அமரன்
17-05-2008, 04:57 PM
"சாரி"
"எதுக்கு"
"கால் பண்ணியதுக்கு"
"ஓ.."
"மெயிலுகளுக்கு பதிலில்லை.. அதான் கா"
"பராவாயில்லை"
"ஏனிப்படி நடந்துக்கிறே"
"எப்படி"
"கால் பண்ணிப் பேசினேன்.. வேலை கெடுது; தூக்கம் கெடுது; மெயிலனுப்புன்னு சொன்னே. அனுப்பினால் பதிலில்லை"
"நேரமில்லை"
"பொய்................. வேணும்னே நீ என்னை அவாய்ட் பண்றே"
"இல்லை"
"நீ இன்னும் பழச மறக்கல"
"அப்படில்லாம் இல்லை"
மௌனம்... மௌனம்.
"ஏன் என்னை அவாய்ட் பண்றே"
தெரியாத விடை என்னை ஊமையாக்கியது. எதிர்முனை ஒரு நிமிடம் மௌனமானது.. சில நிமிடங்கள் விசும்பல் கேட்டது.. மௌனம் காத்தேன்..
"எப்போ கேட்டாலும் எதுவுஞ் சொல்றதில்ல. உனக்கும் உன் ஃபிரன்சுக்கும் டைம்பாசிங் டாய் ஆகிட்டேன் நான். போரடிச்சா பேசி வெளாடுவீங்க. அப்புறம் தூக்கிப் போட்டுடுவீங்க. நீயும் ஒரே மாதிரின்னு நிரூபிச்சிட்டே.. தாங்க்ஸ் 4 யுவர் ஃபிரன்ஷிப்.. பை"
என்னை பேசவிடாமல் லைனைக் கட்பண்ணியது சகோதர மொழி மயில். இந்தக்கேள்வியை எத்தனை வாட்டி கேட்டாளோ அத்தனை வாட்டியும் பதில்தெரியாமல் அமைதியாகி இருக்கேன்.. எத்தனை வாட்டி கேட்டிருப்பாள் என்பது ஞாபகமில்லை. எப்போ முதன் முதலாகக் கேட்டாள் என்பது மறக்கமுடியாத முதல்களுடன் ஒன்றாக கலந்திருந்திருக்கிறது.
கீர்த்தனா எனக்கு புதுமுகமாக அறிமுகமானபோது நான் அவளுக்கு பழையமுகம் என்றாள். அந்த நேரத்தில் இது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. நானும் அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சொல்ல மறந்துட்டேன். கீர்த்தனாவை தன் காதலியாக, எனக்கு அறிமுகஞ்செய்தவன் திவாகர்..
கிராமத்திலிருந்து நகரத்துக்கு வேலை என்னை இடமாற்றியபோது அறிமுகமாகி, இரண்டாண்டு காலம் நட்புபாராட்டியவன் திவாகர். இதைச் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். சின்ன வயசில, கிராமத்தில, பூவரமிலையில பீப்பீ செஞ்சு விளையாடியன் போல அன்னியோன்யமாகவும் உரிமையுடன் பழகினால் யார்தான் நம்புவார்கள்.. எல்லாருக்கும் நட்புபற்றி ஆழமான அனுபவம் இருப்பதில்லையே. இந்தக்கதைக்கு அவனைப்பற்றி இந்தளவு விபரம்போதும்..
வீதி விபத்தொன்றில், திவாகர் இறந்து ஓராண்டு இறந்திருக்கும். தோழியாக நானினைத்த கீர்த்தனா, என்னைக் காதலனாகப் பிரகடனப்படுத்தினாள். அதிர்ந்தேன். திவாகரைக் காதலித்தவள்; திவாகர் இறந்து ஓராண்டு ஆகவில்லை; அதற்குள் அவனுடைய நண்பனான என்னை காதலிப்பதாக சொன்னால் அதிர்ச்சி அடையாமல் என்னதான் செய்வது.
""நான் உன்னைக் காதலிப்பது திவாகருந் தெரியும்"
"..............."
"உன்னையும் என்னையும் சேர்த்து வைப்பதாகச் சொல்லித்தான் இன்ரடியூஸ் செய்து வைத்தான்"
நான் என்ன நிலைமையில் இருக்கேனென தெரியாமலே அவள் அடுக்கடுக்காய் வெடிகளை வீசினாள். என் கண்ணோக்கிய அவள் கண்களில் தெறித்த நேர்மையும். சற்றும் பிசிறாத, நிதானம் தவறாத குரலும் எங்கோ தப்பு நடந்திருக்கு என்று சொல்லின. எங்கே என்பதில் உடனடித் தெளிவு இல்லை.
