சிவா.ஜி
29-06-2008, 12:43 PM
நேற்று இரவு தோழியுடன் 'சாட்'டிக்கொண்டிருக்கும்போதே மின்சாரம் தடைபட்டு எரிச்சலில் விசைப்பலகையைக் குத்தியதில்..ஆல்ட் பொத்தான்
சரியாக வேலை செய்யவில்லை. இன்று மீண்டும் அலுவலகம் முடிந்ததும், அரக்க பரக்க வீட்டுக்கு வந்த வித்யா..அம்மாவின் காஃபியை அறைக்கே கொண்டுவரும்படி கூறிவிட்டு அவசரமாய் முகம் கைகால் கழுவிக்கொண்டு கணிணியியை உயிர்ப்பித்தாள். அவள் அவசரத்துக்கும் காரணமிருக்கிறது. நேற்றிரவு மின்சாரத் தடை ஏற்படுவதற்கு சில நொடிகள் முன்புதான் சாட்டில் வந்த தோழி "டீ வித்யா...உனக்கு ஒரு அதிர்ச்சியான செய்தியை சொல்லப் போறேன்....இல்ல இல்ல.....காட்டப்போறேன்...என்று உரையாட ஆரம்பித்த உடனேயே தட்டச்சிக் காட்டியதும்....அதிர்ந்து போய்விட்டாள்..என்ன ஏது என்று கேட்பதற்குள் மின்சாரம் பழிவாங்கிவிட்டது.
அன்று முழுவதும் அது என்ன அதிர்ச்சியான செய்தியாக இருக்கும் என்று யோசித்து யோசித்துக் களைத்துப்போய்விட்டாள். மரணச் செய்தியிலிருந்து...அத்தனைக் கோணங்களிலும் யோசித்தும் பிடிகிட்டவில்லை.
அலுவலகத்தில் கணிணி வசதியிருந்தும் அதை தன் அலுவலகப் பணிகளுக்கு மட்டுமே உபயோகிப்பதைக் கொள்கையாகக் கொண்டவள். அதனால்தான் மாலையில் அவசரமாய் வீடு திரும்பியதும் கணிணியை திறக்க இத்தனை பரபரப்பு. உரையாடல் சாளரத்தைத் திறந்து தோழி இருக்கிறாளா என்று ஆர்வத்துடன் பார்த்தாள்.
இருக்கிறாள். உடனே அவளை அழைக்க தட்டச்சினாள். உடனடியாக அவளது பதில் மின்னியது.
"கொஞ்சம் காத்திரு....ஒரு படத்தை இணைக்கிறேன். ஆர்குட்டில் வெளியிட்டிருக்கிறார்கள்...என்று....சொல்லிவிட்டு...அதிகம் காக்க வைக்காமல் சுட்டியைத் தட்டிவிட்டாள். உள்ளுக்குள் பயந்துகொண்டே அந்த சுட்டியை தொட்டதும்.....அதிர்ந்துவிட்டாள். அந்த நேரம் பார்த்து மிகச் சரியாக அவளுடைய அம்மாவும் காபியுடன் ஆஜராக...அவரும் அதைப் பார்த்துவிட்டு அதிர்ந்தார். ஒரு படமும்...அதன்கீழ் சில வரிகளும் இருந்தது. படத்தில் அரைகுறை ஆடையுடன் வித்யா ஒரு வெளிநாட்டு ஆளுடன் மிக நெருக்கமாக இருப்பதைப்போல கிராஃபிக்ஸில் அமைத்திருந்தார்கள். அந்த வரிகளில்...வித்யாவே அழைப்பதைப்போல சில வாசகங்களை அமைத்து....அவளை ஒரு கால்கேர்ளாக காட்டியிருந்தது. இதில் இன்னொரு கொடுமையும்....அவளுடைய உண்மையான முகவரியும் கீழே கொடுத்திருந்தது.
வித்யாவுக்கு மயக்கமே வரும்போல ஆகிவிட்டது. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவளை எரித்துவிடுவதைப் போலப் பார்த்த அம்மாவின் பார்வை வேறு அவளை சிதைத்துக்கொண்டிருந்தது.
