சிவா.ஜி
06-06-2008, 09:05 AM
"இந்த வருடம் குளிர் அதிகம்தானா அல்லது எனக்குத்தான் குளிரைத்தாங்கும் சக்தி குறைந்து வருகிறதா தெரியவில்லை. இந்தக்குளிரில் விடியற்காலையில் பச்சைத்தண்ணியில் குளிப்பது பெரும்பாடாக இருக்கிறது. ம்...என்ன செய்வது மருமகள் மகராசி வந்ததிலிருந்து கேஸ் அடுப்பில் வெந்நீர் வைக்கக்கூடாது என்று தடை போட்டுவிட்டாள். சிவகாமி இருந்தவரையிலாவது பரவாயில்லை. எங்கிருந்தாவது சுள்ளிகளைப் பொறுக்கிவந்து கொல்லையில் அடுப்புமூட்டி வெந்நீர் வைத்து கொடுத்துவிடுவாள். அவள் போனதிலிருந்து அந்த சுகமும் அவளோடே போய்விட்டது." மனதிற்குள் நினைத்துக்கொண்டு கையை ஊன்றி படுக்கையிலிருந்து எழுந்தார் சுந்தரம். வெந்நீர்க்குளியலை மிகவும் விரும்புவார். ஆனால் அது நின்று 5 வருடங்கள் ஆகிவிட்டது.
72 வயதாகிறது. அரசுப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு இப்போது ஓய்வூதியம் வாங்கிக்கொண்டிருக்கிறார். அந்த ஓய்வூதியம்தான் அவரை கொஞ்சமாவது காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. ஊதியம் வாங்கியதும் அதை அப்படியே கொண்டு வந்து மருமகளிடம் கொடுத்துவிட வேண்டும். அவளாகப் பார்த்து அவரது தேநீர் செலவுக்கு ஏதாவது தருவாள். கெட்ட பழக்கங்கள் ஏதுமில்லாததால் பெரிதாக ஏதும் செலவில்லை. காலையிலும், மாலையிலும் மட்டும் தெருவில் உள்ள டீக்கடையில் பேப்பர் படித்துக்கொண்டே தேநீர் அருந்துவது ஒன்றுதான் அவருக்கு கிடைக்கும் சந்தோஷமே. வீட்டில் ஆங்கில செய்தித்தாள்தான் வாங்குகிறார்கள். அவருக்கு தமிழில் படித்தால்தான் நிறைவாக இருக்கும். ஓய்வு பெறும்வரை மருமகள் கையால் காலையும் மாலையும் தேநீர் கிடைத்துக்கொண்டிருந்தது. பிறகு நின்றுவிட்டது. சிவகாமிக்கு அந்தப் பழக்கம் இல்லாததால் அவளுக்குப் பிரச்சனை இல்லாமலிருந்தது.
அதிகாலையிலேயே படுக்கையைவிட்டு எழுந்துவிடும் பழக்கத்தால் அந்தக் குளிரிலும் எழுந்து கொல்லைப் புறத்துக்குப் போய் குளியலறையின் குழாயைத்திறந்து அதனடியில் அப்படியே உட்கார்ந்துகொண்டார். ஆரம்பத்தில் வரும் அந்த வெதுவெதுப்பான நீரை வீணாக்க விருப்பமில்லாமல் அப்படி செய்வதை வழக்கமாக்கிக்கொண்டார்.
தான் கட்டிய வீட்டிலேயே ஒரு அகதியாய் வாழ்வது எத்தனைக் கொடுமையானது என்பதை ஒவ்வொருநாளும் அனுபவித்துக்கொண்டிருந்தார். அவருக்காக ஒதுக்கப்பட்ட அறை அவரால் பழைய சாமான்களைப் போட்டுவைக்க உபயோகப்படுத்தப்பட்டது. இன்று தானும் ஒரு பழைய பொருளாய் முடங்கிப்போயிருந்தார்.
