அன்புரசிகன்
11-06-2008, 06:31 PM
நோட்டீஸூம் புள்ளட் கோதும்
(பாகம் 1)
டேய்... நோட்டீஸ் போடுறாங்களாமடா... என்று சொன்னவாறு வீதியால் சில வாலிபர்கள் துவிச்சக்கரவண்டியில் விரைந்தார்கள். சிங்கள இராணுவத்தினர் நோட்டமிடும் விமானம் (சீ-பிளேன் என்போம்) மற்றும் உலங்குவானூர்திகள் மூலம் துண்டுப்பிரசுரங்களை வானிலிருந்தவாறே தூவி விடுவர்.அதைத்தான் நோட்டீஸ் என வடதமிழீழமக்கள் (செல்லமாக) அழைப்பார்கள். அதை பொறுக்கி படிக்கும் ஆவலில் பெரியவர்கள். அதில் என்ன வந்துள்ளது, எதைப்பற்றி அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதை படித்துத்தெளியும் நோக்கில் அந்த பெரியவர்கள். இதற்கிடையில் பெரியவர்கள் கண்களுக்குப்படும் முன் அதை கைப்பற்றும் நடவெடிக்கையில் எந்த பயமும் தெரியாத சிறுவர்கள். யார் அதிகமாக வைத்திருக்கிறார்கள் என அடுத்தநாள் பாடசாலை நண்பர்களுக்கு இடையில் போட்டி வேறு இருக்கும்.
பயங்கரவாதிகளின் காம்புக்கு பக்கத்தில யாரையும் இருக்க வேண்டாமாம். என்று சொன்னவாறே பக்கத்து வீட்டு தியாகர் ராசுப்பிள்ளை வீட்டுப்படலையை திறந்தார். தியாகு மற்றும் ராசுப்பிள்ளை அந்த ஊரில் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் சிலரில் இருவர்கள். நாசமாப்போனவங்கள் இயக்கத்தின்ட காம்ப (camp) பார்த்தே அடிக்கிறாங்கள். இங்க இருக்கிற எல்லாற்ற வீடும் அந்த பாவியளுக்கு காம்ப் தான். எங்க போய் ஒழிக்கிறது என்று புலம்பித்தள்ளினார் ராசு... அவங்களுக்கும் கிழமைக்கு ஒருபாடு நோட்டீஸ் போடாட்டிக்கு கவன்மன்ட் சம்பளம் குடுக்காது போல என புன்முறுவலுடன் கூறினார் தியாகு...
இதற்கிடையில் ராசுவின் கடைக்குட்டி அந்த துண்டுப்பிரசுரங்களை சேகரித்துவிட்டு வீட்டினுள் நுழைந்தான். காற்சட்டைப்பை மற்றும் கைகளில் நோட்டீஸால் நிரப்பியவாறே ஏதோ சாதித்து முடித்தது போன்ற முகபாவனையுடன் வீட்டின் முற்றத்தில் உள்ள தியாகுவைப்பார்த்து இங்க பாத்தியளோ... என்னட்ட எத்தின நோட்டீஸ் இருக்கென்டு... என பெருமையுடன் கூறினான் பவி. எனக்கும் ஒன்டு தாவன் என நகைச்சுவையாக அவனுடைய உயரத்திற்கு குனிந்து கேட்டார் தியாகு... ஐ... ஆளப்பாரன்... என்றவாறே உடம்பை நெளித்துக்கொண்டு அதே வயதுக்குரிய குறும்புடன் வீட்டினுள் நுழையவே இந்த கோதாரிய எதுக்கு வீட்டுக்குள்ள கொண்டுவந்து வீட்ட குப்பையாக்குறா என்று பொரிந்து தள்ளினார் பவியின் தாயார் சோதி... அவன் அதை காதில் போட்டுக்கொண்டதாக தெரியவில்லை. நாளை பாடசாலையில் அதைக்கொண்டு எத்தனைபேருடன் போட்டிபோடப்போகிறான் என்று அவனுக்கு தான் தெரியும்... அவனோட எதுக்கு தனகுறா என தன் மனைவியை கடிந்தார் ராசு...