"என்னடிக் கன்றாவி இது....அதான் ஆபீஸ்லருந்து வந்ததும் வராததுமா இத்தனைநாளா இதுல உக்காந்துக்கறயா? அய்யோக் கடவுளே...இன்னும் என்னக் கொடுமையெல்லாம் பாக்க வேண்டியிருக்குதோ...? பொண்ணு பாத்துட்டு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சம்மதம் சொல்லிட்டுப் போய் நாலுநாள்கூட ஆகலியேடி. இந்தக் கன்றாவியை அவங்களோ...இல்ல அவங்க சொந்தக்காரங்க யாராவதோ பாத்தாங்கன்னா நம்ம மானம் மரியாதையெல்லாம் வீதிக்கு வந்துடுமேடி...பாவிப்பொண்ணே....என்னடி இதெல்லாம்" ஆவேசமாய் ஆரம்பித்து அழுகையில் முடித்தாள் வித்யாவின் அம்மா.
யார் இதை வெளியிட்டது என்று பார்த்தாள். கீர்த்தி என்று பெயர் இருந்தது. 'அடப்பாவி இவனா...?' என்று அலறினாள் வித்யா.
"'யாருடி அவன்?"
'அம்மா இந்த ராஸ்கல் நான் உறுப்பினரா இருக்கற அமைப்புல உறுப்பினனா இருந்தான். இதை மாதிரி சில வேண்டாத பதிவுகளைப் போட்டதால அவனை அந்த அமைப்புலருந்தே வெளியே அனுப்பிட்டாங்க. அந்த பதிவுக்கு என்னோட கண்டனத்தை சொல்லியிருந்தேன். பாவி அதுக்குப் பழிவாங்க...நான் தெரியாம எப்பவோ இணையத்துல போட்ட இந்தப் படத்தை இப்படி பண்ணிருக்கான்...."
" அடிப்பாவி பொண்னே...இதை பொய்ன்னு எத்தனை பேர்கிட்ட சொல்லிக்கிட்டிருக்க முடியுண்டி? உன் தலையில நீயே மண்ணைவாரி போட்டுக்கிட்டியே..." அரற்றிக்கொண்டு புலம்பிய அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்த வித்யா...சட்டென்று எழுந்து நின்று,
" அம்மா...பொலம்பாத....எத்தனை பேர்கிட்ட சொல்ல முடியுன்னு கேட்டியே...அதுக்கெல்லாம் அவசியமில்ல. ஒரே ஒருத்தர்கிட்ட சொன்னா போதும். இரு இதோ வந்துடறேன். " என்று சொல்லிவிட்டு....அம்மாவின் சம்மதத்தை எதிர்பார்க்காமல், ...வெளியேறி தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு சற்றுத்தொலைவில் இருக்கும் மாப்பிள்ளை வீட்டுக்குப் புறப்பட்டாள்.
கவுதம்மை அலைபேசியில் அழைத்தாள். தன்னை வந்து சந்திக்கும்படி சொல்லிவிட்டு அவனுக்காக அந்த ப்ரௌஸிங் செண்டரில் காத்துக்கொண்டிருந்தாள். கவுதம் வந்ததும், உள்ளே போவதற்குமுன் அவனிடம் எல்லாவற்றையும் சொன்னாள். அனைத்தையும் கேட்ட கவுதம் அவளது களங்கமில்லா முகத்தைப் பார்த்து உறுதியோடு சொன்னான்.
"வித்யா...உன்னை எப்ப பிடிச்சிருக்குன்னு சம்மதம் சொல்லிட்டு வந்தேனோ அன்னையிலருந்து...இல்ல...அந்த நிமிஷத்துலருந்து நீதான் என் மனைவின்னு முடிவு பண்ணிட்டேன். உனக்கு ஒரு பிரச்சனைன்னா அது எனக்கும்தான். நீ சொல்ற இந்த விஷயங்கள் இப்ப நிறைய நடந்துகிட்டிருக்கு. அந்த கீர்த்தி மாதிரியான இணைய பொறுக்கிகள் நிறைய இருக்காங்க. நீ எதார்த்தமா போட்ட படத்தை அவன் கீழ்த்தரமா உபயோகப் படுத்திக்கிட்டான். இப்ப என்னை நீ இந்த இடத்துக்கு கூப்பிட்டது கூட அந்தப் படத்தை எனக்குக் காட்டனுங்கறதாலத்தான்னு எனக்குத் தெரியும். ஆனா அதுக்கு அவசியமில்ல. உன்னை நான் முழுசா நம்பறேன். நீ கவலைப் படாம வீட்டுக்குப் போ. நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும்." தீர்க்கமாய் சொன்னவனை கண்களில் கண்ணீர் மல்க பார்த்தவள் நிம்மதியாக வீட்டுக்குத் திரும்பினாள்.