மகனும் மருமகளும் இருக்கும் படுக்கையறைக்குள்ளேயே குளியலறை இருந்தது. தண்னீரைச் சூடாக்க மின்சார சாதனமும் இருந்தது. ஆனால் இவருக்குத்தான் அதனுள் நுழைய அனுமதி இல்லை. பாவம் மகனைக் குற்றம் சொல்லி புன்னியமில்லை. அவனும் தன் மனைவியின் காட்டுக்கத்தலுக்கு அடங்கித்தான் போக வேண்டியிருக்கிறது. திருமணம் ஆகும் வரைதான் மகன் பெற்றோருக்குச் சொந்தம். மனைவி என்று ஒருத்தி வந்து விட்டால் அவளுடனான வாழ்க்கையை நிம்மதியாக வாழ அவளோடு ஒத்துப்போக வேண்டியிருக்கிறது.
நான் மட்டும் என்னவாம். சிவகாமி என் வாழ்க்கையில் வருவதற்கு முன் என் அம்மா சமையலைப் போல இந்த உலகத்தில் வேறு யாரும் சமைக்க முடியாது என்று ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவன், சிவகாமியின் கைப்பக்குவத்தை ருசித்த பிறகு அம்மா சமையலை மறந்துவிடவில்லையா? அவளுக்காகவே தன் பழக்கங்கள் எத்தனையோ விட்டுக்கொடுக்கவில்லையா? என் மகனும் அதைப்போலத்தானே. இருந்தாலும் சிவகாமியிடம் எனக்குக் கிடைத்த நிம்மதியான வாழ்க்கையைப் போல இவனுக்கு கிடைக்கவில்லையே....பாவம் அவன் மனதுக்குள் மறுகுவதை என்னாலும் உணர முடிகிறது. மனைவிக்குத் தெரியாமல் அவ்வப்போது செலவுக்கு ஏதாவது கொடுத்துக்கொண்டுதானேயிருக்கிறான். இப்படியெல்லாம் ஏதேதோ நினைத்துக்கொண்டே டீக்கடைக்கு கிளம்பினார்.
அன்று மகனும் அவர்கள் குடும்பமும் மருமகளின் சொந்தக்காரர் திருமண விசேஷத்துக்குக் கிளம்பினார்கள். இரவு தங்கிவிட்டு காலையில்தான் வருவதாக சொன்னதும் சுந்தரத்துக்கு உடனடியாகத் தோன்றியது "அப்பாடா நாளைக்காவது காலையில் வெந்நீர் சுடவைத்து ஆனந்தமாகக் குளிக்கலாம்" என்பதுதான். காலையில் கிடைக்கப்போகும் அந்த சுகத்துக்காக இரவிலிருந்தே அவர் உடல் ஏங்கத் தொடங்கியது. அனைவரும் கிளம்பிப்போனதும் தனியாக அந்த வீட்டிலிருந்த சுந்தரத்தை பழைய நினைவுகள் ஆக்ரமித்துக்கொண்டன.
சர்வ சுதந்திரத்துடன் அந்த வீட்டில் அவர் வசித்த நாட்களை நினைத்து ஒரு ஏக்கப் பெருமூச்சு அவரிடமிருந்து வெளிப்பட்டது. போகும்போது மறக்காமல் தங்கள் அறையை பூட்டிவிட்டுப் போயிருந்தாள் மருமகள். அந்த அறையைத் தவிர அனைத்து பகுதிகளையும் ஒவ்வொன்றாய் சுற்றி வந்தார். கதவுகளை ஆசையாய் தடவிக்கொடுத்தார். அவரும் சிவகாமியும் அமர்ந்த இடத்திலெல்லாம் அமர்ந்து பார்த்தார். மகன் சிறுபிள்ளையாய் இருந்தபோது அவனைத் தூங்கவைக்க கட்டிய தூளி இருந்த இடத்த ஆவலோடு பார்த்தார். இரவு நெடு நேரம் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தவர் எண்ணங்களின் அழுத்தத்தில் தன்னை மறந்து கண்ணயர்ந்துவிட்டார்.
வழக்கம்போல வெகு விடியலிலேயே விழிப்பு வந்துவிட்டது. மகனும் மகளும் வீட்டில் இல்லாததை சுத்தமாக மறந்தவராக கொல்லைப்புறம்போக முயன்றவர் வழியில் அவர்களின் அறையில் தொங்கும் பூட்டைப் பார்த்ததும்தான் அவர்கள் இல்லாததை உணர்ந்துகொண்டார். உடனே அவருடைய வெந்நீர் ஆசை உடம்பெங்கும் ஒரு பரபரப்பைத் தோற்றுவிக்க சமையல் கட்டுக்கு வேகமாகப் போனார். அங்கே மூலையில் வைக்கப்பட்டிருந்த அவருக்காக சிவகாமி வெந்நீர் வைத்து தரும் பாத்திரத்தை எடுத்து நன்றாக கழுவி, தண்ணீர் பிடித்து கேஸ் அடுப்பில் வைத்தார். நேரமாக ஆக தண்ணீரிலிருந்து கிளம்பும் ஆவியை சின்னக் குழந்தையைப்போல ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்.
