எஸ்.எம். சுனைத் ஹஸனீ
19-06-2008, 05:59 AM
நடுநிசிவரை உறக்கமின்றி
அமைதியாய் சுடரும் இரவுவிளக்கில்
பார்வையை குவித்துவைத்திருக்கிறேன்
உடல்மட்டும் இதமாய்
கட்டிலில் முடங்கிக்கிடந்தும்
மனம் எங்கோ
ஊர்மேய்ந்து கொண்டிருக்கிறது
கையருகில் வாய்த்து
பின் நழுவிச்செல்லும் பட்டாம்பூச்சியாய்
சிக்க மறுக்கிறது உறக்கம்
இரவு தீர்ந்தாலும்
சிந்தனைகள் தீர்ந்தபாடில்லை
அதிகாலை அடைந்தபின்
இரவுச்சிந்தனைகளின் மிச்சம்
மீண்டுமொரு முறை மையம் கொள்கிறது
காலைக்கடன்
காக்கைக்குளியல்
அம்மா சுட்ட தோசை
அலுவலகப்பணி
இவைகளுக்கெல்லாம்
நியாயமாய் ஒதுங்கிக்கொண்டு
சமயம் கிடைக்கும்பொழுதெல்லாம்
விக்கிரமாதித்தனின் வேதாளமாய்
சரீரத்திற்குள் உட்புகுந்துகொள்கிறது
தோழனின் புன்னகைக்கு புன்னகைத்து
மாலைத்தேநீர் அருந்தி
முகவரி தேடி அலைந்த ஒருவருக்கு
விலாசம் காட்டி
இப்படி அனிச்சையாய் செயல்கள்
நடந்தேறினாலும்
கவனம் மட்டும்
இரவுச்சிந்தனையில்தான்
குத்திட்டு நிற்கிறது
இரவு வந்தால் உறங்கியாகவேண்டும்
என்ற மானுடவிதிக்காய்
கட்டிலில் சாய்ந்து
நடுநிசிவரை உறக்கமின்றி
அமைதியாய் சுடரும் இரவுவிளக்கில்
பார்வையை குவித்துவைத்திருக்கிறேன்
உடல்மட்டும் இதமாய்
கட்டிலில் முடங்கிக்கிடந்தும்
மனம் எங்கோ
ஊர்மேய்ந்து கொண்டிருக்கிறது
கையருகில் வாய்த்து
பின் நழுவிச்செல்லும் பட்டாம்பூச்சியாய்
சிக்க மறுக்கிறது உறக்கம்
இரவு தீர்ந்தாலும்………..
எஸ்.எம்.சுனைத் ஹஸனி.
mahasin2005@yahoo.co.in
அமைதியாய் சுடரும் இரவுவிளக்கில்
பார்வையை குவித்துவைத்திருக்கிறேன்
உடல்மட்டும் இதமாய்
கட்டிலில் முடங்கிக்கிடந்தும்
மனம் எங்கோ
ஊர்மேய்ந்து கொண்டிருக்கிறது
கையருகில் வாய்த்து
பின் நழுவிச்செல்லும் பட்டாம்பூச்சியாய்
சிக்க மறுக்கிறது உறக்கம்
இரவு தீர்ந்தாலும்
சிந்தனைகள் தீர்ந்தபாடில்லை
அதிகாலை அடைந்தபின்
இரவுச்சிந்தனைகளின் மிச்சம்
மீண்டுமொரு முறை மையம் கொள்கிறது
காலைக்கடன்
காக்கைக்குளியல்
அம்மா சுட்ட தோசை
அலுவலகப்பணி
இவைகளுக்கெல்லாம்
நியாயமாய் ஒதுங்கிக்கொண்டு
சமயம் கிடைக்கும்பொழுதெல்லாம்
விக்கிரமாதித்தனின் வேதாளமாய்
சரீரத்திற்குள் உட்புகுந்துகொள்கிறது
தோழனின் புன்னகைக்கு புன்னகைத்து
மாலைத்தேநீர் அருந்தி
முகவரி தேடி அலைந்த ஒருவருக்கு
விலாசம் காட்டி
இப்படி அனிச்சையாய் செயல்கள்
நடந்தேறினாலும்
கவனம் மட்டும்
இரவுச்சிந்தனையில்தான்
குத்திட்டு நிற்கிறது
இரவு வந்தால் உறங்கியாகவேண்டும்
என்ற மானுடவிதிக்காய்
கட்டிலில் சாய்ந்து
நடுநிசிவரை உறக்கமின்றி
அமைதியாய் சுடரும் இரவுவிளக்கில்
பார்வையை குவித்துவைத்திருக்கிறேன்
உடல்மட்டும் இதமாய்
கட்டிலில் முடங்கிக்கிடந்தும்
மனம் எங்கோ
ஊர்மேய்ந்து கொண்டிருக்கிறது
கையருகில் வாய்த்து
பின் நழுவிச்செல்லும் பட்டாம்பூச்சியாய்
சிக்க மறுக்கிறது உறக்கம்
இரவு தீர்ந்தாலும்………..
எஸ்.எம்.சுனைத் ஹஸனி.
mahasin2005@yahoo.co.in