PDA

View Full Version : வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆஸிஃப் கைது



aren
03-06-2008, 04:50 AM
பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆஸிஃப் துபாயில் நேற்று போதைப் பொருள் வைத்திருந்ததால் கைது செய்துப்பட்டார். இதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவிக்கும் என்று தெரிகிறது.

இந்த பசங்க திருந்தவே மாட்டார்கள் போலிருக்கிறது.

ஓவியன்
03-06-2008, 08:13 AM
கிரிக்கட் செய்திகளை உள்ளடக்கும் இணையத் தளங்களிலெல்லாம், இந்த செய்திக்கே இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசாங்கம் தலையிட்டு ஆஷிப்பை விடுவிக்குமென நினைக்கின்றேன்...

aren
03-06-2008, 08:38 AM
பாகிஸ்தான் அரசாங்கம் நிச்சயம் தலையிடக்கூடாது. அப்பொழுதுதான் அடுத்தவர்களுக்கு ஒரு படிப்பினையாகும்.

ஓவியன்
03-06-2008, 08:54 AM
பாகிஸ்தான் அரசாங்கம் நிச்சயம் தலையிடக்கூடாது. அப்பொழுதுதான் அடுத்தவர்களுக்கு ஒரு படிப்பினையாகும்.

உண்மைதான் ஆரென் அண்ணா, அது கிரிக்கட் வீரர்களைக் கிட்டத்தட்ட கடவுள்களாகவே மதிக்கும் இரசிகர்களுக்கும் ஒரு படிப்பினையாக அமையும்...

அமரன்
03-06-2008, 09:50 AM
கிரிக்கெட் சூதாட்டம் போல இன்னொரு மேட்டர். எல்லா வீரர்கள் மீதும் கவனம் திரும்ப சாத்தியகூறுண்டு. வைத்திருந்தது சொந்தப்பாவனைக்கா? அல்லது...

விகடன்
03-06-2008, 10:34 AM
படிப்பினை என்றெல்லாம் யார் சிந்திக்கப் போகிறார்கள்?
முடிந்தளவிற்கு சீக்கிரமாக வெள்ளியில் எடுக்கத்தான் போராடுவார்கள்.

shibly591
03-06-2008, 10:35 AM
ஆசிப்புக்கு இது ஒன்றும் புதிது இல்லை..அவரது ஆட்டத்தை மட்டும் ரசிப்போம்..எதற்காக அவர்களது பகுதி நேர தொழிலில் மூக்கை நாம் நுழைக்க வேண்டும்?

அறிஞர்
03-06-2008, 12:56 PM
ஒரு துறையில் சாதித்து....
அதை சாதமாக்கி, தவறான வழிகளில் செயல்படுவதை தடுக்கவேண்டும்.

பாகிஸ்தான் அரசாங்கம் என்ன செய்கிறது என பார்ப்போம்.

aren
04-06-2008, 07:46 AM
ஆஸிஃப் மேல் இருந்த களங்கம் நீங்கியது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதியாகவில்லை, ஆகையால் அவர் விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.

இதுதான் உண்மையா அல்லது பவர் விளையாடிவிட்டதா என்று தெரியவில்லை.

பூமகள்
04-06-2008, 08:34 AM
அரசியலில் மட்டுமல்ல... விளையாட்டிலும்.. இது போன்ற பல 'இல்லை'கள் பின்னர் முளைக்கவே செய்கிறது...!!

அப்போது மட்டும் ஆதாரங்கள்... காணாமல் போய்விடுமோ என்னவோ...??!! ;)

இனியாவது..... கல்லூரிக்கும் பள்ளிக்கும் அலுவலகத்துக்கும் மட்டம் அடித்துக் கொண்டு கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்கள் திருந்தட்டும்..!

பகிர்ந்தமைக்கு நன்றிகள் அரென் அண்ணா.

ராஜா
04-06-2008, 11:16 AM
வயிற்றுக்கில்லையென சொம்பு திருடுபவர்களின் மீதுதான் சட்டத்தின் நீண்ட கரங்கள் பாயும். நீதியின் காவலர்கள் நெறிமுறை வழுவாமல் கடமை முடிப்பார்கள்.

அளவுக்கு மீறிய ஆசையில் கோடி கோடியாய் கொள்ளை அடிப்பவர்களிடம் சட்டம் வாலைக் குழைத்துக்கொண்டு நிற்பதுதான் நம் கண் முன்னே காணும் நிதர்சனமாக இருக்கிறது

ஆசிஃபும் விடுவிக்கப்படுவார்.. இரு வாகனங்கள் உரசிக் கொண்ட தகராறில் எதிர்வண்டிக்காரரை அடித்துக் கொன்ற நவ்ஜோத் சிங் சித்துவைப்போல...

