இளசு
03-07-2008, 07:48 PM
நிலமகள் பரமபதம்
அறிவியல் மைல்கல் - 32
ஜேம்ஸ் ஹட்டன் -James HUTTON ( 1726-97)
----------------------------------
அ.மை. - 31 புனல் - இங்கே:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14955
--------------------------------------------
நிலத்தாயை முதன்முதலாய் ஆழமாய் புரியத் துணிந்த
முதல் மகன் ஜேம்ஸ் ஹட்டன்.
அதனாலேயே நவீன நிலவியலின் ( Geology) முதல் மாணவன் ஆனார் ஹட்டன்.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்தில் பிறந்தார்.
பிரான்ஸ், நெதர்லாந்து என பல தேசங்களில் படித்தார்.
அம்மோனியம் குளோரைடு உப்பு செய்து விற்றுப் பிழைத்தார்.
வாய்க்கால்கள், விவசாய புது உத்திகள், நீராவி இயந்திரம் என பல கலைகளில் ஆர்வம் கொண்டார்.
ஆனாலும், பல்கலைக்கழகம் எதிலும் பதவியில் இருந்தவர் அல்லர் ஹட்டன்.
பல்துறை பரிச்சயம், ஆர்வம் கொண்ட ஹட்டனின் முதல் கவனம் -
நாம் தினம் மிதிக்கும் நிலத்தாய் மீதே!
நாம் அனைவரும் காட்சித்தெறிப்பில் ரசிக்கும் நிலப்பரப்பை
ஹட்டன் யோசித்து, யூகித்து - அகழ்ந்து அறிய முயன்றார்..
புயல், வெள்ளம், பூமி அதிர்ச்சி, எரிமலை.....
இயற்கையின் சீற்றங்கள் எல்லாம் பேரிடர், பேரழிவு சக்திகளே...!
அரித்து, அழித்து, புரட்டி, இழுத்துப்போடும் வில்லன்களாய்த்தான் முதல் பார்வையில் அவை தோன்றும்..
ஆனாலும் அவையின்றி, தாவரம் வளரும் சத்துமண் உருவாகாது.
தாவரங்கள் இல்லையென்றால், மிருகம், மனிதன் வாழ்வது இங்கேது?
இப்படி இயற்கையின் அழிச்சாட்டியங்கள் எல்லாம் -
எப்போதும் ஒருவழி நிகழ்வே என்றால்.....
எல்லா நிலமும் கடலுக்குள் ஒருநாள்..
எல்லா உயிர்களுக்கும் முடிவாய் அந்நாள்..!
அப்படி ஒரு வழியாய் இயற்கை பயணித்து
ஒருவழியாய் உயிர்கள் அழியாது இருக்க
இயற்கையோ, இறையோ ஓர் உள்திட்டம் - உன்னதத் திட்டம் வைத்திருக்கவேண்டும்!
அத்திட்டப்படி, அரிபட்டு அழிந்து ஒரு வழியாய் கடலுக்குள் போன நிலமெல்லாம்
மறுவழியாய் மீண்டு நிலமாகி, சுழற்சிக்கு வர வேண்டும்..
அப்படி வந்தால்தான் உயிர்ப்பயணம் நிலப்பரப்பில் தொடர முடியும்..
ஆம், நிச்சயம் நிலச்சுழற்சி பயன்பாட்டில் இருக்கிறது.
அப்படியானால் அச்சுழற்சியின் சுவடுகளும் தேடினால் தென்படவேண்டும்..
இதுதான் ஹட்டனின் நிலச்சுழற்சிக் கோட்பாடு!
மண்ணாய், மணலாய் மழைவெள்ளம் அரித்து ஆற்றோடு கொண்டுபோய்
கடல் மடியில் கொட்ட.....
ஆழ்மடியில் அம்மண் கெட்டிப்பட்டு, படிமங்களாகி, பாறைகளாய் இறுக...
இறுகிய பாறை நிலங்கள் மறுபக்கம் கடல்மீறி மீண்டும் நிலமாக..
