poo
04-04-2003, 03:16 PM
***
நான் "தான்" என்றிருந்தேன்..
நீ நீயாக இருந்தவரை...
உன் நிழல் நிஜமானது-
தானென்பது ம(றை)றந்து
நான் யாரென்று தேடுகிறேன்..
உன்னில் என்னை
தொலைத்துவிட்டு
என்னில் என்னைத் தேடும்
வித்தியாச வியாதி..
காதல்..காதல்..காதல் !!!...
***
உன் பெண்மையின் பாதிப்பில்
என் ஆண்மையை தொலைத்தேன்..
அடங்கா காளையாய் அலைகிறேன்..
அன்பே உன் குரல் கேட்டால்-ஒடுங்கிப் போகிறேன்..
பாதிப்புகள் அதிகமாய்..
ஆனாலும் இனிமையாய்..
அறிவிலாதவனையும் அறிஞனாக்குகிறாய்..
அறிஞனையும் பித்தனாக்குவாயாமே?!!
காதல் கொடிதா ..
காதலி கொடிதா ??!!
***
பிரம்மனுக்கும் மின்னஞ்சல்..
பிறந்த நாள் வாழ்த்து இண்டர்நெட்டில்
ஆனாலும் காதலே நீ மட்டும்
மனதில்தான் உதிக்கிறாய்..
வேதனைகளின் வேதங்களாய்
மனங்கள் மாறிப்போனதாலா?..
காதலே உனக்கொரு
கோரிக்கை..
இம்சிக்காத இரவொன்றை
இரவலாய் வாங்கி வா..
இரக்கமில்லா பிரம்மனிடம்!!!
***
சத்தமில்லா யுத்தப் புரட்சி
சத்தான சதைப்பற்றுள்ள பெண்கள்-
சலனங்கள்..
கோயில் ஒலி உறக்கத்திற்கு
இடைஞ்சலாய்..
சலங்கை ஒலி சங்கீதமாய்..
சலனங்கள்..
மனதில் சம்மனமிட்டு
அமர்ந்துள்ள சர்வாதிகாரி-
சலனங்கள் ...
***
இருபதில் இனித்தாய்..
காதல்...
நாற்பதில் மருத்துவன் சொன்னான்..
இனிப்பை சேர்க்காதேவென..
அவருக்கெப்படி தெரியும்
நமக்குள் கசந்து போன காதல்!!!
***
நான் "தான்" என்றிருந்தேன்..
நீ நீயாக இருந்தவரை...
உன் நிழல் நிஜமானது-
தானென்பது ம(றை)றந்து
நான் யாரென்று தேடுகிறேன்..
உன்னில் என்னை
தொலைத்துவிட்டு
என்னில் என்னைத் தேடும்
வித்தியாச வியாதி..
காதல்..காதல்..காதல் !!!...
***
உன் பெண்மையின் பாதிப்பில்
என் ஆண்மையை தொலைத்தேன்..
அடங்கா காளையாய் அலைகிறேன்..
அன்பே உன் குரல் கேட்டால்-ஒடுங்கிப் போகிறேன்..
பாதிப்புகள் அதிகமாய்..
ஆனாலும் இனிமையாய்..
அறிவிலாதவனையும் அறிஞனாக்குகிறாய்..
அறிஞனையும் பித்தனாக்குவாயாமே?!!
காதல் கொடிதா ..
காதலி கொடிதா ??!!
***
பிரம்மனுக்கும் மின்னஞ்சல்..
பிறந்த நாள் வாழ்த்து இண்டர்நெட்டில்
ஆனாலும் காதலே நீ மட்டும்
மனதில்தான் உதிக்கிறாய்..
வேதனைகளின் வேதங்களாய்
மனங்கள் மாறிப்போனதாலா?..
காதலே உனக்கொரு
கோரிக்கை..
இம்சிக்காத இரவொன்றை
இரவலாய் வாங்கி வா..
இரக்கமில்லா பிரம்மனிடம்!!!
***
சத்தமில்லா யுத்தப் புரட்சி
சத்தான சதைப்பற்றுள்ள பெண்கள்-
சலனங்கள்..
கோயில் ஒலி உறக்கத்திற்கு
இடைஞ்சலாய்..
சலங்கை ஒலி சங்கீதமாய்..
சலனங்கள்..
மனதில் சம்மனமிட்டு
அமர்ந்துள்ள சர்வாதிகாரி-
சலனங்கள் ...
***
இருபதில் இனித்தாய்..
காதல்...
நாற்பதில் மருத்துவன் சொன்னான்..
இனிப்பை சேர்க்காதேவென..
அவருக்கெப்படி தெரியும்
நமக்குள் கசந்து போன காதல்!!!
***