எஸ்.எம். சுனைத் ஹஸனீ
24-06-2008, 05:30 AM
மாணிக்கங்களும் வைடூரியங்களும்
கண்ணாடிச்சிதறல்களாய் வழி நெடுக,
வலது புறத்தல் வருபவனும்
இடது புறத்தில் செல்பவனும்
கண்டுங்காணாமல்
அவரவர் பாதையில் தொடர்கின்றனர்
நேற்யை சண்டைக்காரர்கள்
நாளை மறுநாள் நினைவு கூற இருக்கும்
நாளைய சண்டைகளை
பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள
கறுப்பு சிவப்பு வெள்ளையென்றும்
மஞ்சள் பச்சை நீலமென்றும்
நிறத்தால் பிறத்திரியப்பட்டவர்களின்
உண்மை நிறம் வெளுக்கத்தொடங்குகிறது
ஏசியே புழுத்துப்போன நாவுகள்
ஆச்சரியமாய் குசலம் விசாரிக்கின்றன
நேற்று இவன் திட்டிய
அவன் கூட்டாளியைப்பற்றியும்
நேற்றைக்கு முன்பு
அதை விட கேவலமாய் அவன் திட்டிய
இவன் கூட்டாளியைப்பற்றியும்
நலம் விசாரிப்புகள் சொச்சமாய்.
ஏய்க்க புதிதாய் இறங்கியிருப்பவனுக்கு
ஏய்ப்பதில் பழம் தின்று கொட்டைபோட்டவன்
ஏய்ப்பதில் மிச்சமிருக்கும் சாகசத்தை
ஏகத்துக்கும் வழங்குகிறான் அறிவுரையாய்.
ஏன்னை ஏய்க்கத்தான் இந்தக்கூப்பாடென்பதை
அறிந்தோ அறிந்தும் அறியாமலோ
பானம் பரிமாறிக்கொண்டிருக்கிறான்
நாளை ஏய்க்கப்பட இருப்பவன்.
இத்தோடு என்சிரச்சேதம்
பதினான்கை தாண்டினாலும்
இன்னும் சிரம் வளர்ந்துகொண்டிதானிருக்கிறது
என்றவனின் கழுத்துக்கு
மாலையணிவிக்கிறான் ஒருவன்
இத்துறைக்கேற்ற துரை நீதானென்று
மெதுவாய் கூட்டம் நகர
மன்னிக்கவும் நகர்த்த ஆரம்பிக்கிறது
சுண்டெலியாய் உட்புகுந்தவர்கள்
பெருச்சாளிகளாய் மாறி
உருள ஆயத்தமாகிறார்கள்
மாணிக்க வைடூரியங்கள்
மாயமாய் மறைந்து விட்டிருந்தன.
இதெல்லாம் போதாதென்று
விழுந்த முப்பத்தாறு மாலைகளில்
இரண்டை காணவில்லையென்று
தங்கள் வலதுகைகளிடம்
தர்க்கித்துக்கொண்டிருப்பதாக ஒரு கேள்வி.
எல்லாம் ஓய்ந்திருந்த மயான அமைதியில்
வெளியே ஊசலாடிக்கொண்டிருந்த
நாய்கள் ஜாக்கிரதை பலகையில்
நாய்களை அடித்துவிட்டு
அரசியல்வாதிகள் என்று எழதிச்சென்றான்
ஒரு வழிப்போக்கன்.
அந்த எச்சரிக்கை மனிதப்பயல்களுக்கா
அல்லது அந்த பலகைக்கா?
என்பதில்தான் எனக்குச்சிக்கல்.
எஸ்.எம்.சுனைத் ஹஸனி.
mahasin2005@yahoo.co.in[/COLOR]
கண்ணாடிச்சிதறல்களாய் வழி நெடுக,
வலது புறத்தல் வருபவனும்
இடது புறத்தில் செல்பவனும்
கண்டுங்காணாமல்
அவரவர் பாதையில் தொடர்கின்றனர்
நேற்யை சண்டைக்காரர்கள்
நாளை மறுநாள் நினைவு கூற இருக்கும்
நாளைய சண்டைகளை
பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள
கறுப்பு சிவப்பு வெள்ளையென்றும்
மஞ்சள் பச்சை நீலமென்றும்
நிறத்தால் பிறத்திரியப்பட்டவர்களின்
உண்மை நிறம் வெளுக்கத்தொடங்குகிறது
ஏசியே புழுத்துப்போன நாவுகள்
ஆச்சரியமாய் குசலம் விசாரிக்கின்றன
நேற்று இவன் திட்டிய
அவன் கூட்டாளியைப்பற்றியும்
நேற்றைக்கு முன்பு
அதை விட கேவலமாய் அவன் திட்டிய
இவன் கூட்டாளியைப்பற்றியும்
நலம் விசாரிப்புகள் சொச்சமாய்.
ஏய்க்க புதிதாய் இறங்கியிருப்பவனுக்கு
ஏய்ப்பதில் பழம் தின்று கொட்டைபோட்டவன்
ஏய்ப்பதில் மிச்சமிருக்கும் சாகசத்தை
ஏகத்துக்கும் வழங்குகிறான் அறிவுரையாய்.
ஏன்னை ஏய்க்கத்தான் இந்தக்கூப்பாடென்பதை
அறிந்தோ அறிந்தும் அறியாமலோ
பானம் பரிமாறிக்கொண்டிருக்கிறான்
நாளை ஏய்க்கப்பட இருப்பவன்.
இத்தோடு என்சிரச்சேதம்
பதினான்கை தாண்டினாலும்
இன்னும் சிரம் வளர்ந்துகொண்டிதானிருக்கிறது
என்றவனின் கழுத்துக்கு
மாலையணிவிக்கிறான் ஒருவன்
இத்துறைக்கேற்ற துரை நீதானென்று
மெதுவாய் கூட்டம் நகர
மன்னிக்கவும் நகர்த்த ஆரம்பிக்கிறது
சுண்டெலியாய் உட்புகுந்தவர்கள்
பெருச்சாளிகளாய் மாறி
உருள ஆயத்தமாகிறார்கள்
மாணிக்க வைடூரியங்கள்
மாயமாய் மறைந்து விட்டிருந்தன.
இதெல்லாம் போதாதென்று
விழுந்த முப்பத்தாறு மாலைகளில்
இரண்டை காணவில்லையென்று
தங்கள் வலதுகைகளிடம்
தர்க்கித்துக்கொண்டிருப்பதாக ஒரு கேள்வி.
எல்லாம் ஓய்ந்திருந்த மயான அமைதியில்
வெளியே ஊசலாடிக்கொண்டிருந்த
நாய்கள் ஜாக்கிரதை பலகையில்
நாய்களை அடித்துவிட்டு
அரசியல்வாதிகள் என்று எழதிச்சென்றான்
ஒரு வழிப்போக்கன்.
அந்த எச்சரிக்கை மனிதப்பயல்களுக்கா
அல்லது அந்த பலகைக்கா?
என்பதில்தான் எனக்குச்சிக்கல்.
எஸ்.எம்.சுனைத் ஹஸனி.
mahasin2005@yahoo.co.in[/COLOR]