உங்கட பிள்ளையும் நீங்களும் என்றவாறு தேனீர் குவளையை தன் கணவருக்கும் மாலைநேரத்தில் வந்த தியாகுவுக்கும் பரிமாறிவிட்டு கைகளில் பனங்கட்டி துண்டு ஒன்றையும் கொடுத்தார் சோதி. வட இலங்கையில் அந்தக்காலத்தில் இலங்கையரசால் விதிக்கப்பட்ட பொருளாதார தடையால் அங்கு சீனி என்பது தங்கத்திற்கு நிகராகவே இருந்தது. அதில் இவர்கள் அரசாங்க உத்தியோகம் வேறு. இதனால் இவர்களுக்கு நிவாரணம் இல்லை. காசை கொடுத்து கடையில் வாங்கப்போனால் அங்கும் மருந்து கட்டிக்கொடுப்பது போல தான் சீனியை கொடுப்பார்கள். அதற்காகவே உள்ளூர் தயாரிப்பான பனங்கட்டியை துண்டாக்கி போத்தல் ஒன்றில் அடைத்துவைத்திருந்தார் சோதி. டேய் இந்தாடா உன்டய அப்பாவுக்கு பக்கத்தில வைச்சிருக்கிறன். போணீக்க ஒரு பனங்கட்டி துண்டு மட்டும் எடுத்துக்கொண்டு வா என்றார் பவிக்கு கூவினார் சோதி... அவனுக்கு குதுகலம். இரண்டு மூன்று கட்டிகளை காற்சட்டைப்பைகளுக்குள் திணித்துவிட்டு ஒன்றை மட்டும் கையில் வைத்துக்கொண்டு நல்லபிள்ளையாட்டமாக தாய் முன் வந்தான் பவி... இவனின் திருட்டுத்தனத்தை நன்கறிந்த சோதி வந்தவுடன் கட்டியணைத்து அவனது காற்சட்டைப்பைகளுக்குள் இருந்த பனங்கட்டிகளை கைப்பற்றினார். கோபத்தில் பவியின் முகம் வெதும்பியது. எதுவும் செய்யமுடியாதவனாக அந்த தேனீரை குடிக்க மறுத்தான். குடிக்காட்டி விடு. அப்பதான் உனக்கு கொழுப்பு அடங்கும் என்று திட்டவும் இந்தாடா என்ட அப்பு... நீ இந்த கட்டியையும் வச்சிரு என்று ராசு தன் கடைக்குட்டிக்காக தனது பனங்கட்டியை தியாகம் செய்தார். அவன் அதை வாங்க செல்லும் போதே அவனை தன் மடியில் தூக்கி அமர்த்தி கட்டியணைத்தார் ராசு. இவன் பிறந்தபின் தான் தனக்கு செல்வங்கள் சேர்ந்தது என்றும் இவனது ஜாதகப்பலனால் தான் இந்த வீட்டை தன்னால் கட்டிமுடிக்க முடிந்தது என்பதும் அவரது நம்பிக்கை. இவனுக்கு செல்லம் குடுக்கிறதே நீங்கள் தான். என்று சொன்னவாறே அடுப்பங்கரைக்கு சென்றாள் சோதி.
அந்தநேரத்தில் தனியார் கல்விநிறுவனத்திலிருந்து வந்த பவியின் அண்ணன் வீட்டினுள் தன் துவிச்சக்கரவண்டியை ஏற்றினான். அம்மா எனக்கு ஒரு டீ... என்றான்... கொஞ்சம் பொறு. அடுப்பில இப்பதான் சுடுதண்ணி வைச்சிருக்கிறன். இந்த விறகு ஒழுங்காய் எரியுதில்ல. என்று புறுபுறுத்தவாறே ஊதுகுழலால் அடுப்பில் உள்ள தனலுக்கு ஊதினாள் சோதி. இவ்வளவு நேரமும் நடந்தவற்றை பார்த்துக்கொண்டிருந்த தியாகு அண்ணை... நேரம் ஏழேமுக்காலாகுது. வெரித்தாஸை (பிலிப்பைன்ஸ் மனிலாவிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலி சேவை) போடுங்கோ என்றார் தியாகு... டேய் அந்த ரேடியோவ தூக்கிட்டு வாடா குட்டி என்று தன் கடைக்குட்டியை கெஞ்சவே துள்ளிச்சென்று அதனையும் எடுத்துக்கொண்டு வரும் போதே அந்த வானொலி சேவையை ஒலிக்கசெய்தவாறே கொண்டுவந்தான் பவி. நீ பெரிய ஆள்தான் என்று புகழ்ந்தார் தியகு... அந்த குதூகலத்துடன் தந்தையின் மடியில் ஏறி உட்கார்ந்தான் பவி. இவர்கள் வீட்டு முற்றத்தில் நிலாவெளிச்சத்தில் செய்தியை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