ராஜா
04-06-2008, 11:32 AM
http://thatstamil.oneindia.in/img/2008/06/Mohammad-Asif1-250_04062008.jpg

துபாய்: போதைப் பொருள் வைத்திருந்ததாக சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஆசிப் நிரபராதி என அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து விரைவில் அவர் நாடு திரும்புவார் என ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான பாகிஸ்தான் தூதர் அசன் உல்லா கான் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்டுவிட்டு மும்பையிலிருந்து துபாய் வழியாக பாகிஸ்தான் கிளம்பிய ஆசிப், போதைப் பொருள் வைத்திருந்ததாக கூறி, துபாய் போலீஸாரால் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

அவர் தனது பேன்ட் பாக்கெட்டில், 0.24 கிராம் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை வைத்திருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார் ஆசிப். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், ஆசிப் நிரபராதி என தெரிய வந்துள்ளதாகவும், எனவே அவர் ஓரிரு நாட்களில் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்புவார் எனவும் எமிரேட்ஸுக்கான பாகிஸ்தான் தூதர் உல்லா கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆசிப் மீது எந்தத் தவறும் இல்லை. இரு தரப்புக்கும் இடையே, சரியான புரிந்துணர்வு இல்லாததால்தான் இந்தக் குழப்பம் ஏற்பட்டு விட்டது.

ஆசிப் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. எனவே அவர் விரைவில் நாடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.

மன்மதன்
04-06-2008, 01:01 PM
எதிர்பார்த்ததுதான்.. !!!

aren
05-06-2008, 01:46 AM
பேசாமல் ஆஸிஃப்பிற்கு லைசென்ஸ் கொடுத்துவிடலாம். அவர் மட்டும் போதைப் பொருள் உட்கொண்டு பந்துவீசலாம் என்று.

இல்லைன்னா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதற்கு தகுந்தாற்போல் விதிகளை மாற்றிவிடும்.

அன்புரசிகன்
05-06-2008, 01:53 AM
இது இன்றய gulfnews (http://archive.gulfnews.com/articles/08/06/05/10218458.html) ல் வெளியாகியுள்ள செய்தி. (இணையத்தில்)


Asif's career could be over if found guilty by WADA


Staff Report
Published: June 05, 2008, 00:08


Dubai: The fate of controversial Pakistani cricketer Mohammad Asif, who is currently being detained at the Dubai airport detention centre for possessing contraband drugs, hinges on the outcome of laboratory tests being conducted on the substance.
Dubai authorities are also awaiting the result of tests on his blood and urine samples.
Shafqat Naghmi, the Pakistan Cricket Board's chief operating officer, on Wednesday told a press conference in Lahore: "Until the reports come, nothing is moving forward," Naghmi said.
"The situation at the moment remains he is not charged but is under investigation. It might take some more time for this matter to be resolved."
Hopeful
"We are hopeful that the matter would be resolved soon and the whole affair would prove to be a big mistake."


http://gulfnews.advertserve.com/servlet/view/banner/image/zone?zid=43&pid=0&position=1 (http://gulfnews.advertserve.com/servlet/click/zone?zid=43&pid=0&lookup=true&position=1)

Dubai airport customs authorities took Asif into custody on Sunday morning soon after he arrived from India on a 15-hour transit stay en route to Pakistan.
On Wednesday Pakistan's ambassador to the UAE Ahsan Ullah Khan told the media that he was 'optimist and always hopeful' of Asif's release.
"We hope there is a positive outcome so that he can be released at the earliest and leave for Pakistan," he told IANS.
However, Asif is no stranger to controversy.
In 2006 he was banned for a year after he and fellow Pakistan pace bowler Shoaib Akhtar tested positive for the steroid Nandrolone. The ban was lifted two months later following an appeal.
If formally charged in Dubai Asif's career could be all but over as he would be handed a life ban by the World Anti-Doping Agency (WADA).
WADA take a strong view if a sportsman is a second time offender in drug-related issues.
Meanwhile in India, the Indian Premier League said that Asif might be disallowed from playing in future editions of the tournament if he is found guilty.
Last month organisers of the tournament hurriedly called in WADA officials to conduct random dope tests on players after it was reported that Akhar was questioned by Pakistan customs officials for possessing 36 syringes.

aren
05-06-2008, 02:10 AM
வளைகுடா செய்தியிலிருந்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது. துபாய் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கைக்கு உட்பட்டால் அவர் விடுவிக்கப்படலாம். அந்த பேச்சு இன்னும் பேச்சிலேயே இருக்கிறது என்று இந்த செய்தியிலிருந்து தெரிகிறது.

எவ்வளவு பணம் கிடைக்கிறது இவர்களுக்கு, வாலை சுற்றிக்கொண்டு சில வருடங்கள் இருக்கலாமே. எதற்கு இந்த போதை மருந்து எல்லாம்.

அறிஞர்
20-06-2008, 02:16 PM
துபாய் அரசு.. வழக்கு எதுவுமில்லாமல்.. ஆசிப்பை விடுவித்துவிட்டது.

சில அபராதங்கள் அவர் கட்ட வேண்டியிருக்கும்...

நட்பு நாடுகள்.... இந்த விசயம் சரிக்கட்டப்பட்டிருக்கிறது.
எப்படியெல்லாம் மனிதர்கள் தப்பிக்கிறார்கள்...

அனுராகவன்
23-06-2008, 05:46 AM
பல தகவல் ஆசிப்பை பற்றி..!!

aren
23-06-2008, 05:53 AM
இல்லை, குற்றம் நிரூபணமாகியிருக்கிறது, ஆனால் சார்ஜ் செய்யவில்லை, அவ்வளவே. ஆகையால் WADA சும்மாயிருக்காது. நிச்சயம் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஏதாவது தண்டனை கொடுத்தேயாகவேண்டும்.