நன்றாகக் கொதிக்கட்டுமென்று காத்திருந்தார். இன்று கிடைக்கப்போகும் இந்த வெந்நீர்க்குளியலுக்குப் பிறகு இனி எப்போது கிடைக்கப் போகிறதோ? அதனால் இன்றே ஆசைதீர சூடான நீரில் ஆனந்தமாகக்குளிக்கலாமென்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே தண்ணீர் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரத்தைத் தூக்கப் போகும்போது வாசல் மணி அடித்தது. விதிர் விதிர்த்துப்போய்விட்டார். வந்து விட்டார்களோ? அல்லது வேறு யாராவதா? மருமகளாய் இருந்தால் இன்று தன் கதி அதோகதிதான் என்ற நடுக்கத்துடனே சென்று கதவைத் திறந்தார். தன் மகனையும் மருமகளையும் பார்த்ததும் அவருக்கு சர்வநாடியும் அடங்கிவிட்டது.
அவர்கைகளில் தெரிந்த நடுக்கத்தைப் பார்த்ததும் அந்த மருமகள், ஏதோ தனக்குப் பிடிக்காததை செய்திருக்கிறது இந்த கிழம் என்று தெரிந்துகொண்டு, நேராக சமையலறைக்குத்தான் போனாள். சிறிது நேரத்தில் அவளுடைய கூக்குரலைக் கேட்டு மகன் என்னவோ ஏதோவென்று பதறிக்கொண்டு அங்கே போனான்.
அய்யோ அய்யோ...இந்த அநியாயத்தைப் பாத்தீங்களா? எப்படா இவ வெளியேப் போவான்னு காத்துக்கிட்டிருந்த மாதிரி உங்க அப்பா செஞ்சிருக்கிற காரியத்தைப் பாருங்க. கேஸ் விக்குற விலையில இவ்ளோ பெரிய பாத்திரத்துல தண்ணியை சூடு பண்ணியிருக்காரே? இந்த வயசுல சுகம் கேக்குதா இந்த கிழவருக்கு?
என்று தொடங்கி அவள் நடத்திய ருத்ர தாண்டவத்தில் மகனே ஆடிப்போய்விட்டான். பரிதாபமாக நிற்கும் அப்பாவைப் பார்த்து அவனுக்கு சங்கடமாக இருந்தாலும் எதுவும் செய்ய இயலாதவனாக பெட்டியைத் தூக்கிக் கொண்டு தன் அறைக்குப் போய் பூட்டைத் திறந்தான். அவனுடைய செய்கையைப் பார்த்ததும் இன்னும் ரௌத்திரமானவளாக...
இங்க ஒருத்தி ஆத்தமாட்டாம கத்திக்கிட்டிருக்கேன் எதுவுமே நடக்காதமாதிரி இப்படிப் போனா என்ன அர்த்தம். இந்த மனுஷனை நாலு கேள்வி கேக்க மாட்டீங்க...அப்பா பாசமா? அடடா எவ்ளோ பெரிய மனுஷன், இவரைப் போய் எப்படி கேக்கறதுன்னு இருக்கா? அந்த பெரிய மனுஷனுக்கு அறிவு வேணாம்? திருட்டுத்தனம் செஞ்சிட்டு எப்படி கல்லுளிமங்கனாட்டம் நிக்கறதைப் பாரு? சொரனைக் கெட்ட ஜென்மம்..............