இதற்கிடையில் பவியின் அண்ணன் அம்மா... இந்த லாம்புக்கு எண்ணெய் பத்தாது போல... புகைப்பிடிக்குதும்மா... என்று தாயிற்கு முறையிட்டான். டேய் மங்கல் வெளிச்சத்தில படிச்சு கண்ணை கெடுக்காத என்று எச்செரித்தார் தந்தை... வீட்டிலிருந்த மண்ணெண்ணைய்ப்போத்தலை கொண்டுவந்து விளக்கில் ஊற்றிவிட்டு இஞ்சருங்கோ.... நாளைக்கு மண்ணெண்ணெய் வாங்கவேண்ணும். நான் மறந்தாலும் மறப்பன். வாங்கீட்டுவாங்கோ என்று சொல்லிவைத்தாள் சோதி. இப்படியே 8.30 க்கு இலங்கை செய்தி 9.15 ற்கு பி.பி.சி யின் தமிழோசை என 10 மணிவரை வீட்டு முற்றத்தில் இருந்தவாறே தியாகுவும் ராசுவும் அரட்டைஅடித்து 10 மணிக்கு கிளம்பினார் தியாகு... அதற்கிடையில் பிட்டும் சாம்பாறும் சமைத்து முடித்திருந்த சோதி தன் கணவரையும் பிள்ளைகளையும் சாப்பிட அழைத்தார். அனைவரும் விளக்கு வெளிச்சத்தில் சாப்பிட ஆரம்பித்தார். சோதி சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் அண்ணன் கேட்டான். டேய் இன்டைக்கு எத்தின நோட்டீஸ் பொறுக்கினி என்று... அதற்கு அவன் நான் இன்னும் எண்ணேல பொறு எடுத்துக்கொண்டு வரட்டோ என்றான் அண்ணனைப்பார்த்து. டேய். சாப்பிடேக்க கதைக்காத என்று தாயார் தன் கடைக்குட்டிக்கு எச்சரித்தார். சாப்பிட்டு முடிந்ததும் அனைவருக்கும் பசுப்பால் பரிமாறினார். தன் கடைக்குட்டிக்கு சூடு அதிகம் என்று அறிந்த சோதி பெரிய குவளை கொண்டு அந்த பசும்பாலை ஆற்றினார். பின் அவனுக்கு அருகில் இருந்தவாறே டேய் இத குடிடா என்றார். இல்லாவிட்டால் அவன் அந்த பாலை குடிக்கமாட்டான். அவனுக்கு அந்த பனங்கட்டியை பறித்த கோபம் இன்னும் விலகவில்லை என்பது அவனது நடவெடிக்கையில் அறிந்துகொண்டார் தாய். சரி சரி. அப்பனுக்கு கன்டோஸ் ஒன்று வாங்கி வைச்சிருக்கிறன். செல்லமெல்லே.. குடிடா... என்று செல்லமாக சொல்லவே அந்த சிறியமனமும் தன் கோபத்தை மறந்து மடமடவென குடித்து முடித்துவிட்டு அந்த கன்டோஸூக்காக தாயின் முகத்தை பார்த்தான். தாய் கொடுத்ததும் அதை பிரித்து உண்டுவிட்டு அதிலிருந்த ஸ்டிக்கரை பார்த்தான். அது ஒவ்வொரு கன்டோஸூடனும் இலவசமாகவருவது... டேய் இது யாரடா என்று தன் தமையனை கேட்க்கவே இது ரவிஸாஸ்திரியடா என்றான். யாரடா அவர் என்றான். உனக்கு அது தெரியாது பேசாம அத தா என்று அதட்டினான். தமையனுக்கு அந்த ஸ்டிக்கர்களை சேர்க்கும் பழக்கம் உண்டு. அப்படியே கடிந்தவாறே இரவு படுக்கைக்கு சென்றான். என்னதான் தந்தையுடன் செல்லம் என்றாலும் பவிக்கு தாயின் கைகளில் தலைவைத்து படுப்பது தான் பிடிக்கும். அப்படியே தாயை அணைத்துக்கொண்டு சுருண்டு படுப்பான் அந்த பாலகன்.
காலை விடிந்ததும் காலைக்கடன்களை தானாகவே முடித்து குளித்துவிட்டு பாடசாலைக்கு புறப்பட தயாரானான். வழமையாக நடந்து செல்பவன்... டேய் என்ன பள்ளிக்கூடத்தில இறக்கிவிடுறியாடா என்று தமையனை கெஞ்சினான்... நீ என்னோட வாவன் என தந்தை அழைக்கவும் நீங்கள் வர நேரமாயிடும். பிறகு அந்த பிறின்ஸி புல்லுப்புடுங்க விடும் என்று புறுபுறுத்தான். நீ அந்த ஸ்டிக்கரை தா. நான் உன்னை பள்ளிக்கூடத்தில் இறக்கிவிடுகிறன். என பேரம் பேசினான் தமையன். அதற்கு உடன்பட்டு அவனுடன் பாடசாலை விரைந்தான் பவி. படிப்பில் சுட்டி. அதே போல் விளையாட்டிலும் தான். அன்று கொண்டு வந்த நோட்டீஸை தன் நண்பர்களுடன் ஒப்பிடுவதில் குறியாக இருந்தான்.
