கண்மணி
26-05-2008, 10:43 AM
நினைவு தெரிந்த நாளிலிருந்தே நான் இந்த வீட்டில் தான் இருக்கிறேன். மீரா அம்மாவிற்கு என் மேல் அன்பா இல்லை அது கடமையே புரியாது. ஆனால் அம்மா கண்கள் என்னை நீண்ட நேரம் பார்க்காமல் இருந்து விட்டு பார்த்தால் ஒளிரும் பார்த்திருக்கேன்.
அப்பா ஒரு வாத்தியார். அவருடைய பள்ளியில் செல்லாத அதட்டலை எல்லாம் என்னிடம் தான் காட்டுவார். எல்லோரும் அவர் முன்னால பயப்படற மாதிரி நடிச்சுட்டு அவர் போனப்புறம் கேலி செய்வாங்க. அது அவருக்குத் தெரியுமா இல்லியா தெரியலை. ஆனால் தனியா இருக்கும் பொழுது சிந்தனையில் முழுகினார்னா பக்கத்தில பாம் போட்டா கூடத் தெரியாது..
ஆசைக்கு ஒண்ணு ஆஸ்திக்கொண்ணுன்னு சொல்லுவாங்க. அதை அவஸ்தைக்கொண்ணு, அடிப்பதுக்கொண்ணுன்னு மாத்திச் சொல்லலாம். அன்பும், மலரும் அப்படித்தான். அனபு இது வரை எதுக்கெதுக்கு அடி வாங்கியிருக்கான்னு சொன்னா நாலு நாள் ஆகும் முடிக்க. அம்மா, அப்பா, மலர், பக்கத்து வீட்டு மோகனா, வாத்தியார், என அவன் அடிவாங்கிய கதையைச் சொன்னா இது நாவலாயிடும். ஆண் பிள்ளையை அடிச்சு வளக்கணும்னு சொல்வாங்களாம்.
மலர் கொஞ்சம் உல்டா.. பலசமயம் இவள் செய்யற சின்னச் சின்னக் காரியங்கள் பெரிய அவஸ்தைல கொண்டு போய் விட்டுரும். அதனால இவள்கிட்ட எந்த வேலையயும் யாரும் குடுக்க மாட்டாங்க. ஏன்னா இவ செய்யற குழப்படியைச் சரி செய்ய, அப்புறம் அதே வேலையைச் சரி செய்ய என இரட்டைக் கஷ்டமாகிடும்.
அன்பும் மலரும் தான் எனக்குச் செல்லமும். மலருக்கு யாருமே வேலை தரமாட்டாங்க. அதனால மலர்கிட்ட நான் வசமா மாட்டிக்குவேன். எங்கயோ படிச்சது, யாரோ சொன்னதுன்னு இருக்கிற அத்தனை பரிசோதனைகளும் என்னோடதான். அன்பு தேவையில்லாம அடிவாங்கி ஏன்? ஏன்? ஏன் எனக்கு மட்டும்னு அழறப்ப அவனைத் திட்டவே திட்டாத என் மேல் பாசம் பொங்கி வழியும். அப்போ மலருக்கும் அவனுக்கும் சண்டை வந்து அதுக்குத் தனியா அடிவாங்குவான் பாவம்..
அப்படித்தான் அன்னிக்கு சாயங்காலம் 5 மணிக்கே மலர் வந்தாச்சு.. (ஸ்கூலைக் கட்பண்ணி மார்னிங் ஷோ பார்த்துட்டு, மதியம் கொஞ்சம் ஊர் சுத்திட்டு டாண்ணு 5:00 மணிக்கு வீட்ல நல்ல பிள்ளையா ஆஜர்)
7 மணியாச்சு. அன்பு ரொம்பவே டயர்டா முடியெல்லாம் கலைஞ்சு வீட்டுக்கு வந்தான்..
அம்மா மலரைக் காணோம்மா..ஸ்கூல் ஃபுல்லா தேடிட்டு வந்தேன் என்று அவன் காரணம் சொல்ல,
பளாரென விழுந்தது அடி.. அவன் மேட்னிக்கு போயிருப்பதாக அல்லவா மலர் சொல்லி இருந்தாள்,
ஆம்பளைச் சொல் அம்பலம் ஏறுமா? கட் அடிப்பதும் சினிமா போவதும் ஆம்பளைங்க சமாச்சாரம்னில்ல மக்கள் நம்பிகிட்டு இருக்காங்க,
இதுக்கு சினிமா போயிட்டு வந்து அடிவாங்கி இருக்கலாம்..