"பிறகு கொஞ்ச நாள்ல அவனே என்னைக் காதலிப்பதாக சொன்னான்.. மறுத்தேன்.. அடம்பிடித்தான். சூசைட் பண்ணிடுவேன்னு மிரட்டினான். அவன் அம்மாவிடம் சொன்னேன். அவுங்களும் அவனுக்கு சப்போர்ட் பண்ணினாங்க.."
என் முகமாறுதல்களை அவதானித்தவள், சற்று நேரம் இடைவெளை விட்டாள். பொது இடங்களில், எதிலிருந்தும் சுலபத்தில் வெளிவந்துவிடும் தன்மை எனக்கு இருந்தது. நிர்ச்சலன மனத்தை முகம் அடையாளங் காட்டியது..
"நெகட்டிவ் முடிவு எடுக்காதிருக்கும்படியாக, திவாகரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற ட்ரை பண்ணினேன்.. அவனுடைய வேறு ஃபிரன்ஸை ஹெல்ப் கேட்டேன். சரின்னாங்க.. ஆனால், அதை வைத்து அன்பான பிளாக் மெயில் செய்தாங்க. அவுங்க அவுங்க பர்சனல் காரியங்களுக்கு என்னை யூஸ் பண்ணிக்கிட்டாங்க.. இந்த இழுபறிக்குள்ளதான் அந்த ஆக்சிடன்ட் நடந்துச்சு...."
நிறுத்தியவள் என்னை நிறுப்பது போலப் பார்த்தாள். எனக்குள் பல எண்ணவோட்டங்கள்.. இப்போ என்ன சொல்வது.. என்ன செய்வது. எதுவுமே தெரியவில்லை.. மொழி தெரியாத தேசத்தில் சிக்கியவன் போலானேன்.. பல சமயங்களில் உதவியதைப் போல இப்போதும் உதவினாள்..
"நேரமாச்சு.. நான் கிளம்பறேன்.. அப்புறமா உனக்கு ஃபோன் பண்றேன்"
எங்கெங்கோ அலைந்தேன்.. என்னென்னமோ செய்தேன்.. எதுவுமே உதவவில்லை.. வழமைக்கு மாறாக தாமதமாக ரூமுக்குப் போனேன்.. கேட்டின் சத்தம் கேட்டு விழித்த நாய் குரைக்க, யன்னல் திறந்து பார்த்த ஓனரம்மா முறைத்தாள். குனிந்த தலையுடன் அவளைக் கடந்தபோது செல்சிணுங்கியது.
"பதிலேதும் சொல்லலையே நீ"
"எதுவுமே தோணலை"
"..................."
"..................."
"என்னைப் பிடிக்கலையா"
"ஆஸ் எ ஃபிரன்ட்.. பிடிச்சிருக்கு"
"........................... ஏன்..???.................. நான் அழகில்லையா?"
"......."
"என் மதம்?"
"..........."
"என் லாங்குவேஜ்"
"........"
"எதுவுமே பேசாமல் இருந்தா.........."
"... தெரியல.."
"மாறவே மாட்டியா"
"இல்லை"
"............................................................... ஓகே லவ்வரா என்னை ஏன் உனக்குப் பிடிக்கலங்கிறதை, எனக்காக யோசிச்சுச் சொல்லு.. அந்த செக்கன்ல இருந்து நான் இதை மறந்துடுறேன்.. நீயும் மறந்துடு.. ஃபிரன்ட்சா இருப்போம்"
யோசிச்சேன்... யோசிச்சேன்... யோசிச்சேன்... யோசிச்சேன்..
"தெரியல"
அப்போதிருந்து பலமுறை ஏனெனத் தெரியாமலே தெரியலைன்னு அவளுக்கு சொல்லியுள்ளேன்...
செல் அதிர்ந்தது.. கீர்த்தனா எஸ் எம் எஸ்ஸி இருந்தாள்.
"ஐ ஆம் சாரி.. உதாசீனம் என்னை அப்டி பேச வெச்சுட்டுது. இனிமே அப்டிப் பேசமாட்டேன்.. நேரங்கிடைக்கும்போது மெயிலுகளுக்கு ரிப்ளை பண்ணு.. பை ஃபொர் நவ்"
"எதுக்கு"
"கால் பண்ணியதுக்கு"
"ஓ.."