அந்த போட்டியில் வெற்றிபெற்ற பவியை பார்த்த பவியின் நண்பன் ஒருவன் இங்க பார் என்னட்ட எத்தின புள்ளட் கோது இருக்கு பார் என்று தன் காற்சட்டைப்பைகளுக்குள் இருந்து வெளியே எடுத்து போட்டான். இது கொஞ்சம் தான். வீட்ல ஒரு உரபாக்குக்குள்ள வச்சிருக்கன்டா... என்று மல்லுக்கட்டினான் அவன். இது ஃபிப்டி (50) கலிபரோடது (துப்பாக்கியின் ஒரு ரகம்) என்று விளக்கம் வேறு கொடுத்தான். இதுண்ட ரவக்கூடு கூட என்னட்ட வீட்ல இருக்கென்று தனது பெருமையை மேலெழுப்பினான் நண்பன். பவியின் மனம் துவண்டது. ஆனாலும் அவனுக்கு தன்னை விட்டுக்கொடுக்க மனமில்லை. இதப்பார். இது நேற்று போட்ட நோட்டீஸ். உன்னட்ட நேற்று சுட்ட் புள்ளட் கோது இருக்கா என்று போட்டான் ஒரு போடு. அவனுக்கு தெரியும். நேற்று ஊரில் எங்கும் 50 கலிபர் தாக்குதல் நடாத்தப்படவில்லை. ஆகவே அந்த கோதுக்கு சாத்தியமே இல்லை என்று... அந்த நண்பன் பேச்சு இல்லாமல் அந்த கோதுகளை எடுத்து தன் காற்சட்டைப்பைகளுக்குள் போட்டான். எப்படியாவது தானும் ஒரு தொகுதி புள்ளட் கோது சேர்த்துவிடவேண்டும் என்று மனதில் போட்டுவைத்தான் பவி.
பாடசாலை விட்டதும் வீதியால் நண்பர்களுடன் அரடை்டை அடித்தவாறே நடந்து வந்தான் பவி. வீதிமருங்கில் இருந்த பூவரசமரத்தின் சிறு கிழையை பிடுங்கி வீதியால் வரும் போது வீதியோரத்திலிருந்த தொட்டாச்சிணுங்கி பதருக்கு அடிப்பான். அந்த பதர் சுருங்குவதை பார்த்து அவன் மனம் நெகிழும். அந்த பூவரசம் இலையை மடித்து சுருட்டி வாயில் வைத்து ஊதிக்கொண்டே வந்தான். தாக் நாதஸ்வரம் ஊதுவது போன்ற சைகையாக தன் தலையை வேறு ஆட்டுவான். அத்துடன் வரும் பாதையிலுள்ள அத்தனை வேலிகளுக்கும் அந்த கம்பால் அடி விழும். வீட்டுக்காரர்கள் யாரடா அங்க என மிரட்டும் சத்தம் கேட்டால் சத்தம் போடாது நடப்பான். வீதிமருங்கிலிருக்கும் மாமரங்களில் ஒரு மாங்காய் கண்ணில் பட்டால் போதும். கல்லால் அடித்து அதனை யாருடையதாவது வீட்டு மதிலில் குற்றி நண்பர்களுடன் பகிர்ந்து உண்டுகொண்டே வீட்டுக்கு போவான். வீடு வந்ததும் அவனது வெள்ளை பாடசாலை சீருடை மண்ணிறத்திற்கு மாறியிருக்கும். எங்கயடா பிரட்டிக்கொண்டு வாறாய். என்று தாய் அதட்டினாள் அன்று... மாங்காய் பால் கயர் பிரட்டினாய் என்டா அது தோச்சாலும் போகாதடா என்று விளக்கம் வேறு கொடுத்தாள். உத எத்தினை தடவ சொல்லீட்டீங்கம்மா.... நான் என்ன சின்னப்பிள்ளையோ என்று கேட்டான் அந்த 8 வயது பாலகன்... முளைச்சு மூண்டு இல விடல. அதுக்குள்ள அவற்ற கதையப்பார். எத்தின தரம் சொன்னாலும் கேட்கிறியோடா.... என்று பதிலுக்கு பதிலிட்டாள் சோதி. அப்பிடியே உன்ட உடுப்பைக்கொண்டு போய் கிணத்தடியில ஊறவிடு... வெய்யில் போறதுக்குள்ள தோச்சு போடவேணும். என்றாள் சோதி.... சரீம்மா என்றுவிட்டு கிணற்றடிக்கு ஓடினான் அவன்.