அன்னிக்கு இராத்திரி அன்பு எடுத்த முடிவும் அதன் விளைவுகளும் தான்..
என் சோகக் கதையா முடிஞ்சிருச்சி,,
கேளுங்க என் கதையை..
தொடரும்
அப்பா ஒரு வாத்தியார். அவருடைய பள்ளியில் செல்லாத அதட்டலை எல்லாம் என்னிடம் தான் காட்டுவார். எல்லோரும் அவர் முன்னால பயப்படற மாதிரி நடிச்சுட்டு அவர் போனப்புறம் கேலி செய்வாங்க. அது அவருக்குத் தெரியுமா இல்லியா தெரியலை. ஆனால் தனியா இருக்கும் பொழுது சிந்தனையில் முழுகினார்னா பக்கத்தில பாம் போட்டா கூடத் தெரியாது..
ஆசைக்கு ஒண்ணு ஆஸ்திக்கொண்ணுன்னு சொல்லுவாங்க. அதை அவஸ்தைக்கொண்ணு, அடிப்பதுக்கொண்ணுன்னு மாத்திச் சொல்லலாம். அன்பும், மலரும் அப்படித்தான். அனபு இது வரை எதுக்கெதுக்கு அடி வாங்கியிருக்கான்னு சொன்னா நாலு நாள் ஆகும் முடிக்க. அம்மா, அப்பா, மலர், பக்கத்து வீட்டு மோகனா, வாத்தியார், என அவன் அடிவாங்கிய கதையைச் சொன்னா இது நாவலாயிடும். ஆண் பிள்ளையை அடிச்சு வளக்கணும்னு சொல்வாங்களாம்.
மலர் கொஞ்சம் உல்டா.. பலசமயம் இவள் செய்யற சின்னச் சின்னக் காரியங்கள் பெரிய அவஸ்தைல கொண்டு போய் விட்டுரும். அதனால இவள்கிட்ட எந்த வேலையயும் யாரும் குடுக்க மாட்டாங்க. ஏன்னா இவ செய்யற குழப்படியைச் சரி செய்ய, அப்புறம் அதே வேலையைச் சரி செய்ய என இரட்டைக் கஷ்டமாகிடும்.
அன்பும் மலரும் தான் எனக்குச் செல்லமும். மலருக்கு யாருமே வேலை தரமாட்டாங்க. அதனால மலர்கிட்ட நான் வசமா மாட்டிக்குவேன். எங்கயோ படிச்சது, யாரோ சொன்னதுன்னு இருக்கிற அத்தனை பரிசோதனைகளும் என்னோடதான். அன்பு தேவையில்லாம அடிவாங்கி ஏன்? ஏன்? ஏன் எனக்கு மட்டும்னு அழறப்ப அவனைத் திட்டவே திட்டாத என் மேல் பாசம் பொங்கி வழியும். அப்போ மலருக்கும் அவனுக்கும் சண்டை வந்து அதுக்குத் தனியா அடிவாங்குவான் பாவம்..
அப்படித்தான் அன்னிக்கு சாயங்காலம் 5 மணிக்கே மலர் வந்தாச்சு.. (ஸ்கூலைக் கட்பண்ணி மார்னிங் ஷோ பார்த்துட்டு, மதியம் கொஞ்சம் ஊர் சுத்திட்டு டாண்ணு 5:00 மணிக்கு வீட்ல நல்ல பிள்ளையா ஆஜர்)
7 மணியாச்சு. அன்பு ரொம்பவே டயர்டா முடியெல்லாம் கலைஞ்சு வீட்டுக்கு வந்தான்..
அம்மா மலரைக் காணோம்மா..ஸ்கூல் ஃபுல்லா தேடிட்டு வந்தேன் என்று அவன் காரணம் சொல்ல,
பளாரென விழுந்தது அடி.. அவன் மேட்னிக்கு போயிருப்பதாக அல்லவா மலர் சொல்லி இருந்தாள்,
ஆம்பளைச் சொல் அம்பலம் ஏறுமா? கட் அடிப்பதும் சினிமா போவதும் ஆம்பளைங்க சமாச்சாரம்னில்ல மக்கள் நம்பிகிட்டு இருக்காங்க,
இதுக்கு சினிமா போயிட்டு வந்து அடிவாங்கி இருக்கலாம்..
அன்னிக்கு இராத்திரி அன்பு எடுத்த முடிவும் அதன் விளைவுகளும் தான்..
என் சோகக் கதையா முடிஞ்சிருச்சி,,
கேளுங்க என் கதையை..
தொடரும்