PDA

View Full Version : மருகிய மலர்கள்...



நம்பிகோபாலன்
02-06-2008, 07:51 PM
கடந்துபோன என் காதலுனுக்கு
உன் நினைவாக
உன் சிரிப்பும்
கடைசி கண்ணீரும்
என் வலிகளை
சில வரிகளாக

காதல் இருவருக்கும்
புரிதலால் அன்பினால் மலர்ந்தது
சூழ்நிலை
ஏமாற்று வேலையில் இறங்க
இருவரும் இரு பக்கமாய்
பிரிந்தோம்...

இன்று
மணமாகி போனதால்
என் காதல் மலர்கள்
மருகி போயிருக்கலாம்
விட்டு சென்ற வாசம்
என் நெஞ்சில் வலிகளாய்
உனக்கு வரிகளாய்......

இளசு
11-06-2008, 09:59 PM
வலிகளை வரிகளாக்கும் கவிஞன்..


காதல் மட்டுமன்று..
கல்வி, உறவு, நட்பு, பணி...
எங்கும் கிடைக்கலாம் வலி..
அவற்றை உரங்களாக்கும்
வரம் கேட்போம்...


வாழ்த்துகள் நம்பிகோபாலன்..

சுகந்தப்ரீதன்
14-06-2008, 12:46 PM
புரிதலில் பிரிதலா?
பிரிதலில் புரிதலா?
புரியும்முன் பிரிந்ததடி
கைசேரும் காலம்
கண்ணே.....
என் கண்முன்னே..!!

வாழ்த்துக்கள் நம்பி.. தொடருங்கள்..!!
மருகிய மலர்கள் மறுபடியும் மணக்கட்டும்..!!