நம்பிகோபாலன்
17-06-2008, 06:50 PM
மகனே
நீ நலமாய்
இருப்பாய் என்கிற
நினைவில் எழுதும்
என் எழுத்துக்கள்
உன்னை பற்றிய
எண்ணங்களே
எங்கள் இருவரின்
வாழ்க்கையாகி போனதால்
இன்று நீ
விட்டு பிரிந்து
சென்ற பின்னும்
உன் முகம் எங்கள்
நெஞ்சை வருடி போகிறது
மேல்நாடு போனதாலா
மேற்கத்திய கலாசாரத்தில்
மாறியதாலா
எங்களுடன் வாழ
இஷ்டமில்லை என்று
சொன்னாய்
அப்பொழுதே
நாங்கள் இருவரும்
நிஜமாய் இறந்தோம்
நிழலாய் வாழுகிறோம்
சின்ன வயது
முதலே உனக்காக
பார்த்து பார்த்து
செய்தோமோ
அவையெல்லாம்
எங்களை பரிகாசம்
செய்கிறது
உன் பாசத்தால்...
இன்று
இருவரும் பெரிய
வீட்டில் தனிமையில்
ஆறுதல் கொண்டாலும்
உன் நினைவாகவே
வாழ்கிறோம் வாழ்க்கையை.........
நீ நலமாய்
இருப்பாய் என்கிற
நினைவில் எழுதும்
என் எழுத்துக்கள்
உன்னை பற்றிய
எண்ணங்களே
எங்கள் இருவரின்
வாழ்க்கையாகி போனதால்
இன்று நீ
விட்டு பிரிந்து
சென்ற பின்னும்
உன் முகம் எங்கள்
நெஞ்சை வருடி போகிறது
மேல்நாடு போனதாலா
மேற்கத்திய கலாசாரத்தில்
மாறியதாலா
எங்களுடன் வாழ
இஷ்டமில்லை என்று
சொன்னாய்
அப்பொழுதே
நாங்கள் இருவரும்
நிஜமாய் இறந்தோம்
நிழலாய் வாழுகிறோம்
சின்ன வயது
முதலே உனக்காக
பார்த்து பார்த்து
செய்தோமோ
அவையெல்லாம்
எங்களை பரிகாசம்
செய்கிறது
உன் பாசத்தால்...
இன்று
இருவரும் பெரிய
வீட்டில் தனிமையில்
ஆறுதல் கொண்டாலும்
உன் நினைவாகவே
வாழ்கிறோம் வாழ்க்கையை.........