சம்மட்டியாய் விழும் திட்டுக்களைத் தாங்க முடியாதவராக...சுந்தரம் கண்களில் நீர் கட்டிக்கொள்ள மெல்ல அங்கிருந்து நகர்ந்து கொல்லைப்புறத்துக்குப் போனார். குளியலறைக்குள் நுழைந்து கொண்டு கதவைத் தாளிட்டுவிட்டு குமுறிக் குமுறி அழுதார். சிவகாமியை நினைத்து அழுதார், தன் நிலையை நினைத்து அழுதார். ஒரு வெந்நீருக்கா இத்தனை திட்டுக்கள்? தாங்கமுடியாதவராக குலுங்கினார். ஒருவாறாக தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு குளித்துவிட்டு வந்தவர் உடனடியாக வெளியே புறப்பட்டுப் போய்விட்டார்.
வீட்டுக்குத் திரும்ப மனமில்லாமல் சிறிது தொலைவிலிருந்த பூங்காவுக்குப் போய் நிழலான மரத்தினடியில் படுத்துக்கொண்டார். அன்று மாலை வரை அங்கேயே இருந்துவிட்டு பாரமான மனதுடன் வீட்டுக்குத்திரும்பியவரை வரவேற்றது மருமகளின் இரண்டாவது சுற்று அர்ச்சனை.
"இன்னைக்கு ரேஷன் கடைக்குப் போகனும், பையனோட யூனிபார்ம் தைக்கக்குடுத்திருக்கிறதை வாங்கிட்டு வரனும்...எல்லாத்தையும் விட்டுட்டு இப்படி ஊர் சுத்திட்டு வந்தா எப்படி? இந்த வயசுல ஊர் சுத்தறது ரொம்ப அவசியமா?"
காதில் விழுந்த அவள் கத்தலைக் கேட்டுக்கொண்டே தன் அறைக்குள் நுழைந்து தாளிட்டுக்கொண்டார்.
அவருடைய இந்த செயல் அவளை இன்னும் கோபப்படுத்த சத்தம் அதிகரித்தது. கேட்பதற்கு யாருமில்லை என்றவுடன் தன் கத்தலை நிறுத்திவிட்டு முனகலோடு தன் அறைக்குப்போய்விட்டாள். அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த சுந்தரத்தின் மகன், கண்கள் கலங்க அமர்ந்திருந்தான். அந்த ராட்சசிக்குத் தெரியாமல் கண்ணிலிருந்து வெளிப்பட்ட கண்ணீரை விரலால் சுண்டிவிட்டான்.
இரவு முழுவதும் மனம் சரியில்லாமல் தவித்தவன் காலை தன் தந்தை எழுவதற்குள் எழுந்து அவரைப் போய் சமாதானப் படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு அவருடைய அறைக்குப் போய்க் கதவை மெல்ல தட்டினான். இரவு இயற்கை உபாதைக்காக வெளியே போய்விட்டு வந்தவர் கதவைத் தாளிடாததால், அந்தக் கதவு திறந்துகொண்டதும் உள்ளே நுழைந்து அப்பாவை தட்டி எழுப்பினான். ஒரு சிறு அசைவுக்கே விழித்துவிடும் அவர், அவனுடைய தட்டலுக்கு எழவில்லை என்றதுமே ஏதோ விபரீதத்தை உணர்ந்தான். அவன் நினைத்ததைப் போலவே சுந்தரம் இறந்திருந்தார். அவமானத்தின் பாரத்தை தாங்க முடியாமல் அவருடைய இதயம் தன் துடிப்பை நிறுத்திக்கொண்டிருந்தது.
அதிர்ந்து போனவன் ”அப்பா...............” என்று பெருங்குரலெடுத்து கதறினான்.
நடுக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த சுந்தரத்தின் உடலைச் சுற்றி உறவுகளும், சுற்றத்தாரும் அமர்ந்திருந்தார்கள். வழக்கம்போல இறந்தவரின் பெருமைகள் பேசப்பட்டன. அப்போது ஒரு உறவினர் சுந்தரத்தின் மகனிடம் சென்று "வர வேண்டியவங்க எல்லாம் வந்துட்டாங்க உடம்பை குளிப்பாட்டிடலாம்" என்று சொன்னதும் மெல்ல தன் மனைவியைப் பார்த்து "போய் வெந்நீர் வச்சுக் கொண்டு வா" என்றான். அந்த உறவினர் அவனிடம் "பச்சத்தண்ணியே போதும்ப்பா எதுக்கு வெந்நீரெல்லாம் என்றதும்,
ஆவேசமாய்..."இப்பவாச்சும் எங்கப்பா வெந்நீர்ல குளிக்கட்டுங்க...இந்த ராட்சசியால அவர் நிறைய வேதனைப் பட்டிருக்கார். அந்த வேதனையோட வலியெல்லாம், அவ கையாலையே வெக்குற வெந்நீர்ல குளிச்சு மறைஞ்சு போகட்டும்" என்று அவரிடம் சொன்னவன் திகைத்துப்போய் நிற்கும் தன் மனைவியைப் பார்த்து,
"என்னடி மரம்மாதிரி நிக்கற? போ போய் வெந்நீர் வெச்சு எடுத்துக்கிட்டு வா" என்றான்.