வீட்டுக்கு வந்தவள் தன் அம்மாவிடம் நடந்ததையெல்லாம் சொன்னதும் முகமெல்லாம் பிரகாசமாகி..பகவானே நல்ல ஒரு மனுஷனை எங்களுக்கு மாப்பிள்ளையாக்கியிருக்கே...அதுக்கு உனக்கு ஆயிரம் நமஸ்காரம்" என்று நெக்குருகி சொல்லிவிட்டு மகளை உச்சிமோந்தாள்.
அந்த சமயம் தோழியின் அழைப்பு பளிச்சிட்டது. என்ன என்று பார்த்தவள் சந்தோஷமா அதிர்ச்சியா எனத் தெரியாத உணர்வை அடைந்தாள்
"வித்யா...ஒரு ஷாக்கிங் நியூஸ்...அந்தக் கீர்த்தியோட மனைவி தற்கொலை பண்ணிக்கிட்டாங்களாம். இவன் தன் நன்பனுக்கு அனுப்பின கல்யாண போட்டோவுல இருந்த அவனுடைய மனைவியின் படத்தை ரொம்ப அசிங்கமா இன்னொரு ஆள்கூட இணைச்சி அதே ஆர்குட்ல யாரோ போட்டிருக்காங்க...அதைப் பாத்த அவனோட மனைவி..அவமானத்துல விஷத்தைக் குடிச்சிட்டாங்களாம்."
அந்த அப்பாவிப் பெண்ணுக்காக பரிதாபப்படுவதா...இல்லை வினைவிதைத்தவன் அதை அறுவடை செய்ததற்கு
சந்தோஷப்படுவதா....குழப்பமாய் அம்மாவைப் பார்த்தாள் வித்யா. அந்த செய்தியைப் படித்த அவரும்...அர்த்தம் நிறைந்த பார்வையால் வித்யாவைப் பார்த்தார்.
சரியாக வேலை செய்யவில்லை. இன்று மீண்டும் அலுவலகம் முடிந்ததும், அரக்க பரக்க வீட்டுக்கு வந்த வித்யா..அம்மாவின் காஃபியை அறைக்கே கொண்டுவரும்படி கூறிவிட்டு அவசரமாய் முகம் கைகால் கழுவிக்கொண்டு கணிணியியை உயிர்ப்பித்தாள். அவள் அவசரத்துக்கும் காரணமிருக்கிறது. நேற்றிரவு மின்சாரத் தடை ஏற்படுவதற்கு சில நொடிகள் முன்புதான் சாட்டில் வந்த தோழி "டீ வித்யா...உனக்கு ஒரு அதிர்ச்சியான செய்தியை சொல்லப் போறேன்....இல்ல இல்ல.....காட்டப்போறேன்...என்று உரையாட ஆரம்பித்த உடனேயே தட்டச்சிக் காட்டியதும்....அதிர்ந்து போய்விட்டாள்..என்ன ஏது என்று கேட்பதற்குள் மின்சாரம் பழிவாங்கிவிட்டது.
அன்று முழுவதும் அது என்ன அதிர்ச்சியான செய்தியாக இருக்கும் என்று யோசித்து யோசித்துக் களைத்துப்போய்விட்டாள். மரணச் செய்தியிலிருந்து...அத்தனைக் கோணங்களிலும் யோசித்தும் பிடிகிட்டவில்லை.
அலுவலகத்தில் கணிணி வசதியிருந்தும் அதை தன் அலுவலகப் பணிகளுக்கு மட்டுமே உபயோகிப்பதைக் கொள்கையாகக் கொண்டவள். அதனால்தான் மாலையில் அவசரமாய் வீடு திரும்பியதும் கணிணியை திறக்க இத்தனை பரபரப்பு. உரையாடல் சாளரத்தைத் திறந்து தோழி இருக்கிறாளா என்று ஆர்வத்துடன் பார்த்தாள்.