"மெயிலுகளுக்கு பதிலில்லை.. அதான் கா"
"பராவாயில்லை"
"ஏனிப்படி நடந்துக்கிறே"
"எப்படி"
"கால் பண்ணிப் பேசினேன்.. வேலை கெடுது; தூக்கம் கெடுது; மெயிலனுப்புன்னு சொன்னே. அனுப்பினால் பதிலில்லை"
"நேரமில்லை"
"பொய்................. வேணும்னே நீ என்னை அவாய்ட் பண்றே"
"இல்லை"
"நீ இன்னும் பழச மறக்கல"
"அப்படில்லாம் இல்லை"
மௌனம்... மௌனம்.
"ஏன் என்னை அவாய்ட் பண்றே"
தெரியாத விடை என்னை ஊமையாக்கியது. எதிர்முனை ஒரு நிமிடம் மௌனமானது.. சில நிமிடங்கள் விசும்பல் கேட்டது.. மௌனம் காத்தேன்..
"எப்போ கேட்டாலும் எதுவுஞ் சொல்றதில்ல. உனக்கும் உன் ஃபிரன்சுக்கும் டைம்பாசிங் டாய் ஆகிட்டேன் நான். போரடிச்சா பேசி வெளாடுவீங்க. அப்புறம் தூக்கிப் போட்டுடுவீங்க. நீயும் ஒரே மாதிரின்னு நிரூபிச்சிட்டே.. தாங்க்ஸ் 4 யுவர் ஃபிரன்ஷிப்.. பை"
என்னை பேசவிடாமல் லைனைக் கட்பண்ணியது சகோதர மொழி மயில். இந்தக்கேள்வியை எத்தனை வாட்டி கேட்டாளோ அத்தனை வாட்டியும் பதில்தெரியாமல் அமைதியாகி இருக்கேன்.. எத்தனை வாட்டி கேட்டிருப்பாள் என்பது ஞாபகமில்லை. எப்போ முதன் முதலாகக் கேட்டாள் என்பது மறக்கமுடியாத முதல்களுடன் ஒன்றாக கலந்திருந்திருக்கிறது.
கீர்த்தனா எனக்கு புதுமுகமாக அறிமுகமானபோது நான் அவளுக்கு பழையமுகம் என்றாள். அந்த நேரத்தில் இது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. நானும் அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சொல்ல மறந்துட்டேன். கீர்த்தனாவை தன் காதலியாக, எனக்கு அறிமுகஞ்செய்தவன் திவாகர்..
கிராமத்திலிருந்து நகரத்துக்கு வேலை என்னை இடமாற்றியபோது அறிமுகமாகி, இரண்டாண்டு காலம் நட்புபாராட்டியவன் திவாகர். இதைச் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். சின்ன வயசில, கிராமத்தில, பூவரமிலையில பீப்பீ செஞ்சு விளையாடியன் போல அன்னியோன்யமாகவும் உரிமையுடன் பழகினால் யார்தான் நம்புவார்கள்.. எல்லாருக்கும் நட்புபற்றி ஆழமான அனுபவம் இருப்பதில்லையே. இந்தக்கதைக்கு அவனைப்பற்றி இந்தளவு விபரம்போதும்..
வீதி விபத்தொன்றில், திவாகர் இறந்து ஓராண்டு இறந்திருக்கும். தோழியாக நானினைத்த கீர்த்தனா, என்னைக் காதலனாகப் பிரகடனப்படுத்தினாள். அதிர்ந்தேன். திவாகரைக் காதலித்தவள்; திவாகர் இறந்து ஓராண்டு ஆகவில்லை; அதற்குள் அவனுடைய நண்பனான என்னை காதலிப்பதாக சொன்னால் அதிர்ச்சி அடையாமல் என்னதான் செய்வது.
""நான் உன்னைக் காதலிப்பது திவாகருந் தெரியும்"
"..............."
"உன்னையும் என்னையும் சேர்த்து வைப்பதாகச் சொல்லித்தான் இன்ரடியூஸ் செய்து வைத்தான்"
நான் என்ன நிலைமையில் இருக்கேனென தெரியாமலே அவள் அடுக்கடுக்காய் வெடிகளை வீசினாள். என் கண்ணோக்கிய அவள் கண்களில் தெறித்த நேர்மையும். சற்றும் பிசிறாத, நிதானம் தவறாத குரலும் எங்கோ தப்பு நடந்திருக்கு என்று சொல்லின. எங்கே என்பதில் உடனடித் தெளிவு இல்லை.