72 வயதாகிறது. அரசுப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு இப்போது ஓய்வூதியம் வாங்கிக்கொண்டிருக்கிறார். அந்த ஓய்வூதியம்தான் அவரை கொஞ்சமாவது காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. ஊதியம் வாங்கியதும் அதை அப்படியே கொண்டு வந்து மருமகளிடம் கொடுத்துவிட வேண்டும். அவளாகப் பார்த்து அவரது தேநீர் செலவுக்கு ஏதாவது தருவாள். கெட்ட பழக்கங்கள் ஏதுமில்லாததால் பெரிதாக ஏதும் செலவில்லை. காலையிலும், மாலையிலும் மட்டும் தெருவில் உள்ள டீக்கடையில் பேப்பர் படித்துக்கொண்டே தேநீர் அருந்துவது ஒன்றுதான் அவருக்கு கிடைக்கும் சந்தோஷமே. வீட்டில் ஆங்கில செய்தித்தாள்தான் வாங்குகிறார்கள். அவருக்கு தமிழில் படித்தால்தான் நிறைவாக இருக்கும். ஓய்வு பெறும்வரை மருமகள் கையால் காலையும் மாலையும் தேநீர் கிடைத்துக்கொண்டிருந்தது. பிறகு நின்றுவிட்டது. சிவகாமிக்கு அந்தப் பழக்கம் இல்லாததால் அவளுக்குப் பிரச்சனை இல்லாமலிருந்தது.
அதிகாலையிலேயே படுக்கையைவிட்டு எழுந்துவிடும் பழக்கத்தால் அந்தக் குளிரிலும் எழுந்து கொல்லைப் புறத்துக்குப் போய் குளியலறையின் குழாயைத்திறந்து அதனடியில் அப்படியே உட்கார்ந்துகொண்டார். ஆரம்பத்தில் வரும் அந்த வெதுவெதுப்பான நீரை வீணாக்க விருப்பமில்லாமல் அப்படி செய்வதை வழக்கமாக்கிக்கொண்டார்.
தான் கட்டிய வீட்டிலேயே ஒரு அகதியாய் வாழ்வது எத்தனைக் கொடுமையானது என்பதை ஒவ்வொருநாளும் அனுபவித்துக்கொண்டிருந்தார். அவருக்காக ஒதுக்கப்பட்ட அறை அவரால் பழைய சாமான்களைப் போட்டுவைக்க உபயோகப்படுத்தப்பட்டது. இன்று தானும் ஒரு பழைய பொருளாய் முடங்கிப்போயிருந்தார்.
மகனும் மருமகளும் இருக்கும் படுக்கையறைக்குள்ளேயே குளியலறை இருந்தது. தண்னீரைச் சூடாக்க மின்சார சாதனமும் இருந்தது. ஆனால் இவருக்குத்தான் அதனுள் நுழைய அனுமதி இல்லை. பாவம் மகனைக் குற்றம் சொல்லி புன்னியமில்லை. அவனும் தன் மனைவியின் காட்டுக்கத்தலுக்கு அடங்கித்தான் போக வேண்டியிருக்கிறது. திருமணம் ஆகும் வரைதான் மகன் பெற்றோருக்குச் சொந்தம். மனைவி என்று ஒருத்தி வந்து விட்டால் அவளுடனான வாழ்க்கையை நிம்மதியாக வாழ அவளோடு ஒத்துப்போக வேண்டியிருக்கிறது.