இருக்கிறாள். உடனே அவளை அழைக்க தட்டச்சினாள். உடனடியாக அவளது பதில் மின்னியது.
"கொஞ்சம் காத்திரு....ஒரு படத்தை இணைக்கிறேன். ஆர்குட்டில் வெளியிட்டிருக்கிறார்கள்...என்று....சொல்லிவிட்டு...அதிகம் காக்க வைக்காமல் சுட்டியைத் தட்டிவிட்டாள். உள்ளுக்குள் பயந்துகொண்டே அந்த சுட்டியை தொட்டதும்.....அதிர்ந்துவிட்டாள். அந்த நேரம் பார்த்து மிகச் சரியாக அவளுடைய அம்மாவும் காபியுடன் ஆஜராக...அவரும் அதைப் பார்த்துவிட்டு அதிர்ந்தார். ஒரு படமும்...அதன்கீழ் சில வரிகளும் இருந்தது. படத்தில் அரைகுறை ஆடையுடன் வித்யா ஒரு வெளிநாட்டு ஆளுடன் மிக நெருக்கமாக இருப்பதைப்போல கிராஃபிக்ஸில் அமைத்திருந்தார்கள். அந்த வரிகளில்...வித்யாவே அழைப்பதைப்போல சில வாசகங்களை அமைத்து....அவளை ஒரு கால்கேர்ளாக காட்டியிருந்தது. இதில் இன்னொரு கொடுமையும்....அவளுடைய உண்மையான முகவரியும் கீழே கொடுத்திருந்தது.
வித்யாவுக்கு மயக்கமே வரும்போல ஆகிவிட்டது. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவளை எரித்துவிடுவதைப் போலப் பார்த்த அம்மாவின் பார்வை வேறு அவளை சிதைத்துக்கொண்டிருந்தது.
"என்னடிக் கன்றாவி இது....அதான் ஆபீஸ்லருந்து வந்ததும் வராததுமா இத்தனைநாளா இதுல உக்காந்துக்கறயா? அய்யோக் கடவுளே...இன்னும் என்னக் கொடுமையெல்லாம் பாக்க வேண்டியிருக்குதோ...? பொண்ணு பாத்துட்டு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சம்மதம் சொல்லிட்டுப் போய் நாலுநாள்கூட ஆகலியேடி. இந்தக் கன்றாவியை அவங்களோ...இல்ல அவங்க சொந்தக்காரங்க யாராவதோ பாத்தாங்கன்னா நம்ம மானம் மரியாதையெல்லாம் வீதிக்கு வந்துடுமேடி...பாவிப்பொண்ணே....என்னடி இதெல்லாம்" ஆவேசமாய் ஆரம்பித்து அழுகையில் முடித்தாள் வித்யாவின் அம்மா.
யார் இதை வெளியிட்டது என்று பார்த்தாள். கீர்த்தி என்று பெயர் இருந்தது. 'அடப்பாவி இவனா...?' என்று அலறினாள் வித்யா.
"'யாருடி அவன்?"
'அம்மா இந்த ராஸ்கல் நான் உறுப்பினரா இருக்கற அமைப்புல உறுப்பினனா இருந்தான். இதை மாதிரி சில வேண்டாத பதிவுகளைப் போட்டதால அவனை அந்த அமைப்புலருந்தே வெளியே அனுப்பிட்டாங்க. அந்த பதிவுக்கு என்னோட கண்டனத்தை சொல்லியிருந்தேன். பாவி அதுக்குப் பழிவாங்க...நான் தெரியாம எப்பவோ இணையத்துல போட்ட இந்தப் படத்தை இப்படி பண்ணிருக்கான்...."
" அடிப்பாவி பொண்னே...இதை பொய்ன்னு எத்தனை பேர்கிட்ட சொல்லிக்கிட்டிருக்க முடியுண்டி? உன் தலையில நீயே மண்ணைவாரி போட்டுக்கிட்டியே..." அரற்றிக்கொண்டு புலம்பிய அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்த வித்யா...சட்டென்று எழுந்து நின்று,
" அம்மா...பொலம்பாத....எத்தனை பேர்கிட்ட சொல்ல முடியுன்னு கேட்டியே...அதுக்கெல்லாம் அவசியமில்ல. ஒரே ஒருத்தர்கிட்ட சொன்னா போதும். இரு இதோ வந்துடறேன். " என்று சொல்லிவிட்டு....அம்மாவின் சம்மதத்தை எதிர்பார்க்காமல், ...வெளியேறி தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு சற்றுத்தொலைவில் இருக்கும் மாப்பிள்ளை வீட்டுக்குப் புறப்பட்டாள்.