(தொடரும்...)
(பாகம் 1)
டேய்... நோட்டீஸ் போடுறாங்களாமடா... என்று சொன்னவாறு வீதியால் சில வாலிபர்கள் துவிச்சக்கரவண்டியில் விரைந்தார்கள். சிங்கள இராணுவத்தினர் நோட்டமிடும் விமானம் (சீ-பிளேன் என்போம்) மற்றும் உலங்குவானூர்திகள் மூலம் துண்டுப்பிரசுரங்களை வானிலிருந்தவாறே தூவி விடுவர்.அதைத்தான் நோட்டீஸ் என வடதமிழீழமக்கள் (செல்லமாக) அழைப்பார்கள். அதை பொறுக்கி படிக்கும் ஆவலில் பெரியவர்கள். அதில் என்ன வந்துள்ளது, எதைப்பற்றி அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதை படித்துத்தெளியும் நோக்கில் அந்த பெரியவர்கள். இதற்கிடையில் பெரியவர்கள் கண்களுக்குப்படும் முன் அதை கைப்பற்றும் நடவெடிக்கையில் எந்த பயமும் தெரியாத சிறுவர்கள். யார் அதிகமாக வைத்திருக்கிறார்கள் என அடுத்தநாள் பாடசாலை நண்பர்களுக்கு இடையில் போட்டி வேறு இருக்கும்.
பயங்கரவாதிகளின் காம்புக்கு பக்கத்தில யாரையும் இருக்க வேண்டாமாம். என்று சொன்னவாறே பக்கத்து வீட்டு தியாகர் ராசுப்பிள்ளை வீட்டுப்படலையை திறந்தார். தியாகு மற்றும் ராசுப்பிள்ளை அந்த ஊரில் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் சிலரில் இருவர்கள். நாசமாப்போனவங்கள் இயக்கத்தின்ட காம்ப (camp) பார்த்தே அடிக்கிறாங்கள். இங்க இருக்கிற எல்லாற்ற வீடும் அந்த பாவியளுக்கு காம்ப் தான். எங்க போய் ஒழிக்கிறது என்று புலம்பித்தள்ளினார் ராசு... அவங்களுக்கும் கிழமைக்கு ஒருபாடு நோட்டீஸ் போடாட்டிக்கு கவன்மன்ட் சம்பளம் குடுக்காது போல என புன்முறுவலுடன் கூறினார் தியாகு...
இதற்கிடையில் ராசுவின் கடைக்குட்டி அந்த துண்டுப்பிரசுரங்களை சேகரித்துவிட்டு வீட்டினுள் நுழைந்தான். காற்சட்டைப்பை மற்றும் கைகளில் நோட்டீஸால் நிரப்பியவாறே ஏதோ சாதித்து முடித்தது போன்ற முகபாவனையுடன் வீட்டின் முற்றத்தில் உள்ள தியாகுவைப்பார்த்து இங்க பாத்தியளோ... என்னட்ட எத்தின நோட்டீஸ் இருக்கென்டு... என பெருமையுடன் கூறினான் பவி. எனக்கும் ஒன்டு தாவன் என நகைச்சுவையாக அவனுடைய உயரத்திற்கு குனிந்து கேட்டார் தியாகு... ஐ... ஆளப்பாரன்... என்றவாறே உடம்பை நெளித்துக்கொண்டு அதே வயதுக்குரிய குறும்புடன் வீட்டினுள் நுழையவே இந்த கோதாரிய எதுக்கு வீட்டுக்குள்ள கொண்டுவந்து வீட்ட குப்பையாக்குறா என்று பொரிந்து தள்ளினார் பவியின் தாயார் சோதி... அவன் அதை காதில் போட்டுக்கொண்டதாக தெரியவில்லை. நாளை பாடசாலையில் அதைக்கொண்டு எத்தனைபேருடன் போட்டிபோடப்போகிறான் என்று அவனுக்கு தான் தெரியும்... அவனோட எதுக்கு தனகுறா என தன் மனைவியை கடிந்தார் ராசு...
