lenram80
03-06-2008, 02:26 AM
மேகத்தைப் பிடித்துத் தா என்றேன்!
நிலவைப் பிடித்துத் தருகிறேன் என்றாய்!
புத்தகம் வாங்கித் தா என்றேன்!
ஒரு கவிதைத் தொகுப்பு எழுதித் தருகிறேன் என்றாய்!
வண்ணத்துப் பூச்சி வேண்டும் என்றேன்!
சிட்டுக் குருவி பிடித்துக் கொடுக்கிறேன் என்றாய்!
நான் கேட்பது குடிசை!
நீ கட்ட நினைப்பது மாளிகை!
எனது தேவைகள் முழ நீளத்தில்!
நீ எனக்காக செய்யும் வசதிகள் மைல் நீளத்தில்!
ஒரு நாளில் பெய்து விட்டுப் போகும் மழை வேண்டாம்!
தாகம் எடுக்கும் போதெல்லாம் தணிக்கும் அணை வேண்டும் எனக்கு!
தூரல் நேரத்தில் வண்ணமாய் விரியும் வானவில் வேண்டாம்!
நான் அழும் நேரத்தில் என் விழி துடைக்கும் ஒரு விரல் வேண்டும் எனக்கு!
ஒரே நாளில் கட்டப்பட்ட கோபுரம் வேண்டாம்!
வாரக்கணக்கில் கட்டப்பட்ட அடித்தளம் வேண்டும் எனக்கு!
ஒரே மூச்சாய் இமயம் முதல் குமரி வரை பயணம் வேண்டாம்!
உன் கை பிடித்துக் கொண்டு புல்வெளி நடை போதும் எனக்கு!
ராஜராஜனின் வாள் வேண்டாம்!
என் தலையில் நீ வைக்கும் ஒரு மல்லிகை மொட்டு போதும் எனக்கு!
எனக்கு தூரத்து நட்சத்திரமாய் நீ இருக்க வேண்டாம்!
எனக்காக என் தலையணையில் உதிக்கும் கதிரவனாய் இரு!
என் பெருமை சொல்லும் கவிதையாய் நீ இருக்க வேண்டாம்!
என் உணர்வுகளை புரிந்து கொள்ளும் கவிஞனாய் இரு!
கொஞ்ச நேரம் ஓடுவதை விட
நீண்ட நேரம் நடக்கலாம் வா!
சின்னதாய் செய்யடா!
எனக்கு சின்ன தாய் நீயடா!
நான் பிருந்தா வனம் இல்லையடா!
உனக்காக பூத்த ஒற்றை ரோஜாவடா!
நிலவைப் பிடித்துத் தருகிறேன் என்றாய்!
புத்தகம் வாங்கித் தா என்றேன்!
ஒரு கவிதைத் தொகுப்பு எழுதித் தருகிறேன் என்றாய்!
வண்ணத்துப் பூச்சி வேண்டும் என்றேன்!
சிட்டுக் குருவி பிடித்துக் கொடுக்கிறேன் என்றாய்!
நான் கேட்பது குடிசை!
நீ கட்ட நினைப்பது மாளிகை!
எனது தேவைகள் முழ நீளத்தில்!
நீ எனக்காக செய்யும் வசதிகள் மைல் நீளத்தில்!
ஒரு நாளில் பெய்து விட்டுப் போகும் மழை வேண்டாம்!
தாகம் எடுக்கும் போதெல்லாம் தணிக்கும் அணை வேண்டும் எனக்கு!
தூரல் நேரத்தில் வண்ணமாய் விரியும் வானவில் வேண்டாம்!
நான் அழும் நேரத்தில் என் விழி துடைக்கும் ஒரு விரல் வேண்டும் எனக்கு!
ஒரே நாளில் கட்டப்பட்ட கோபுரம் வேண்டாம்!
வாரக்கணக்கில் கட்டப்பட்ட அடித்தளம் வேண்டும் எனக்கு!
ஒரே மூச்சாய் இமயம் முதல் குமரி வரை பயணம் வேண்டாம்!
உன் கை பிடித்துக் கொண்டு புல்வெளி நடை போதும் எனக்கு!
ராஜராஜனின் வாள் வேண்டாம்!
என் தலையில் நீ வைக்கும் ஒரு மல்லிகை மொட்டு போதும் எனக்கு!
எனக்கு தூரத்து நட்சத்திரமாய் நீ இருக்க வேண்டாம்!
எனக்காக என் தலையணையில் உதிக்கும் கதிரவனாய் இரு!
என் பெருமை சொல்லும் கவிதையாய் நீ இருக்க வேண்டாம்!
என் உணர்வுகளை புரிந்து கொள்ளும் கவிஞனாய் இரு!
கொஞ்ச நேரம் ஓடுவதை விட
நீண்ட நேரம் நடக்கலாம் வா!
சின்னதாய் செய்யடா!
எனக்கு சின்ன தாய் நீயடா!
நான் பிருந்தா வனம் இல்லையடா!
உனக்காக பூத்த ஒற்றை ரோஜாவடா!