"பிறகு கொஞ்ச நாள்ல அவனே என்னைக் காதலிப்பதாக சொன்னான்.. மறுத்தேன்.. அடம்பிடித்தான். சூசைட் பண்ணிடுவேன்னு மிரட்டினான். அவன் அம்மாவிடம் சொன்னேன். அவுங்களும் அவனுக்கு சப்போர்ட் பண்ணினாங்க.."
என் முகமாறுதல்களை அவதானித்தவள், சற்று நேரம் இடைவெளை விட்டாள். பொது இடங்களில், எதிலிருந்தும் சுலபத்தில் வெளிவந்துவிடும் தன்மை எனக்கு இருந்தது. நிர்ச்சலன மனத்தை முகம் அடையாளங் காட்டியது..
"நெகட்டிவ் முடிவு எடுக்காதிருக்கும்படியாக, திவாகரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற ட்ரை பண்ணினேன்.. அவனுடைய வேறு ஃபிரன்ஸை ஹெல்ப் கேட்டேன். சரின்னாங்க.. ஆனால், அதை வைத்து அன்பான பிளாக் மெயில் செய்தாங்க. அவுங்க அவுங்க பர்சனல் காரியங்களுக்கு என்னை யூஸ் பண்ணிக்கிட்டாங்க.. இந்த இழுபறிக்குள்ளதான் அந்த ஆக்சிடன்ட் நடந்துச்சு...."
நிறுத்தியவள் என்னை நிறுப்பது போலப் பார்த்தாள். எனக்குள் பல எண்ணவோட்டங்கள்.. இப்போ என்ன சொல்வது.. என்ன செய்வது. எதுவுமே தெரியவில்லை.. மொழி தெரியாத தேசத்தில் சிக்கியவன் போலானேன்.. பல சமயங்களில் உதவியதைப் போல இப்போதும் உதவினாள்..
"நேரமாச்சு.. நான் கிளம்பறேன்.. அப்புறமா உனக்கு ஃபோன் பண்றேன்"
எங்கெங்கோ அலைந்தேன்.. என்னென்னமோ செய்தேன்.. எதுவுமே உதவவில்லை.. வழமைக்கு மாறாக தாமதமாக ரூமுக்குப் போனேன்.. கேட்டின் சத்தம் கேட்டு விழித்த நாய் குரைக்க, யன்னல் திறந்து பார்த்த ஓனரம்மா முறைத்தாள். குனிந்த தலையுடன் அவளைக் கடந்தபோது செல்சிணுங்கியது.
"பதிலேதும் சொல்லலையே நீ"
"எதுவுமே தோணலை"
"..................."
"..................."
"என்னைப் பிடிக்கலையா"
"ஆஸ் எ ஃபிரன்ட்.. பிடிச்சிருக்கு"
"........................... ஏன்..???.................. நான் அழகில்லையா?"
"......."
"என் மதம்?"
"..........."
"என் லாங்குவேஜ்"
"........"
"எதுவுமே பேசாமல் இருந்தா.........."
"... தெரியல.."
"மாறவே மாட்டியா"
"இல்லை"
"............................................................... ஓகே லவ்வரா என்னை ஏன் உனக்குப் பிடிக்கலங்கிறதை, எனக்காக யோசிச்சுச் சொல்லு.. அந்த செக்கன்ல இருந்து நான் இதை மறந்துடுறேன்.. நீயும் மறந்துடு.. ஃபிரன்ட்சா இருப்போம்"
யோசிச்சேன்... யோசிச்சேன்... யோசிச்சேன்... யோசிச்சேன்..
"தெரியல"
அப்போதிருந்து பலமுறை ஏனெனத் தெரியாமலே தெரியலைன்னு அவளுக்கு சொல்லியுள்ளேன்...
செல் அதிர்ந்தது.. கீர்த்தனா எஸ் எம் எஸ்ஸி இருந்தாள்.
"ஐ ஆம் சாரி.. உதாசீனம் என்னை அப்டி பேச வெச்சுட்டுது. இனிமே அப்டிப் பேசமாட்டேன்.. நேரங்கிடைக்கும்போது மெயிலுகளுக்கு ரிப்ளை பண்ணு.. பை ஃபொர் நவ்"