நான் மட்டும் என்னவாம். சிவகாமி என் வாழ்க்கையில் வருவதற்கு முன் என் அம்மா சமையலைப் போல இந்த உலகத்தில் வேறு யாரும் சமைக்க முடியாது என்று ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவன், சிவகாமியின் கைப்பக்குவத்தை ருசித்த பிறகு அம்மா சமையலை மறந்துவிடவில்லையா? அவளுக்காகவே தன் பழக்கங்கள் எத்தனையோ விட்டுக்கொடுக்கவில்லையா? என் மகனும் அதைப்போலத்தானே. இருந்தாலும் சிவகாமியிடம் எனக்குக் கிடைத்த நிம்மதியான வாழ்க்கையைப் போல இவனுக்கு கிடைக்கவில்லையே....பாவம் அவன் மனதுக்குள் மறுகுவதை என்னாலும் உணர முடிகிறது. மனைவிக்குத் தெரியாமல் அவ்வப்போது செலவுக்கு ஏதாவது கொடுத்துக்கொண்டுதானேயிருக்கிறான். இப்படியெல்லாம் ஏதேதோ நினைத்துக்கொண்டே டீக்கடைக்கு கிளம்பினார்.
அன்று மகனும் அவர்கள் குடும்பமும் மருமகளின் சொந்தக்காரர் திருமண விசேஷத்துக்குக் கிளம்பினார்கள். இரவு தங்கிவிட்டு காலையில்தான் வருவதாக சொன்னதும் சுந்தரத்துக்கு உடனடியாகத் தோன்றியது "அப்பாடா நாளைக்காவது காலையில் வெந்நீர் சுடவைத்து ஆனந்தமாகக் குளிக்கலாம்" என்பதுதான். காலையில் கிடைக்கப்போகும் அந்த சுகத்துக்காக இரவிலிருந்தே அவர் உடல் ஏங்கத் தொடங்கியது. அனைவரும் கிளம்பிப்போனதும் தனியாக அந்த வீட்டிலிருந்த சுந்தரத்தை பழைய நினைவுகள் ஆக்ரமித்துக்கொண்டன.
சர்வ சுதந்திரத்துடன் அந்த வீட்டில் அவர் வசித்த நாட்களை நினைத்து ஒரு ஏக்கப் பெருமூச்சு அவரிடமிருந்து வெளிப்பட்டது. போகும்போது மறக்காமல் தங்கள் அறையை பூட்டிவிட்டுப் போயிருந்தாள் மருமகள். அந்த அறையைத் தவிர அனைத்து பகுதிகளையும் ஒவ்வொன்றாய் சுற்றி வந்தார். கதவுகளை ஆசையாய் தடவிக்கொடுத்தார். அவரும் சிவகாமியும் அமர்ந்த இடத்திலெல்லாம் அமர்ந்து பார்த்தார். மகன் சிறுபிள்ளையாய் இருந்தபோது அவனைத் தூங்கவைக்க கட்டிய தூளி இருந்த இடத்த ஆவலோடு பார்த்தார். இரவு நெடு நேரம் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தவர் எண்ணங்களின் அழுத்தத்தில் தன்னை மறந்து கண்ணயர்ந்துவிட்டார்.
வழக்கம்போல வெகு விடியலிலேயே விழிப்பு வந்துவிட்டது. மகனும் மகளும் வீட்டில் இல்லாததை சுத்தமாக மறந்தவராக கொல்லைப்புறம்போக முயன்றவர் வழியில் அவர்களின் அறையில் தொங்கும் பூட்டைப் பார்த்ததும்தான் அவர்கள் இல்லாததை உணர்ந்துகொண்டார். உடனே அவருடைய வெந்நீர் ஆசை உடம்பெங்கும் ஒரு பரபரப்பைத் தோற்றுவிக்க சமையல் கட்டுக்கு வேகமாகப் போனார். அங்கே மூலையில் வைக்கப்பட்டிருந்த அவருக்காக சிவகாமி வெந்நீர் வைத்து தரும் பாத்திரத்தை எடுத்து நன்றாக கழுவி, தண்ணீர் பிடித்து கேஸ் அடுப்பில் வைத்தார். நேரமாக ஆக தண்ணீரிலிருந்து கிளம்பும் ஆவியை சின்னக் குழந்தையைப்போல ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்.
