rshan4
16-05-2008, 07:14 PM
ஒரு ஜீவன்.
காதலியாய் நினைத்துன்னை
காத்திருந்ததில்
கனவாகிப் போன காலங்கள்
மீண்டும் என் நினைவிற்கு
வரத்துடித்த போது
மரணித்துப் போனது
என் மனமும் - என் காதலும்
நித்தம் நித்தம் நினைத்துப் பார்த்ததில்
சற்றும் சலித்துப் போகாத - உன் காதல்
மீண்டும் மீண்டும் உன் நினைவோடு
இன்றும் என்றும் தூங்கிக் கொண்டிருந்தடி
உறக்கத்தை கலைத்து
உன்னை இழக்க முடியாமலும்
இருளிலேயே க(அ)ழிந்து போகும்
காலங்கள் மீண்டும் ஒரு முறை
விடியலுக்காய் காத்திருக்கின்றது கண்ணே..!!
காலங்கள் கடந்தாலும் கண்ணே
உன்னை மறவாத ஓர் நெஞ்சத்தின்
ஏக்கத்திற்காகவேனும்
ஒரு முறை பதில் கொடுத்து
உன் முகம் பார்த்து
உயிர் விட காத்திருக்கின்றது
ஒரு ஜீவன்.
-முகவன்-
:icon_b:
காதலியாய் நினைத்துன்னை
காத்திருந்ததில்
கனவாகிப் போன காலங்கள்
மீண்டும் என் நினைவிற்கு
வரத்துடித்த போது
மரணித்துப் போனது
என் மனமும் - என் காதலும்
நித்தம் நித்தம் நினைத்துப் பார்த்ததில்
சற்றும் சலித்துப் போகாத - உன் காதல்
மீண்டும் மீண்டும் உன் நினைவோடு
இன்றும் என்றும் தூங்கிக் கொண்டிருந்தடி
உறக்கத்தை கலைத்து
உன்னை இழக்க முடியாமலும்
இருளிலேயே க(அ)ழிந்து போகும்
காலங்கள் மீண்டும் ஒரு முறை
விடியலுக்காய் காத்திருக்கின்றது கண்ணே..!!
காலங்கள் கடந்தாலும் கண்ணே
உன்னை மறவாத ஓர் நெஞ்சத்தின்
ஏக்கத்திற்காகவேனும்
ஒரு முறை பதில் கொடுத்து
உன் முகம் பார்த்து
உயிர் விட காத்திருக்கின்றது
ஒரு ஜீவன்.
-முகவன்-
:icon_b: