rocky
16-06-2008, 01:22 PM
எப்போதும் போல் அன்றும் சுப்ரமணி (சுப்பு) தாமதமாகவே எழுந்து காலை கடன்களை கழிக்கச் சென்றுவிட்டான். அவன் தாய் சமயலறையில் தன் வேளையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்தார்கள் பழனிச்சாமி மாமாவும், செல்வி அத்தையும். அவர்கள் எப்போது வந்தாலும் கையில் ஒரு மஞ்சல் பையுடந்தான் வருவார்கள், காரணம் அவர்கள் சுப்புவின் வீட்டிற்கு வருவதானால் அது ஏதேனும் ஒரு விசேசத்திற்கு அழைப்பதற்காக மட்டுமே இருக்கும். மற்றபடி அவர்கள் சுப்புவின் வீட்டிற்கு வருவதில்லை.
குளித்து முடித்து சுப்பு வீட்டிற்குள் நுளையும்போது மாமாவும், அத்தையும் காபி குடித்துக் கொண்டிருந்தார்கள். அவனைக் கண்டவுடன் ஒரு அரைகுறை புன்னகையுடன் வேளையெல்லாம் எப்படி இருக்கு என்று கேட்டார் மாமா. பரவாயில்லை மாமா நல்லா போகுது என்று கூறிவிட்டு உங்களுக்கு உடம்பெல்லாம் பராவில்லையா என்று இருவரையும் கேட்டான். "ம்" என்று மட்டும் பதில் வந்தது அத்தையிடமிருந்து. அது ஏனோ அத்தைக்கு அவனை அதிகம் பிடிப்பதில்லை.
அதற்கான காரணமும் சுப்புவுக்கு புரியவில்லை. காரணம் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவன், தன் சம்பளத்தை முழுவதும் வீட்டில் கொடுத்துவிட்டு தினமும் அம்மாவிடம் பத்து ரூபாய் வாங்கிச்செல்லும் ஒரு நல்ல பையன் அவன். அனைவரிடமும் மரியாதையுடனும் விளையாட்டாகவும் பேசி எல்லோருக்கும் தன்னைப் பிடித்தவனாக வைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் இந்த அத்தைக்கு மட்டும் அவனை பிடிப்பதில்லை. ஒருவேளை தன் மகளுக்கு பிடித்தவன் என்பதால் அவருக்கு இவனைப் பிடிக்கவில்லை போலும்.
இப்போது இருவரும் எழுந்து கல்யாணப் பத்திரிக்கையை சுப்புவின் அம்மாவிடம் கொடுத்தார்கள், இரண்டு நாள் முன்னாலயே வந்துரனும் அக்கா என்று மாமா சொல்லிவிட்டு பெயருக்காக நீயும்தான் சுப்பு என்று சொன்னார்கள். பிறகு அம்மாதான் அவர்களிடம் கல்யாண வேளைகள், மற்றும் செலவுகள் பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு சரி நாங்க புரப்படுறோம்கா நிறைய வேளையிருக்கு என்று சொல்லிவிட்டு வெளியே போனார்கள். வாசல் வரை வழியனுப்ப வந்து நின்றவனிடம் மீண்டும் ஒருமுறை அந்த அரைகுறை புன்னகையை வீசிவிட்டு சென்றனர்.
இப்போது வீட்டிற்குள் வந்து அந்தக் கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துப் பார்த்தான் சுப்பு. மணமகள் திருநிறைச்செல்வி "கெளரி" என்றும், மணமகன் திருநிறைச்செல்வன் "அருள் குமார்" என்றும் இருந்ததைப் பார்த்து ஒரு நிமிடம் மனதில் மிகவும் வருந்தினான். இதுவரை அவர்கள் வீட்டிற்கு எந்தக் கல்யாணப் பத்திரிக்கை வந்தாலும் அதில் மணமகள் என்ற இடத்தில் கெளரியின் பெயரையும் மணமகன் என்ற இடத்தில் தன்னுடைய பெயரையும் எழுதிப் பார்பதே அவன் பழக்கம். ஆனால் இந்த முறை இரண்டு பெயர்களுக்கு பதிலாக ஒன்றில் அவள் பெயரே இருந்தாலும் மற்றொன்றில் மட்டும் தன் பெயரை மாற்றி எழுத அவனால் முடியவில்லை.
கெளரி சுப்புவின் மாமன் மகள். அமைதியான பெண். கருப்பாக இருந்தாலும் நல்ல கலையான முகம் அவளுக்கு. பெரிய கண்கள், மற்றவருக்கு அந்தக் கண்கள் சாந்தமாகத் தெரிந்தாலும் சுப்புவை மட்டும் அது மிகவும் கொடுமைப்படுத்தியது. அவர்கள் அதிகமாக பேசிக்கொல்வதில்லை என்றாலும் அவள் அவனை அந்த விழிகளிலேயே ஆட்டிவைப்பாள். அவளுக்கு அவனிடம் பிடிக்காதது என்றால் அது அவன் மற்ற பெண்களுடனும் மிகவும் சகஜமாக விளையாட்டாகப் பழகுவது, அது யாராக இருந்தாலும் சரி, அதற்கு அவள் தங்கைகள் கூட விதிவிலக்கல்ல. அதையும் மீறி அவன் யாருடனாவது பேசுவதைப் பார்த்தால் பார்வையிலேயே அவனை எரித்துவிடுவாள்.
ஆனால் அதே கண்களில் அவள் அவனைக் காதலுடன் ஒருமுறை பார்த்தாலும் அவன் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இவர்கள் இப்படிப் பழகுவது உறவினர்களுக்குத் தெரிந்தவுடன் அவர்கள் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்தது. சந்தேகப் பார்வைகள், கிண்டல் பேச்சுக்கள், இலக்காரப் புன்னகைகள் என்று அவர்களின் பிரச்சனை தொடங்கியது. இதன் காரணமாக அவள் பெற்றோருக்கும் சுப்புவின் பெற்றோருக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் வந்தது. சில கேட்கக்கூடாத கேள்விகள் சொல்லக்கூடாத பதில்கள் என்று அந்தப் பிரச்சனை பெரிதாக மாறியது. அதனால் சிறிது காலம் இரு குடும்பங்களும் அதிகமாக பேசிக்கொள்ளாமல் இருந்தார்கள்.
தொடரும்......
குளித்து முடித்து சுப்பு வீட்டிற்குள் நுளையும்போது மாமாவும், அத்தையும் காபி குடித்துக் கொண்டிருந்தார்கள். அவனைக் கண்டவுடன் ஒரு அரைகுறை புன்னகையுடன் வேளையெல்லாம் எப்படி இருக்கு என்று கேட்டார் மாமா. பரவாயில்லை மாமா நல்லா போகுது என்று கூறிவிட்டு உங்களுக்கு உடம்பெல்லாம் பராவில்லையா என்று இருவரையும் கேட்டான். "ம்" என்று மட்டும் பதில் வந்தது அத்தையிடமிருந்து. அது ஏனோ அத்தைக்கு அவனை அதிகம் பிடிப்பதில்லை.
அதற்கான காரணமும் சுப்புவுக்கு புரியவில்லை. காரணம் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவன், தன் சம்பளத்தை முழுவதும் வீட்டில் கொடுத்துவிட்டு தினமும் அம்மாவிடம் பத்து ரூபாய் வாங்கிச்செல்லும் ஒரு நல்ல பையன் அவன். அனைவரிடமும் மரியாதையுடனும் விளையாட்டாகவும் பேசி எல்லோருக்கும் தன்னைப் பிடித்தவனாக வைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் இந்த அத்தைக்கு மட்டும் அவனை பிடிப்பதில்லை. ஒருவேளை தன் மகளுக்கு பிடித்தவன் என்பதால் அவருக்கு இவனைப் பிடிக்கவில்லை போலும்.