நன்றாகக் கொதிக்கட்டுமென்று காத்திருந்தார். இன்று கிடைக்கப்போகும் இந்த வெந்நீர்க்குளியலுக்குப் பிறகு இனி எப்போது கிடைக்கப் போகிறதோ? அதனால் இன்றே ஆசைதீர சூடான நீரில் ஆனந்தமாகக்குளிக்கலாமென்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே தண்ணீர் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரத்தைத் தூக்கப் போகும்போது வாசல் மணி அடித்தது. விதிர் விதிர்த்துப்போய்விட்டார். வந்து விட்டார்களோ? அல்லது வேறு யாராவதா? மருமகளாய் இருந்தால் இன்று தன் கதி அதோகதிதான் என்ற நடுக்கத்துடனே சென்று கதவைத் திறந்தார். தன் மகனையும் மருமகளையும் பார்த்ததும் அவருக்கு சர்வநாடியும் அடங்கிவிட்டது.
அவர்கைகளில் தெரிந்த நடுக்கத்தைப் பார்த்ததும் அந்த மருமகள், ஏதோ தனக்குப் பிடிக்காததை செய்திருக்கிறது இந்த கிழம் என்று தெரிந்துகொண்டு, நேராக சமையலறைக்குத்தான் போனாள். சிறிது நேரத்தில் அவளுடைய கூக்குரலைக் கேட்டு மகன் என்னவோ ஏதோவென்று பதறிக்கொண்டு அங்கே போனான்.
அய்யோ அய்யோ...இந்த அநியாயத்தைப் பாத்தீங்களா? எப்படா இவ வெளியேப் போவான்னு காத்துக்கிட்டிருந்த மாதிரி உங்க அப்பா செஞ்சிருக்கிற காரியத்தைப் பாருங்க. கேஸ் விக்குற விலையில இவ்ளோ பெரிய பாத்திரத்துல தண்ணியை சூடு பண்ணியிருக்காரே? இந்த வயசுல சுகம் கேக்குதா இந்த கிழவருக்கு?
என்று தொடங்கி அவள் நடத்திய ருத்ர தாண்டவத்தில் மகனே ஆடிப்போய்விட்டான். பரிதாபமாக நிற்கும் அப்பாவைப் பார்த்து அவனுக்கு சங்கடமாக இருந்தாலும் எதுவும் செய்ய இயலாதவனாக பெட்டியைத் தூக்கிக் கொண்டு தன் அறைக்குப் போய் பூட்டைத் திறந்தான். அவனுடைய செய்கையைப் பார்த்ததும் இன்னும் ரௌத்திரமானவளாக...
இங்க ஒருத்தி ஆத்தமாட்டாம கத்திக்கிட்டிருக்கேன் எதுவுமே நடக்காதமாதிரி இப்படிப் போனா என்ன அர்த்தம். இந்த மனுஷனை நாலு கேள்வி கேக்க மாட்டீங்க...அப்பா பாசமா? அடடா எவ்ளோ பெரிய மனுஷன், இவரைப் போய் எப்படி கேக்கறதுன்னு இருக்கா? அந்த பெரிய மனுஷனுக்கு அறிவு வேணாம்? திருட்டுத்தனம் செஞ்சிட்டு எப்படி கல்லுளிமங்கனாட்டம் நிக்கறதைப் பாரு? சொரனைக் கெட்ட ஜென்மம்..............
சம்மட்டியாய் விழும் திட்டுக்களைத் தாங்க முடியாதவராக...சுந்தரம் கண்களில் நீர் கட்டிக்கொள்ள மெல்ல அங்கிருந்து நகர்ந்து கொல்லைப்புறத்துக்குப் போனார். குளியலறைக்குள் நுழைந்து கொண்டு கதவைத் தாளிட்டுவிட்டு குமுறிக் குமுறி அழுதார். சிவகாமியை நினைத்து அழுதார், தன் நிலையை நினைத்து அழுதார். ஒரு வெந்நீருக்கா இத்தனை திட்டுக்கள்? தாங்கமுடியாதவராக குலுங்கினார். ஒருவாறாக தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு குளித்துவிட்டு வந்தவர் உடனடியாக வெளியே புறப்பட்டுப் போய்விட்டார்.
வீட்டுக்குத் திரும்ப மனமில்லாமல் சிறிது தொலைவிலிருந்த பூங்காவுக்குப் போய் நிழலான மரத்தினடியில் படுத்துக்கொண்டார். அன்று மாலை வரை அங்கேயே இருந்துவிட்டு பாரமான மனதுடன் வீட்டுக்குத்திரும்பியவரை வரவேற்றது மருமகளின் இரண்டாவது சுற்று அர்ச்சனை.
"இன்னைக்கு ரேஷன் கடைக்குப் போகனும், பையனோட யூனிபார்ம் தைக்கக்குடுத்திருக்கிறதை வாங்கிட்டு வரனும்...எல்லாத்தையும் விட்டுட்டு இப்படி ஊர் சுத்திட்டு வந்தா எப்படி? இந்த வயசுல ஊர் சுத்தறது ரொம்ப அவசியமா?"
காதில் விழுந்த அவள் கத்தலைக் கேட்டுக்கொண்டே தன் அறைக்குள் நுழைந்து தாளிட்டுக்கொண்டார்.
அவருடைய இந்த செயல் அவளை இன்னும் கோபப்படுத்த சத்தம் அதிகரித்தது. கேட்பதற்கு யாருமில்லை என்றவுடன் தன் கத்தலை நிறுத்திவிட்டு முனகலோடு தன் அறைக்குப்போய்விட்டாள். அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த சுந்தரத்தின் மகன், கண்கள் கலங்க அமர்ந்திருந்தான். அந்த ராட்சசிக்குத் தெரியாமல் கண்ணிலிருந்து வெளிப்பட்ட கண்ணீரை விரலால் சுண்டிவிட்டான்.
இரவு முழுவதும் மனம் சரியில்லாமல் தவித்தவன் காலை தன் தந்தை எழுவதற்குள் எழுந்து அவரைப் போய் சமாதானப் படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு அவருடைய அறைக்குப் போய்க் கதவை மெல்ல தட்டினான். இரவு இயற்கை உபாதைக்காக வெளியே போய்விட்டு வந்தவர் கதவைத் தாளிடாததால், அந்தக் கதவு திறந்துகொண்டதும் உள்ளே நுழைந்து அப்பாவை தட்டி எழுப்பினான். ஒரு சிறு அசைவுக்கே விழித்துவிடும் அவர், அவனுடைய தட்டலுக்கு எழவில்லை என்றதுமே ஏதோ விபரீதத்தை உணர்ந்தான். அவன் நினைத்ததைப் போலவே சுந்தரம் இறந்திருந்தார். அவமானத்தின் பாரத்தை தாங்க முடியாமல் அவருடைய இதயம் தன் துடிப்பை நிறுத்திக்கொண்டிருந்தது.
அதிர்ந்து போனவன் ”அப்பா...............” என்று பெருங்குரலெடுத்து கதறினான்.
நடுக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த சுந்தரத்தின் உடலைச் சுற்றி உறவுகளும், சுற்றத்தாரும் அமர்ந்திருந்தார்கள். வழக்கம்போல இறந்தவரின் பெருமைகள் பேசப்பட்டன. அப்போது ஒரு உறவினர் சுந்தரத்தின் மகனிடம் சென்று "வர வேண்டியவங்க எல்லாம் வந்துட்டாங்க உடம்பை குளிப்பாட்டிடலாம்" என்று சொன்னதும் மெல்ல தன் மனைவியைப் பார்த்து "போய் வெந்நீர் வச்சுக் கொண்டு வா" என்றான். அந்த உறவினர் அவனிடம் "பச்சத்தண்ணியே போதும்ப்பா எதுக்கு வெந்நீரெல்லாம் என்றதும்,
ஆவேசமாய்..."இப்பவாச்சும் எங்கப்பா வெந்நீர்ல குளிக்கட்டுங்க...இந்த ராட்சசியால அவர் நிறைய வேதனைப் பட்டிருக்கார். அந்த வேதனையோட வலியெல்லாம், அவ கையாலையே வெக்குற வெந்நீர்ல குளிச்சு மறைஞ்சு போகட்டும்" என்று அவரிடம் சொன்னவன் திகைத்துப்போய் நிற்கும் தன் மனைவியைப் பார்த்து,
"என்னடி மரம்மாதிரி நிக்கற? போ போய் வெந்நீர் வெச்சு எடுத்துக்கிட்டு வா" என்றான்.