rambal
17-07-2003, 08:10 AM
கவிதை...
நின்று போன பேருந்திற்கு
சதா நிற்கமட்டுமே தெரிந்த
நிழல்குடைக்கு
கடந்து போன காலத்திற்கு
முடிந்து போன வசந்ததிற்கு
விழியோரம் எட்டிப்பார்த்த
கண்ணீருக்கு
அந்தக் கண்ணீர் வரக்
காரணமாயிருந்தவளுக்கு
சதா குடைந்து கொண்டிருக்கும்
மனசாட்சிக்கு
விழி விரித்து
மிரட்டிப்பார்க்கும் தனிமைக்கு
சிலிர்ப்பை ஏற்படுத்தும்
மழைத்துளிக்கு
என் தேச அவலத்திற்கு
குப்பை பொறுக்கும்
சிறுவனுக்கு
குப்பைத் தொட்டிக்கு
ஆறாம் நம்பர் பிளாட்பாரத்திற்கு
மூணாங்கிளாஸ் டீச்சருக்கு
அம்மாவுக்கு அப்பாவுக்கு
எனக்கு என் நண்பனுக்கு
அதீதமாய்
நிலா நட்சத்திரங்கள்
பிரபஞ்சம்..
எல்லாக் கவிதைகளும்
எழுதி முடித்த பிறகு....
என்னை விடுத்து
என்ன எழுதிக் கிழித்து விட்டாய்?
என்று
ஈனஸ்வரத்தில் கவிதை கேட்டது...
நின்று போன பேருந்திற்கு
சதா நிற்கமட்டுமே தெரிந்த
நிழல்குடைக்கு
கடந்து போன காலத்திற்கு
முடிந்து போன வசந்ததிற்கு
விழியோரம் எட்டிப்பார்த்த
கண்ணீருக்கு
அந்தக் கண்ணீர் வரக்
காரணமாயிருந்தவளுக்கு
சதா குடைந்து கொண்டிருக்கும்
மனசாட்சிக்கு
விழி விரித்து
மிரட்டிப்பார்க்கும் தனிமைக்கு
சிலிர்ப்பை ஏற்படுத்தும்
மழைத்துளிக்கு
என் தேச அவலத்திற்கு
குப்பை பொறுக்கும்
சிறுவனுக்கு
குப்பைத் தொட்டிக்கு
ஆறாம் நம்பர் பிளாட்பாரத்திற்கு
மூணாங்கிளாஸ் டீச்சருக்கு
அம்மாவுக்கு அப்பாவுக்கு
எனக்கு என் நண்பனுக்கு
அதீதமாய்
நிலா நட்சத்திரங்கள்
பிரபஞ்சம்..
எல்லாக் கவிதைகளும்
எழுதி முடித்த பிறகு....
என்னை விடுத்து
என்ன எழுதிக் கிழித்து விட்டாய்?
என்று
ஈனஸ்வரத்தில் கவிதை கேட்டது...