உங்கட பிள்ளையும் நீங்களும் என்றவாறு தேனீர் குவளையை தன் கணவருக்கும் மாலைநேரத்தில் வந்த தியாகுவுக்கும் பரிமாறிவிட்டு கைகளில் பனங்கட்டி துண்டு ஒன்றையும் கொடுத்தார் சோதி. வட இலங்கையில் அந்தக்காலத்தில் இலங்கையரசால் விதிக்கப்பட்ட பொருளாதார தடையால் அங்கு சீனி என்பது தங்கத்திற்கு நிகராகவே இருந்தது. அதில் இவர்கள் அரசாங்க உத்தியோகம் வேறு. இதனால் இவர்களுக்கு நிவாரணம் இல்லை. காசை கொடுத்து கடையில் வாங்கப்போனால் அங்கும் மருந்து கட்டிக்கொடுப்பது போல தான் சீனியை கொடுப்பார்கள். அதற்காகவே உள்ளூர் தயாரிப்பான பனங்கட்டியை துண்டாக்கி போத்தல் ஒன்றில் அடைத்துவைத்திருந்தார் சோதி. டேய் இந்தாடா உன்டய அப்பாவுக்கு பக்கத்தில வைச்சிருக்கிறன். போணீக்க ஒரு பனங்கட்டி துண்டு மட்டும் எடுத்துக்கொண்டு வா என்றார் பவிக்கு கூவினார் சோதி... அவனுக்கு குதுகலம். இரண்டு மூன்று கட்டிகளை காற்சட்டைப்பைகளுக்குள் திணித்துவிட்டு ஒன்றை மட்டும் கையில் வைத்துக்கொண்டு நல்லபிள்ளையாட்டமாக தாய் முன் வந்தான் பவி... இவனின் திருட்டுத்தனத்தை நன்கறிந்த சோதி வந்தவுடன் கட்டியணைத்து அவனது காற்சட்டைப்பைகளுக்குள் இருந்த பனங்கட்டிகளை கைப்பற்றினார். கோபத்தில் பவியின் முகம் வெதும்பியது. எதுவும் செய்யமுடியாதவனாக அந்த தேனீரை குடிக்க மறுத்தான். குடிக்காட்டி விடு. அப்பதான் உனக்கு கொழுப்பு அடங்கும் என்று திட்டவும் இந்தாடா என்ட அப்பு... நீ இந்த கட்டியையும் வச்சிரு என்று ராசு தன் கடைக்குட்டிக்காக தனது பனங்கட்டியை தியாகம் செய்தார். அவன் அதை வாங்க செல்லும் போதே அவனை தன் மடியில் தூக்கி அமர்த்தி கட்டியணைத்தார் ராசு. இவன் பிறந்தபின் தான் தனக்கு செல்வங்கள் சேர்ந்தது என்றும் இவனது ஜாதகப்பலனால் தான் இந்த வீட்டை தன்னால் கட்டிமுடிக்க முடிந்தது என்பதும் அவரது நம்பிக்கை. இவனுக்கு செல்லம் குடுக்கிறதே நீங்கள் தான். என்று சொன்னவாறே அடுப்பங்கரைக்கு சென்றாள் சோதி.
அந்தநேரத்தில் தனியார் கல்விநிறுவனத்திலிருந்து வந்த பவியின் அண்ணன் வீட்டினுள் தன் துவிச்சக்கரவண்டியை ஏற்றினான். அம்மா எனக்கு ஒரு டீ... என்றான்... கொஞ்சம் பொறு. அடுப்பில இப்பதான் சுடுதண்ணி வைச்சிருக்கிறன். இந்த விறகு ஒழுங்காய் எரியுதில்ல. என்று புறுபுறுத்தவாறே ஊதுகுழலால் அடுப்பில் உள்ள தனலுக்கு ஊதினாள் சோதி. இவ்வளவு நேரமும் நடந்தவற்றை பார்த்துக்கொண்டிருந்த தியாகு அண்ணை... நேரம் ஏழேமுக்காலாகுது. வெரித்தாஸை (பிலிப்பைன்ஸ் மனிலாவிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலி சேவை) போடுங்கோ என்றார் தியாகு... டேய் அந்த ரேடியோவ தூக்கிட்டு வாடா குட்டி என்று தன் கடைக்குட்டியை கெஞ்சவே துள்ளிச்சென்று அதனையும் எடுத்துக்கொண்டு வரும் போதே அந்த வானொலி சேவையை ஒலிக்கசெய்தவாறே கொண்டுவந்தான் பவி. நீ பெரிய ஆள்தான் என்று புகழ்ந்தார் தியகு... அந்த குதூகலத்துடன் தந்தையின் மடியில் ஏறி உட்கார்ந்தான் பவி. இவர்கள் வீட்டு முற்றத்தில் நிலாவெளிச்சத்தில் செய்தியை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
