PDA

View Full Version : போல



ஆதி
09-05-2008, 04:22 AM
வானம் பூக்களில்
பனித்துளிகளால்
உனக்கு கடிதம்
எழுதுகிறது

நான்
கண்ணீர்துளிகளால்
எழுதுவதைப் போல

பாலகன்
09-05-2008, 05:15 AM
வானம் பூக்களில்
பனித்துளிகளால்
உனக்கு கடிதம்
எழுதுகிறது

நான்
கண்ணீர்துளிகளால்
எழுதுவதைப் போல

நண்பரே எளிமையான கவிதை இது
வாழ்த்துக்கள்,,,, மேலும் தலைப்பை போல என்பதற்கு பதிலாக அதுபோல என்று மாற்றினால் என்ன (ஆலோசிக்க மட்டுமே தவறாக எண்ணவேன்டாம்)

நீங்கள் யாருக்கு எழதினீர்கள் என்று பொருள்படும்படி இருந்தால் நலமாயிருக்கும்

அன்புடன்
பில்லா

ஆதி
09-05-2008, 11:23 AM
பில்லா அண்ணா, எளிமையாக எழுத வேண்டும் என்பதே என் ஆசை..

பனித்துளியையும் நான் கண்ணீராய்தான் பார்க்கிறேன் என்பதைக் குறிக்கவே "போல" என்று தலைப்பிட்டிருந்தேன்..

கவிதையின் பொருள் புரிந்தால் போதுமே யாருக்கு எழுதினோம் என்பதையுமா புரியவைக்க வேண்டும்..

உங்கள் வாழ்த்துக்களும் ஆலோசனைக்கும் நன்றி யண்ணா..

ஷீ-நிசி
09-05-2008, 01:54 PM
நன்றாக உள்ளது ஆதி.. இன்னும் புதுமையாய் எழுத வாழ்த்துக்கள்!

அனுராகவன்
11-05-2008, 01:05 AM
பனித்துளி
இன்னும்
காயவில்லை
என் கண்ணீர்
விடும் தூரம்...


ஆதி அருமை..
இன்னும் தொடருங்கள்..

பிச்சி
13-05-2008, 04:01 PM
வாவ்... சின்னதா அழகா........ அருமை அருமை..

அன்புடன்
பிச்சி

ஆதி
14-05-2008, 08:36 AM
நன்றாக உள்ளது ஆதி.. இன்னும் புதுமையாய் எழுத வாழ்த்துக்கள்!

நன்றி ஷீ, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி, நிச்சயம் முயற்சிக்கிறேன், இன்னும் புதுமையாய் எழுத..

யவனிகா
14-05-2008, 08:54 AM
பனித்துளியை கண்ணீருடன் ஒப்பிட சற்று தயக்கமாகத் தான் இருக்கிறது...
கவிதை சுவைக்கிறது...

உன் கடிதம்
படிக்கும் நேரம்...
நீ எழுதியிருந்த
எல்லா வார்த்தைளில்
தகவல்கள் அறிந்தேன்...
உன் கண்ணீர் பட்டு
அழிந்த வார்த்தைகளில்
உன்னையே உணர்ந்தேன்...

ஆதி
20-05-2008, 08:16 AM
ஆதி அருமை..
இன்னும் தொடருங்கள்..

நன்றி அனு அக்கா..


வாவ்... சின்னதா அழகா........ அருமை அருமை..

அன்புடன்
பிச்சி

நன்றி சகோதரி..

கண்மணி
20-05-2008, 08:41 AM
முகத்தில் வான்
முகிழும் அரமும்
வேர்களில் உழைப்பும்
சிந்திய துளிகள்
நிர்ச்சலனமாய் பூ

இளசு
14-06-2008, 11:42 PM
காலவெயில் காயவைக்கட்டும்..

வாழ்த்துகள் ஆதி!

பென்ஸ்
14-06-2008, 11:45 PM
காலவெயில் காயவைக்கட்டும்..

வாழ்த்துகள் ஆதி!

கவிதையை வாசித்து ,
எழுத எத்தனிக்கும் போது
நான் எழுத வேண்டியவை
எழுதபட்டிருக்கிறது....

நன்றி இளசு
வாழ்த்துகள் ஆதி....

இளசு
14-06-2008, 11:47 PM
கவிதையை வாசித்து ,
எழுத எத்தனிக்கும் போது
நான் எழுத வேண்டியவை
எழுதபட்டிருக்கிறது....

....


இது நமக்குள் முதல் முறையல்லவே பென்ஸ்!:icon_b: