் தொடங்கும்போது
பலநாள் பட்டினிகிடந்தவர்கள்
பயங்கரமாய் புகுந்தாடியதைப்போல்
ஏகத்திற்கும் இறைந்துகிடக்கும்
முறையாய் சமைக்கப்பட்டு
நேர்த்தியாய் பரிமாறப்பட்ட
எக்கச்சக்க உணவுவகைகள்
அல்பாயிசில் சென்றவனின்
இரண்டாம் நாள் வீட்டின்
மயான அமைதியை ஒத்திருக்கும்
நாலு சுவற்றுக்குள் சற்றுமுன்
நடந்தேறிய திருவிழா
இவையெல்லாம் சேர்த்து
பெண்ணைப் பெற்றவரின்
எஞ்சியிருக்கும் வாழ்வை
பறைசாற்றுவதாய் தோன்றுமெனக்கு.
எஸ்.எம். ஜுனைத் ஹஸனி
www.junaid-hasani.blogspot.com