இதற்கிடையில் பவியின் அண்ணன் அம்மா... இந்த லாம்புக்கு எண்ணெய் பத்தாது போல... புகைப்பிடிக்குதும்மா... என்று தாயிற்கு முறையிட்டான். டேய் மங்கல் வெளிச்சத்தில படிச்சு கண்ணை கெடுக்காத என்று எச்செரித்தார் தந்தை... வீட்டிலிருந்த மண்ணெண்ணைய்ப்போத்தலை கொண்டுவந்து விளக்கில் ஊற்றிவிட்டு இஞ்சருங்கோ.... நாளைக்கு மண்ணெண்ணெய் வாங்கவேண்ணும். நான் மறந்தாலும் மறப்பன். வாங்கீட்டுவாங்கோ என்று சொல்லிவைத்தாள் சோதி. இப்படியே 8.30 க்கு இலங்கை செய்தி 9.15 ற்கு பி.பி.சி யின் தமிழோசை என 10 மணிவரை வீட்டு முற்றத்தில் இருந்தவாறே தியாகுவும் ராசுவும் அரட்டைஅடித்து 10 மணிக்கு கிளம்பினார் தியாகு... அதற்கிடையில் பிட்டும் சாம்பாறும் சமைத்து முடித்திருந்த சோதி தன் கணவரையும் பிள்ளைகளையும் சாப்பிட அழைத்தார். அனைவரும் விளக்கு வெளிச்சத்தில் சாப்பிட ஆரம்பித்தார். சோதி சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் அண்ணன் கேட்டான். டேய் இன்டைக்கு எத்தின நோட்டீஸ் பொறுக்கினி என்று... அதற்கு அவன் நான் இன்னும் எண்ணேல பொறு எடுத்துக்கொண்டு வரட்டோ என்றான் அண்ணனைப்பார்த்து. டேய். சாப்பிடேக்க கதைக்காத என்று தாயார் தன் கடைக்குட்டிக்கு எச்சரித்தார். சாப்பிட்டு முடிந்ததும் அனைவருக்கும் பசுப்பால் பரிமாறினார். தன் கடைக்குட்டிக்கு சூடு அதிகம் என்று அறிந்த சோதி பெரிய குவளை கொண்டு அந்த பசும்பாலை ஆற்றினார். பின் அவனுக்கு அருகில் இருந்தவாறே டேய் இத குடிடா என்றார். இல்லாவிட்டால் அவன் அந்த பாலை குடிக்கமாட்டான். அவனுக்கு அந்த பனங்கட்டியை பறித்த கோபம் இன்னும் விலகவில்லை என்பது அவனது நடவெடிக்கையில் அறிந்துகொண்டார் தாய். சரி சரி. அப்பனுக்கு கன்டோஸ் ஒன்று வாங்கி வைச்சிருக்கிறன். செல்லமெல்லே.. குடிடா... என்று செல்லமாக சொல்லவே அந்த சிறியமனமும் தன் கோபத்தை மறந்து மடமடவென குடித்து முடித்துவிட்டு அந்த கன்டோஸூக்காக தாயின் முகத்தை பார்த்தான். தாய் கொடுத்ததும் அதை பிரித்து உண்டுவிட்டு அதிலிருந்த ஸ்டிக்கரை பார்த்தான். அது ஒவ்வொரு கன்டோஸூடனும் இலவசமாகவருவது... டேய் இது யாரடா என்று தன் தமையனை கேட்க்கவே இது ரவிஸாஸ்திரியடா என்றான். யாரடா அவர் என்றான். உனக்கு அது தெரியாது பேசாம அத தா என்று அதட்டினான். தமையனுக்கு அந்த ஸ்டிக்கர்களை சேர்க்கும் பழக்கம் உண்டு. அப்படியே கடிந்தவாறே இரவு படுக்கைக்கு சென்றான். என்னதான் தந்தையுடன் செல்லம் என்றாலும் பவிக்கு தாயின் கைகளில் தலைவைத்து படுப்பது தான் பிடிக்கும். அப்படியே தாயை அணைத்துக்கொண்டு சுருண்டு படுப்பான் அந்த பாலகன்.
காலை விடிந்ததும் காலைக்கடன்களை தானாகவே முடித்து குளித்துவிட்டு பாடசாலைக்கு புறப்பட தயாரானான். வழமையாக நடந்து செல்பவன்... டேய் என்ன பள்ளிக்கூடத்தில இறக்கிவிடுறியாடா என்று தமையனை கெஞ்சினான்... நீ என்னோட வாவன் என தந்தை அழைக்கவும் நீங்கள் வர நேரமாயிடும். பிறகு அந்த பிறின்ஸி புல்லுப்புடுங்க விடும் என்று புறுபுறுத்தான். நீ அந்த ஸ்டிக்கரை தா. நான் உன்னை பள்ளிக்கூடத்தில் இறக்கிவிடுகிறன். என பேரம் பேசினான் தமையன். அதற்கு உடன்பட்டு அவனுடன் பாடசாலை விரைந்தான் பவி. படிப்பில் சுட்டி. அதே போல் விளையாட்டிலும் தான். அன்று கொண்டு வந்த நோட்டீஸை தன் நண்பர்களுடன் ஒப்பிடுவதில் குறியாக இருந்தான்.
