தீபன்
04-07-2008, 05:56 AM
ஆகப்போவது என்ன?
அயல் வீட்டில் தினம் சண்டை
அடிதடியால் பெரும் தொல்லை!
தலைவிபோடும் கூக்குரல்கள்
தலையிடியாய் அயலெங்கும்!
தட்டிக்கேட்க எட்டிப்பார்த்தேன் - கண்களால்
வெட்டிப்பார்த்து குட்டுவைத்தாள்,
“உள்வீட்டு விடயமிது
உம்பாட்டில் கிடவுமென”.
வாய்மூடி மீண்டு வந்தேன்
வாய்ப்புவரக் காத்திருந்தேன்.
மாற்றாந்தாய் மனப்பான்மையொடு
மறுகிநின்றாள் மக்களோடு
மாற்றமின்றி தினந்தோறும்
நீண்டு சென்றது அடிதடிகள்!
பஞ்சம் வீட்டில் வலைவிரிக்க
பகட்டாய் ஊருலா சென்று வந்தாள்!
பசித்த பிள்ளைகள் பிணிதீர்க்க
கடைக்கண்தானும் மறுத்து நின்றாள்!
பொறுமையின் எல்லைக்கு பொறுமை போக
பொங்கிய பிள்ளைகள் வீட்டைப் பொசுக்க
ஓடி வந்து (என்) கால் பணிந்தாள்
ஓய வைக்க உதவிகேட்டாள்!
“உம்வீட்டுப் பிரச்சினையிது
உம்பாட்டில் தீருமென”
கூறவந்த நாவடக்கி
நாகரீகமாய் நான் மறுக்க
நடையைக் கட்டினாள் நகரெங்கும்!
தெருத்தெருவாய் சென்று நின்று
கண்கள் வளி நீர் வடித்து
இரத்து நின்றாள் பிச்சைக்கு!
முன்னர் உரைத்தமொழி மறந்து
கண்ணீர் சுரந்தழுதாள் உதவிக்கு!
ஆயினும்,
விதைத்த வினை அறுவடை ஆகையில்
ஆண்டவன் உதவினும்
ஆகப்போவது என்ன?
(இது சில ஆண்டுகளிற்குமுன் இடம்பெற்ற அரசியல் நிலவரத்தை குறித்து எழுதியது. தற்போதும் இது பொருந்தத்தான் செய்கிறது... அன்று தலைவி... இன்று தலைவன். அவ்வளவுதான் வித்தியாசம். )
அயல் வீட்டில் தினம் சண்டை
அடிதடியால் பெரும் தொல்லை!
தலைவிபோடும் கூக்குரல்கள்
தலையிடியாய் அயலெங்கும்!
தட்டிக்கேட்க எட்டிப்பார்த்தேன் - கண்களால்
வெட்டிப்பார்த்து குட்டுவைத்தாள்,
“உள்வீட்டு விடயமிது
உம்பாட்டில் கிடவுமென”.
வாய்மூடி மீண்டு வந்தேன்
வாய்ப்புவரக் காத்திருந்தேன்.
மாற்றாந்தாய் மனப்பான்மையொடு
மறுகிநின்றாள் மக்களோடு
மாற்றமின்றி தினந்தோறும்
நீண்டு சென்றது அடிதடிகள்!
பஞ்சம் வீட்டில் வலைவிரிக்க
பகட்டாய் ஊருலா சென்று வந்தாள்!
பசித்த பிள்ளைகள் பிணிதீர்க்க
கடைக்கண்தானும் மறுத்து நின்றாள்!
பொறுமையின் எல்லைக்கு பொறுமை போக
பொங்கிய பிள்ளைகள் வீட்டைப் பொசுக்க
ஓடி வந்து (என்) கால் பணிந்தாள்
ஓய வைக்க உதவிகேட்டாள்!
“உம்வீட்டுப் பிரச்சினையிது
உம்பாட்டில் தீருமென”
கூறவந்த நாவடக்கி
நாகரீகமாய் நான் மறுக்க
நடையைக் கட்டினாள் நகரெங்கும்!
தெருத்தெருவாய் சென்று நின்று
கண்கள் வளி நீர் வடித்து
இரத்து நின்றாள் பிச்சைக்கு!
முன்னர் உரைத்தமொழி மறந்து
கண்ணீர் சுரந்தழுதாள் உதவிக்கு!
ஆயினும்,
விதைத்த வினை அறுவடை ஆகையில்
ஆண்டவன் உதவினும்
ஆகப்போவது என்ன?
(இது சில ஆண்டுகளிற்குமுன் இடம்பெற்ற அரசியல் நிலவரத்தை குறித்து எழுதியது. தற்போதும் இது பொருந்தத்தான் செய்கிறது... அன்று தலைவி... இன்று தலைவன். அவ்வளவுதான் வித்தியாசம். )