எஸ்.எம். சுனைத் ஹஸனீ
30-06-2008, 05:37 AM
உனக்கும் எனக்குமான
இடைவெளிக்குள் அமர்ந்து
பேய்ச்சிரிப்பு சிரிக்கிறது வெற்றிடம்
அன்றொரு நாள்
யாருமற்ற அரவெளியில்
அன்னியோன்மாய் நாமிருவரும்
கிடக்கையில் இதே வெற்றிடம்
தூரத்தில் நின்று
முறைத்துக்கொண்டிருந்தது
நீ அமர்ந்தாடிய
ஊஞ்சலில்
குடித்து வைத்த
தேநீர் குவளையில்
இதெல்லாம் கல்யாணத்துப் பின்னாடி
என்று சொல்லியும் கேளாமல்
அவசர அவசரமாய்
அம்மா வருவதற்கு முன்பாய்
கூட்டிப் பெருக்கிய வீட்டின்
பளிங்குத்தரையில் எல்லாம்
வெற்றிடம் நர்த்த நாட்டியம்
புரிந்துகொண்டிருக்கிறது.
கண்ணுக்குத்தெரியும் ஒரு புவியையும்
தெரியாத ஏழு புவிகளையும்
ஆக்கிரமித்தும்
ஏதோ நாம்தான் அதற்கு
குந்தகம் செய்தோமென்று
வரிந்துகட்டிக்கொண்டு
என்னிடம் மல்லுக்கட்டுவதைத்தான்
புரியமுடியவில்லை
என்பதையாச்சும்
அதற்குணர்த்த என்னிடம்
மொழியுமில்லை.
முன்பைப் போல்
நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம்
சடாரென்று கட்டிலில் சாய்ந்து
ஜன்னல் கதவு திறந்து
ஆடை மாற்றி
வீட்டுத்தொலைபேசி உட்பட
அனைத்தையும் செயலிழக்கி
தனிமையில் இனிமையெல்லாம்
காண முடிவதில்லை
மூன்றாவது கையாய்
சதா என்னுடன் அது
தொங்கிக்கொண்டிருக்கும் பயத்தில்
ஓராயிரம் பாட்டிற்குப்பின்
ஒரு வழியாய்
நம் திருமணத்திற்கான
நிச்சயத்தாம்பூலம்
பரிமாற்றப்படும் போது
அது இன்னும் ஆனந்தம் கொண்டிருந்ததை
அப்போதைக்கு புரியமுடியா புத்தி
சின்னஞ்சிறு விஷயத்திற்கெல்லாம்
பெட்டியைத் தூக்கிக்கொண்டு
நீ நின்ற பொழுது
புரிந்து கொண்டது.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி.
junaidhasani@gmail.com
இடைவெளிக்குள் அமர்ந்து
பேய்ச்சிரிப்பு சிரிக்கிறது வெற்றிடம்
அன்றொரு நாள்
யாருமற்ற அரவெளியில்
அன்னியோன்மாய் நாமிருவரும்
கிடக்கையில் இதே வெற்றிடம்
தூரத்தில் நின்று
முறைத்துக்கொண்டிருந்தது
நீ அமர்ந்தாடிய
ஊஞ்சலில்
குடித்து வைத்த
தேநீர் குவளையில்
இதெல்லாம் கல்யாணத்துப் பின்னாடி
என்று சொல்லியும் கேளாமல்
அவசர அவசரமாய்
அம்மா வருவதற்கு முன்பாய்
கூட்டிப் பெருக்கிய வீட்டின்
பளிங்குத்தரையில் எல்லாம்
வெற்றிடம் நர்த்த நாட்டியம்
புரிந்துகொண்டிருக்கிறது.
கண்ணுக்குத்தெரியும் ஒரு புவியையும்
தெரியாத ஏழு புவிகளையும்
ஆக்கிரமித்தும்
ஏதோ நாம்தான் அதற்கு
குந்தகம் செய்தோமென்று
வரிந்துகட்டிக்கொண்டு
என்னிடம் மல்லுக்கட்டுவதைத்தான்
புரியமுடியவில்லை
என்பதையாச்சும்
அதற்குணர்த்த என்னிடம்
மொழியுமில்லை.
முன்பைப் போல்
நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம்
சடாரென்று கட்டிலில் சாய்ந்து
ஜன்னல் கதவு திறந்து
ஆடை மாற்றி
வீட்டுத்தொலைபேசி உட்பட
அனைத்தையும் செயலிழக்கி
தனிமையில் இனிமையெல்லாம்
காண முடிவதில்லை
மூன்றாவது கையாய்
சதா என்னுடன் அது
தொங்கிக்கொண்டிருக்கும் பயத்தில்
ஓராயிரம் பாட்டிற்குப்பின்
ஒரு வழியாய்
நம் திருமணத்திற்கான
நிச்சயத்தாம்பூலம்
பரிமாற்றப்படும் போது
அது இன்னும் ஆனந்தம் கொண்டிருந்ததை
அப்போதைக்கு புரியமுடியா புத்தி
சின்னஞ்சிறு விஷயத்திற்கெல்லாம்
பெட்டியைத் தூக்கிக்கொண்டு
நீ நின்ற பொழுது
புரிந்து கொண்டது.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி.
junaidhasani@gmail.com