அந்த போட்டியில் வெற்றிபெற்ற பவியை பார்த்த பவியின் நண்பன் ஒருவன் இங்க பார் என்னட்ட எத்தின புள்ளட் கோது இருக்கு பார் என்று தன் காற்சட்டைப்பைகளுக்குள் இருந்து வெளியே எடுத்து போட்டான். இது கொஞ்சம் தான். வீட்ல ஒரு உரபாக்குக்குள்ள வச்சிருக்கன்டா... என்று மல்லுக்கட்டினான் அவன். இது ஃபிப்டி (50) கலிபரோடது (துப்பாக்கியின் ஒரு ரகம்) என்று விளக்கம் வேறு கொடுத்தான். இதுண்ட ரவக்கூடு கூட என்னட்ட வீட்ல இருக்கென்று தனது பெருமையை மேலெழுப்பினான் நண்பன். பவியின் மனம் துவண்டது. ஆனாலும் அவனுக்கு தன்னை விட்டுக்கொடுக்க மனமில்லை. இதப்பார். இது நேற்று போட்ட நோட்டீஸ். உன்னட்ட நேற்று சுட்ட் புள்ளட் கோது இருக்கா என்று போட்டான் ஒரு போடு. அவனுக்கு தெரியும். நேற்று ஊரில் எங்கும் 50 கலிபர் தாக்குதல் நடாத்தப்படவில்லை. ஆகவே அந்த கோதுக்கு சாத்தியமே இல்லை என்று... அந்த நண்பன் பேச்சு இல்லாமல் அந்த கோதுகளை எடுத்து தன் காற்சட்டைப்பைகளுக்குள் போட்டான். எப்படியாவது தானும் ஒரு தொகுதி புள்ளட் கோது சேர்த்துவிடவேண்டும் என்று மனதில் போட்டுவைத்தான் பவி.
பாடசாலை விட்டதும் வீதியால் நண்பர்களுடன் அரடை்டை அடித்தவாறே நடந்து வந்தான் பவி. வீதிமருங்கில் இருந்த பூவரசமரத்தின் சிறு கிழையை பிடுங்கி வீதியால் வரும் போது வீதியோரத்திலிருந்த தொட்டாச்சிணுங்கி பதருக்கு அடிப்பான். அந்த பதர் சுருங்குவதை பார்த்து அவன் மனம் நெகிழும். அந்த பூவரசம் இலையை மடித்து சுருட்டி வாயில் வைத்து ஊதிக்கொண்டே வந்தான். தாக் நாதஸ்வரம் ஊதுவது போன்ற சைகையாக தன் தலையை வேறு ஆட்டுவான். அத்துடன் வரும் பாதையிலுள்ள அத்தனை வேலிகளுக்கும் அந்த கம்பால் அடி விழும். வீட்டுக்காரர்கள் யாரடா அங்க என மிரட்டும் சத்தம் கேட்டால் சத்தம் போடாது நடப்பான். வீதிமருங்கிலிருக்கும் மாமரங்களில் ஒரு மாங்காய் கண்ணில் பட்டால் போதும். கல்லால் அடித்து அதனை யாருடையதாவது வீட்டு மதிலில் குற்றி நண்பர்களுடன் பகிர்ந்து உண்டுகொண்டே வீட்டுக்கு போவான். வீடு வந்ததும் அவனது வெள்ளை பாடசாலை சீருடை மண்ணிறத்திற்கு மாறியிருக்கும். எங்கயடா பிரட்டிக்கொண்டு வாறாய். என்று தாய் அதட்டினாள் அன்று... மாங்காய் பால் கயர் பிரட்டினாய் என்டா அது தோச்சாலும் போகாதடா என்று விளக்கம் வேறு கொடுத்தாள். உத எத்தினை தடவ சொல்லீட்டீங்கம்மா.... நான் என்ன சின்னப்பிள்ளையோ என்று கேட்டான் அந்த 8 வயது பாலகன்... முளைச்சு மூண்டு இல விடல. அதுக்குள்ள அவற்ற கதையப்பார். எத்தின தரம் சொன்னாலும் கேட்கிறியோடா.... என்று பதிலுக்கு பதிலிட்டாள் சோதி. அப்பிடியே உன்ட உடுப்பைக்கொண்டு போய் கிணத்தடியில ஊறவிடு... வெய்யில் போறதுக்குள்ள தோச்சு போடவேணும். என்றாள் சோதி.... சரீம்மா என்றுவிட்டு கிணற்றடிக்கு ஓடினான் அவன்.
(தொடரும்...)