டாக்டர் அண்ணாதுரை
15-05-2008, 07:57 AM
காக்கவேண்டிய கரங்கள்...
வேலியை பிய்த்தெடுத்து
இரும்புக்கடையில் பேரம் பேசும்
தமிழ்ப்பள்ளி காவலனா நீ....
இல்லை இல்லை கலவாடி!!!
நீ இருந்தென்ன.....? செத்துப்போ!!!
திங்கள் தோறும் தவராமல்
ஒழுக்கத்தின் விழுப்பங்களை
வியாக்கியானம் செய்கிறாய்.....
சனியும் ஞாயிரும் சூதாட்ட மையத்தில்
புட்டியோடு குட்டிகளுடன்!!!
பட்டினியோடு பச்சிளம் மாணவர்கள்.....
மாணியத்தில் கிடைக்கும் ஒரு பிடி சோறு...
அதிலுமா சேறு?
சோறு தின்றால் பல் வலிக்குமா?
வலிக்குதடா.... சோறெல்லாம் கல்லடா!!!
தமிழ்ப்பள்ளி காவலனா நீ....
இல்லை இல்லை கலவாடி!!!
நீ இருந்தென்ன.....? செத்துப்போ!!!
தமிழ்தந்த வாழ்வடா இது...
தமிழ்குழந்தைகளுக்காக உயிரை கொடுக்கவேண்டாம்..
அவர்களின் உயிரை எடுக்காதே!!
சொந்த இனத்தின் இதயத்தையே தின்கிறாயே....
உன் உடலில் என்ன...
மரவட்டைகளின் ரத்தமா?
முட்டால்கள் இருக்கும்வரை
நீ அறிவாளிதான்....
எனக்குமட்டும் நீ அரை வாளிதான்!!!
தூங்கிய சமுதாயச் சமுத்திரத்தில்..
படகுவிட்ட உன் காலம்
இன்றோடு பாரையில் சமாதி!
உண்மையின் அவதாரம்
இன்றுதான் ஆரம்பம்...
இனிதான் உனக்கு
அழிவின் புதைவிழா!!!
தமிழ்ப்பள்ளி காவலனா நீ....
இல்லை இல்லை கலவாடி!!!
நீ இருந்தென்ன.....? செத்துப்போ!!!
ஆத்திரத்தோடு....
அண்ணாதுரை
வேலியை பிய்த்தெடுத்து
இரும்புக்கடையில் பேரம் பேசும்
தமிழ்ப்பள்ளி காவலனா நீ....
இல்லை இல்லை கலவாடி!!!
நீ இருந்தென்ன.....? செத்துப்போ!!!
திங்கள் தோறும் தவராமல்
ஒழுக்கத்தின் விழுப்பங்களை
வியாக்கியானம் செய்கிறாய்.....
சனியும் ஞாயிரும் சூதாட்ட மையத்தில்
புட்டியோடு குட்டிகளுடன்!!!
பட்டினியோடு பச்சிளம் மாணவர்கள்.....
மாணியத்தில் கிடைக்கும் ஒரு பிடி சோறு...
அதிலுமா சேறு?
சோறு தின்றால் பல் வலிக்குமா?
வலிக்குதடா.... சோறெல்லாம் கல்லடா!!!
தமிழ்ப்பள்ளி காவலனா நீ....
இல்லை இல்லை கலவாடி!!!
நீ இருந்தென்ன.....? செத்துப்போ!!!
தமிழ்தந்த வாழ்வடா இது...
தமிழ்குழந்தைகளுக்காக உயிரை கொடுக்கவேண்டாம்..
அவர்களின் உயிரை எடுக்காதே!!
சொந்த இனத்தின் இதயத்தையே தின்கிறாயே....
உன் உடலில் என்ன...
மரவட்டைகளின் ரத்தமா?
முட்டால்கள் இருக்கும்வரை
நீ அறிவாளிதான்....
எனக்குமட்டும் நீ அரை வாளிதான்!!!
தூங்கிய சமுதாயச் சமுத்திரத்தில்..
படகுவிட்ட உன் காலம்
இன்றோடு பாரையில் சமாதி!
உண்மையின் அவதாரம்
இன்றுதான் ஆரம்பம்...
இனிதான் உனக்கு
அழிவின் புதைவிழா!!!
தமிழ்ப்பள்ளி காவலனா நீ....
இல்லை இல்லை கலவாடி!!!
நீ இருந்தென்ன.....? செத்துப்போ!!!
ஆத்திரத்தோடு....
அண்ணாதுரை