எஸ்.எம். சுனைத் ஹஸனீ
02-07-2008, 05:49 AM
கொட்டும் மழையில்
கவிதை தெறிக்கிறது
கொளுத்தும் வெயிலில்
கவிதை கொப்பளிக்கிறது
அதிகாலைக் கதிரவனில்
கவிதை உதிக்கிறது
தூரத்தெரியும் விண்மீன்களில்
கவிதை ஜொலிக்கிறது
சுழலும் மின் விசிறியில்
கவிதை வீசுகிறது
எரியும் தெருவிளக்கில்
கவிதை பிரகாசிக்கிறது
வீட்டு ரோஜாச்செடியில்
கவிதை மலர்கிறது
பழுத்த மாங்கனியில்
கவிதை இனிக்கிறது
சுளிக்கும் தாய் முகத்தில்
கவிதை புன்னகைக்கிறது
சுற்றியுள்ள செடி கொடிகளில்
கவிதை மணக்கிறது
ரூபாய் நோட்டுகளில் மட்டும்
காந்திதான் சிரிக்கிறார்.
கவிதையும் சிரிக்க வில்லை
கவிஞனும் சிரிக்கவில்லை.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmail.com
கவிதை தெறிக்கிறது
கொளுத்தும் வெயிலில்
கவிதை கொப்பளிக்கிறது
அதிகாலைக் கதிரவனில்
கவிதை உதிக்கிறது
தூரத்தெரியும் விண்மீன்களில்
கவிதை ஜொலிக்கிறது
சுழலும் மின் விசிறியில்
கவிதை வீசுகிறது
எரியும் தெருவிளக்கில்
கவிதை பிரகாசிக்கிறது
வீட்டு ரோஜாச்செடியில்
கவிதை மலர்கிறது
பழுத்த மாங்கனியில்
கவிதை இனிக்கிறது
சுளிக்கும் தாய் முகத்தில்
கவிதை புன்னகைக்கிறது
சுற்றியுள்ள செடி கொடிகளில்
கவிதை மணக்கிறது
ரூபாய் நோட்டுகளில் மட்டும்
காந்திதான் சிரிக்கிறார்.
கவிதையும் சிரிக்க வில்லை
கவிஞனும் சிரிக்கவில்லை.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmail.com