இப்போது இருவரும் எழுந்து கல்யாணப் பத்திரிக்கையை சுப்புவின் அம்மாவிடம் கொடுத்தார்கள், இரண்டு நாள் முன்னாலயே வந்துரனும் அக்கா என்று மாமா சொல்லிவிட்டு பெயருக்காக நீயும்தான் சுப்பு என்று சொன்னார்கள். பிறகு அம்மாதான் அவர்களிடம் கல்யாண வேளைகள், மற்றும் செலவுகள் பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு சரி நாங்க புரப்படுறோம்கா நிறைய வேளையிருக்கு என்று சொல்லிவிட்டு வெளியே போனார்கள். வாசல் வரை வழியனுப்ப வந்து நின்றவனிடம் மீண்டும் ஒருமுறை அந்த அரைகுறை புன்னகையை வீசிவிட்டு சென்றனர்.
இப்போது வீட்டிற்குள் வந்து அந்தக் கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துப் பார்த்தான் சுப்பு. மணமகள் திருநிறைச்செல்வி "கெளரி" என்றும், மணமகன் திருநிறைச்செல்வன் "அருள் குமார்" என்றும் இருந்ததைப் பார்த்து ஒரு நிமிடம் மனதில் மிகவும் வருந்தினான். இதுவரை அவர்கள் வீட்டிற்கு எந்தக் கல்யாணப் பத்திரிக்கை வந்தாலும் அதில் மணமகள் என்ற இடத்தில் கெளரியின் பெயரையும் மணமகன் என்ற இடத்தில் தன்னுடைய பெயரையும் எழுதிப் பார்பதே அவன் பழக்கம். ஆனால் இந்த முறை இரண்டு பெயர்களுக்கு பதிலாக ஒன்றில் அவள் பெயரே இருந்தாலும் மற்றொன்றில் மட்டும் தன் பெயரை மாற்றி எழுத அவனால் முடியவில்லை.
கெளரி சுப்புவின் மாமன் மகள். அமைதியான பெண். கருப்பாக இருந்தாலும் நல்ல கலையான முகம் அவளுக்கு. பெரிய கண்கள், மற்றவருக்கு அந்தக் கண்கள் சாந்தமாகத் தெரிந்தாலும் சுப்புவை மட்டும் அது மிகவும் கொடுமைப்படுத்தியது. அவர்கள் அதிகமாக பேசிக்கொல்வதில்லை என்றாலும் அவள் அவனை அந்த விழிகளிலேயே ஆட்டிவைப்பாள். அவளுக்கு அவனிடம் பிடிக்காதது என்றால் அது அவன் மற்ற பெண்களுடனும் மிகவும் சகஜமாக விளையாட்டாகப் பழகுவது, அது யாராக இருந்தாலும் சரி, அதற்கு அவள் தங்கைகள் கூட விதிவிலக்கல்ல. அதையும் மீறி அவன் யாருடனாவது பேசுவதைப் பார்த்தால் பார்வையிலேயே அவனை எரித்துவிடுவாள்.
ஆனால் அதே கண்களில் அவள் அவனைக் காதலுடன் ஒருமுறை பார்த்தாலும் அவன் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இவர்கள் இப்படிப் பழகுவது உறவினர்களுக்குத் தெரிந்தவுடன் அவர்கள் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்தது. சந்தேகப் பார்வைகள், கிண்டல் பேச்சுக்கள், இலக்காரப் புன்னகைகள் என்று அவர்களின் பிரச்சனை தொடங்கியது. இதன் காரணமாக அவள் பெற்றோருக்கும் சுப்புவின் பெற்றோருக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் வந்தது. சில கேட்கக்கூடாத கேள்விகள் சொல்லக்கூடாத பதில்கள் என்று அந்தப் பிரச்சனை பெரிதாக மாறியது. அதனால் சிறிது காலம் இரு குடும்பங்களும் அதிகமாக பேசிக்கொள்ளாமல் இருந்தார்கள்.
தொடரும்......