சுஜா
03-07-2008, 11:42 AM
புலம்பெயர்ந்த தேவதையின் கதை
அவள் பெரிதாய் ஒன்றும்
கேட்டதில்லை.
மழைக்கால வெல்வெட் பூச்சிகளும்,
தான் வளர்க்கும் கிளிக்கு ஒரு ஆப்பிளையும் ,
கயிற்று உஞ்சலையும் மட்டுமே கேட்டிருக்கிறாள் .
பூக்களை காட்டிலும்
புதிய புத்தகத்தின் வாசனையே அவளுக்கு
பிடித்திருந்தது .
மயிலுக்கு வலிக்கும் என்று,
அரசயிலையையும் ,ஆவரம் பூக்களையும் .... மட்டும் புத்தகத்தில் பாடம் செய்வவள்.
உமத்தன்காயை சீப்பாக்கியவள்.
நெல்லி தின்ற தொண்டையில் ,
நீர்பருக்ச்சொல்லி வேதிவினை நிகழ்த்திகாட்டியவள்.
இன்னும் நிறைய மாயங்கள்
நிகழ்த்திக்காட்டியவள்.
அவளின் ஒவ்வொரு பிறந்தநாளன்று,
ஒரு ரகசிய கேசரிதுண்டு எனைவந்து சேரும் .
பின் ஒருநாள் தலை குனிந்தால்(வைக்கப்பட்டாள் )
அதன் பிறகு யாரையும் நிமிர்ந்து பார்ப்பதில்லை .
என்னை மட்டும் தராசின் முள்போல்
தயங்கி தயங்கி பார்ப்பாள்.
பள்ளியின் குத்தகை காலம் முடிவடைந்தது .
அவளும் நானும் வேறு வேறு திசையில் புலம்பெயர்ந்தோம் .
சார்பியல் தத்துவத்திற்கினங்க
வருடங்கள் வேகமாக ஊர்ந்து விட்டது.......
மறந்து போன அவளின்,
பழைய தொலைபேசி எண்கள் ,
நிகழ்தகவாடியும் கைக்கெட்டவில்லை.
என்னிடம் இருப்பதெல்லாம்,
அவளுக்காக எழுதி, கொடுக்காமல் பத்திரபடுத்தியிருகும்
எழுத்துபிளைகளுடன் கூடிய காதல் கடுதாசிகள்தான்.
_____________________________________________
அன்புடன் சுஜா
அவள் பெரிதாய் ஒன்றும்
கேட்டதில்லை.
மழைக்கால வெல்வெட் பூச்சிகளும்,
தான் வளர்க்கும் கிளிக்கு ஒரு ஆப்பிளையும் ,
கயிற்று உஞ்சலையும் மட்டுமே கேட்டிருக்கிறாள் .
பூக்களை காட்டிலும்
புதிய புத்தகத்தின் வாசனையே அவளுக்கு
பிடித்திருந்தது .
மயிலுக்கு வலிக்கும் என்று,
அரசயிலையையும் ,ஆவரம் பூக்களையும் .... மட்டும் புத்தகத்தில் பாடம் செய்வவள்.
உமத்தன்காயை சீப்பாக்கியவள்.
நெல்லி தின்ற தொண்டையில் ,
நீர்பருக்ச்சொல்லி வேதிவினை நிகழ்த்திகாட்டியவள்.
இன்னும் நிறைய மாயங்கள்
நிகழ்த்திக்காட்டியவள்.
அவளின் ஒவ்வொரு பிறந்தநாளன்று,
ஒரு ரகசிய கேசரிதுண்டு எனைவந்து சேரும் .
பின் ஒருநாள் தலை குனிந்தால்(வைக்கப்பட்டாள் )
அதன் பிறகு யாரையும் நிமிர்ந்து பார்ப்பதில்லை .
என்னை மட்டும் தராசின் முள்போல்
தயங்கி தயங்கி பார்ப்பாள்.
பள்ளியின் குத்தகை காலம் முடிவடைந்தது .
அவளும் நானும் வேறு வேறு திசையில் புலம்பெயர்ந்தோம் .
சார்பியல் தத்துவத்திற்கினங்க
வருடங்கள் வேகமாக ஊர்ந்து விட்டது.......
மறந்து போன அவளின்,
பழைய தொலைபேசி எண்கள் ,
நிகழ்தகவாடியும் கைக்கெட்டவில்லை.
என்னிடம் இருப்பதெல்லாம்,
அவளுக்காக எழுதி, கொடுக்காமல் பத்திரபடுத்தியிருகும்
எழுத்துபிளைகளுடன் கூடிய காதல் கடுதாசிகள்தான்.
_____________________________________________
அன்புடன் சுஜா