கவுதம்மை அலைபேசியில் அழைத்தாள். தன்னை வந்து சந்திக்கும்படி சொல்லிவிட்டு அவனுக்காக அந்த ப்ரௌஸிங் செண்டரில் காத்துக்கொண்டிருந்தாள். கவுதம் வந்ததும், உள்ளே போவதற்குமுன் அவனிடம் எல்லாவற்றையும் சொன்னாள். அனைத்தையும் கேட்ட கவுதம் அவளது களங்கமில்லா முகத்தைப் பார்த்து உறுதியோடு சொன்னான்.
"வித்யா...உன்னை எப்ப பிடிச்சிருக்குன்னு சம்மதம் சொல்லிட்டு வந்தேனோ அன்னையிலருந்து...இல்ல...அந்த நிமிஷத்துலருந்து நீதான் என் மனைவின்னு முடிவு பண்ணிட்டேன். உனக்கு ஒரு பிரச்சனைன்னா அது எனக்கும்தான். நீ சொல்ற இந்த விஷயங்கள் இப்ப நிறைய நடந்துகிட்டிருக்கு. அந்த கீர்த்தி மாதிரியான இணைய பொறுக்கிகள் நிறைய இருக்காங்க. நீ எதார்த்தமா போட்ட படத்தை அவன் கீழ்த்தரமா உபயோகப் படுத்திக்கிட்டான். இப்ப என்னை நீ இந்த இடத்துக்கு கூப்பிட்டது கூட அந்தப் படத்தை எனக்குக் காட்டனுங்கறதாலத்தான்னு எனக்குத் தெரியும். ஆனா அதுக்கு அவசியமில்ல. உன்னை நான் முழுசா நம்பறேன். நீ கவலைப் படாம வீட்டுக்குப் போ. நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும்." தீர்க்கமாய் சொன்னவனை கண்களில் கண்ணீர் மல்க பார்த்தவள் நிம்மதியாக வீட்டுக்குத் திரும்பினாள்.
வீட்டுக்கு வந்தவள் தன் அம்மாவிடம் நடந்ததையெல்லாம் சொன்னதும் முகமெல்லாம் பிரகாசமாகி..பகவானே நல்ல ஒரு மனுஷனை எங்களுக்கு மாப்பிள்ளையாக்கியிருக்கே...அதுக்கு உனக்கு ஆயிரம் நமஸ்காரம்" என்று நெக்குருகி சொல்லிவிட்டு மகளை உச்சிமோந்தாள்.
அந்த சமயம் தோழியின் அழைப்பு பளிச்சிட்டது. என்ன என்று பார்த்தவள் சந்தோஷமா அதிர்ச்சியா எனத் தெரியாத உணர்வை அடைந்தாள்
"வித்யா...ஒரு ஷாக்கிங் நியூஸ்...அந்தக் கீர்த்தியோட மனைவி தற்கொலை பண்ணிக்கிட்டாங்களாம். இவன் தன் நன்பனுக்கு அனுப்பின கல்யாண போட்டோவுல இருந்த அவனுடைய மனைவியின் படத்தை ரொம்ப அசிங்கமா இன்னொரு ஆள்கூட இணைச்சி அதே ஆர்குட்ல யாரோ போட்டிருக்காங்க...அதைப் பாத்த அவனோட மனைவி..அவமானத்துல விஷத்தைக் குடிச்சிட்டாங்களாம்."
அந்த அப்பாவிப் பெண்ணுக்காக பரிதாபப்படுவதா...இல்லை வினைவிதைத்தவன் அதை அறுவடை செய்ததற்கு
சந்தோஷப்படுவதா....குழப்பமாய் அம்மாவைப் பார்த்தாள் வித்யா. அந்த செய்தியைப் படித்த அவரும்...அர்த்தம் நிறைந்த பார்வையால் வித்யாவைப் பார்த்தார்.