PDA

View Full Version : தாகூரின் கீதங்கள் - 37 மரணமே எனக்குச் சொல்லிடு -2 !



அகத்தியன்
02-07-2008, 02:09 PM
தாகூரின் கீதங்கள் - 37 மரணமே எனக்குச் சொல்லிடு -2 !
மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



மரணமே ! எனது மரணமே !

உருவாக்கிய

உனது ஏரியின் நீர்மிசை

உஸ்ஸென்று

ஊர்ந்து செல்லும் பாம்புகள் !

சங்க நாதம் கேட்டது,

உன்னுடைய

கழுத்தைச் சுற்றித் தொங்கின

எலும்புகள் !

நெற்றியில் மின்னிடும்

வைரக்கல் !

ஊது குழல்

கீதமிசைக்கும் உன் கையில்

மரணமே !

எனது மரணமே என்று !






ஒதுங்க இடமளித்தப்

பொது இல்லத்தில் நான்

சுறுசுறுப்போ டிருந்தால்

எனை ஊக்கி எழச் செய்வாய் !

அவநம்பிக்கை தனை

நீக்கிடு !

எனது இச்சை வேண்டுதலைக்

கனவுகளாய்

எடுத்துக் கொண்டு நான்

படுக்கையில் சோம்பிக் கிடந்தால்,

இதயத்தைச் சுற்றி

தீப்பொறி பற்றி

பாதி விழிப்புடன் நானிருந்தால்,

சங்கு முழக்கி

உன் மூச்சு ஊதி அழித்திடும் !

என் பிரபு ! அப்போது

விரைந்து வருவேன்

மரணமே ! எனது மரணமே !



************

Original Source: A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023


*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 22,, 2008)]





Copyright:thinnai.com

அறிஞர்
02-07-2008, 02:55 PM
நல்ல பாடல்.. நன்றி அன்பரே..
----
காப்பிரைட் திண்ணை என தெரிவித்துள்ளது...

அப்படியென்றால் அனுமதி வாங்கித்தானே வெளியிடவேண்டும்.

சரியான விதிமுறைகளை திண்ணைக் குழுவிடம் கேட்டுத்தெரிவியுங்கள்.

இன்னும் இருநாட்கள் இங்கு இருக்கும்.
பின் அனுமதி பெற்றால் இங்கு இருக்கும்.
இல்லையென்றால் இந்த பதிவு நீக்கப்படும்.

அகத்தியன்
03-07-2008, 09:12 AM
இதில் எந்த வித தவறும் இருப்பதாக எனக்கு படவில்லை. நான் யாருடைய படைப்பையும் என்னுடைய பெயரில் வெளிடவில்லையே?
இதில் என்ன Tஅவறு இருக்கின்றTஉ அறிஞரே?