யுகம் யுகமாய் நிகழும் நிலம்-கடல் பற்று-வரவுக் கணக்கு இது!
அது சரி..
அடிக்கடலில் அடுப்பு மூட்டி, அழுத்தமும் கொடுத்தவர் யார்?
யார் உலை வைத்து கொதிக்கவைத்து அழுத்தி மூடி
இந்தச் சர்க்கரைத் துகள்களை மைசூர்பாகுகளாக்கினார்கள்?
ஹட்டனின் இக்கோட்பாடு -
இன்னோர் உண்மைக்கு நம்மை இட்டுச்சென்றது..
பூமியின் உட்சுளை ஓர் அக்கினிக் குழம்பு..
அங்கே சூரியனை விடவும் வெப்பம் உண்டு..
பொங்கும் அழுத்தம் உண்டு..
இப்படி மணலைப் பாறையாக்குவது மட்டுமன்றி,
எரிமலை, நிலநடுக்கம், தனிம ஆறு என இன்னும் பல பிரமாண்டங்களுக்கும்
பூமியின் உட்கொதிப்பே ஆதாரம் என்ற உண்மை பின்னாளில் உறுதியானது..
எனவே கண்டங்களை கடலுக்குள் இழப்பதும்,
மீண்டும் வேறு புதிய கண்டங்களை மீட்பதுமாய்
ஒரு '' பரிபூரண'' சுழற்சி பரமபதமாய் ஆடுகிறாள் நிலமகள்..
ஆங்கிலத்தில் சொல்வார்கள்:
'' No vestige of a beginning; No prospect of an end''.
ஆதியின் சுவடுகளும் இல்லை, அந்தத்தின் அறிகுறியும் இல்லை!
என்றோ தொடங்கி, இன்றும் தொடர்ந்து,
என்று முடியும் என எவரும் அறியா பிரம்மாண்ட பரமபதம்..
இதை அன்றே யூகித்துச் சொன்ன ஹட்டனை
இம்மைல்கல் நாயகராக்கியது சாலப்பொருத்தமே.. இல்லையா நண்பர்களே?
அறிவியல் மைல்கல் - 32
ஜேம்ஸ் ஹட்டன் -James HUTTON ( 1726-97)
----------------------------------
அ.மை. - 31 புனல் - இங்கே:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14955
--------------------------------------------
நிலத்தாயை முதன்முதலாய் ஆழமாய் புரியத் துணிந்த
முதல் மகன் ஜேம்ஸ் ஹட்டன்.
அதனாலேயே நவீன நிலவியலின் ( Geology) முதல் மாணவன் ஆனார் ஹட்டன்.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்தில் பிறந்தார்.
பிரான்ஸ், நெதர்லாந்து என பல தேசங்களில் படித்தார்.
அம்மோனியம் குளோரைடு உப்பு செய்து விற்றுப் பிழைத்தார்.
வாய்க்கால்கள், விவசாய புது உத்திகள், நீராவி இயந்திரம் என பல கலைகளில் ஆர்வம் கொண்டார்.
ஆனாலும், பல்கலைக்கழகம் எதிலும் பதவியில் இருந்தவர் அல்லர் ஹட்டன்.
பல்துறை பரிச்சயம், ஆர்வம் கொண்ட ஹட்டனின் முதல் கவனம் -
நாம் தினம் மிதிக்கும் நிலத்தாய் மீதே!
நாம் அனைவரும் காட்சித்தெறிப்பில் ரசிக்கும் நிலப்பரப்பை
ஹட்டன் யோசித்து, யூகித்து - அகழ்ந்து அறிய முயன்றார்..
புயல், வெள்ளம், பூமி அதிர்ச்சி, எரிமலை.....
இயற்கையின் சீற்றங்கள் எல்லாம் பேரிடர், பேரழிவு சக்திகளே...!
அரித்து, அழித்து, புரட்டி, இழுத்துப்போடும் வில்லன்களாய்த்தான் முதல் பார்வையில் அவை தோன்றும்..
ஆனாலும் அவையின்றி, தாவரம் வளரும் சத்துமண் உருவாகாது.
தாவரங்கள் இல்லையென்றால், மிருகம், மனிதன் வாழ்வது இங்கேது?
இப்படி இயற்கையின் அழிச்சாட்டியங்கள் எல்லாம் -
எப்போதும் ஒருவழி நிகழ்வே என்றால்.....
எல்லா நிலமும் கடலுக்குள் ஒருநாள்..
எல்லா உயிர்களுக்கும் முடிவாய் அந்நாள்..!
அப்படி ஒரு வழியாய் இயற்கை பயணித்து
ஒருவழியாய் உயிர்கள் அழியாது இருக்க
இயற்கையோ, இறையோ ஓர் உள்திட்டம் - உன்னதத் திட்டம் வைத்திருக்கவேண்டும்!
அத்திட்டப்படி, அரிபட்டு அழிந்து ஒரு வழியாய் கடலுக்குள் போன நிலமெல்லாம்
மறுவழியாய் மீண்டு நிலமாகி, சுழற்சிக்கு வர வேண்டும்..
அப்படி வந்தால்தான் உயிர்ப்பயணம் நிலப்பரப்பில் தொடர முடியும்..
ஆம், நிச்சயம் நிலச்சுழற்சி பயன்பாட்டில் இருக்கிறது.
அப்படியானால் அச்சுழற்சியின் சுவடுகளும் தேடினால் தென்படவேண்டும்..
இதுதான் ஹட்டனின் நிலச்சுழற்சிக் கோட்பாடு!
மண்ணாய், மணலாய் மழைவெள்ளம் அரித்து ஆற்றோடு கொண்டுபோய்
கடல் மடியில் கொட்ட.....
ஆழ்மடியில் அம்மண் கெட்டிப்பட்டு, படிமங்களாகி, பாறைகளாய் இறுக...
இறுகிய பாறை நிலங்கள் மறுபக்கம் கடல்மீறி மீண்டும் நிலமாக..
யுகம் யுகமாய் நிகழும் நிலம்-கடல் பற்று-வரவுக் கணக்கு இது!
அது சரி..
அடிக்கடலில் அடுப்பு மூட்டி, அழுத்தமும் கொடுத்தவர் யார்?
யார் உலை வைத்து கொதிக்கவைத்து அழுத்தி மூடி
இந்தச் சர்க்கரைத் துகள்களை மைசூர்பாகுகளாக்கினார்கள்?
ஹட்டனின் இக்கோட்பாடு -
இன்னோர் உண்மைக்கு நம்மை இட்டுச்சென்றது..
பூமியின் உட்சுளை ஓர் அக்கினிக் குழம்பு..
அங்கே சூரியனை விடவும் வெப்பம் உண்டு..
பொங்கும் அழுத்தம் உண்டு..
இப்படி மணலைப் பாறையாக்குவது மட்டுமன்றி,
எரிமலை, நிலநடுக்கம், தனிம ஆறு என இன்னும் பல பிரமாண்டங்களுக்கும்
பூமியின் உட்கொதிப்பே ஆதாரம் என்ற உண்மை பின்னாளில் உறுதியானது..
எனவே கண்டங்களை கடலுக்குள் இழப்பதும்,
மீண்டும் வேறு புதிய கண்டங்களை மீட்பதுமாய்
ஒரு '' பரிபூரண'' சுழற்சி பரமபதமாய் ஆடுகிறாள் நிலமகள்..
ஆங்கிலத்தில் சொல்வார்கள்:
'' No vestige of a beginning; No prospect of an end''.
ஆதியின் சுவடுகளும் இல்லை, அந்தத்தின் அறிகுறியும் இல்லை!
என்றோ தொடங்கி, இன்றும் தொடர்ந்து,
என்று முடியும் என எவரும் அறியா பிரம்மாண்ட பரமபதம்..
இதை அன்றே யூகித்துச் சொன்ன ஹட்டனை
இம்மைல்கல் நாயகராக்கியது சாலப்பொருத்தமே.. இல்லையா நண்பர்களே?