PDA

View Full Version : மெளன பார்வை



நம்பிகோபாலன்
02-05-2008, 10:46 AM
உன்னை பற்றி
எழுத வந்து
எழுதாமல் போன
வார்த்தைகள் எல்லாம்
என்னை கொல்ல
தயாராக இருக்கிறதாம்
நீயே சொல்லிவிடு
நான் ஏற்கனவே
உன் மெளன பார்வையில்
இறந்துவிட்டேன் என்று....

பூமகள்
02-05-2008, 12:50 PM
உன்னை
எழுதாத வார்த்தைகள்
எழும்ப மறுத்து
இதயத்தின் இடுக்கியிருந்து
இருட்டறையிலேயே
அடம்பிடித்து
அழுகின்றன..
தயவு செய்து
சாவியைத் தந்துவிடு..
உள்வெளிச்சம் திருடி
என் இதயக் கதவினை
பூட்டியவள் நீ தானே??!!

==============================
அழகான கவிதை..!!
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் நம்பி அண்ணா. :)

பாலகன்
02-05-2008, 09:03 PM
இரண்டு கவிதைகளும் அருமை,,,,,,

நன்றி நம்பி மற்றும் அனு

அன்புடன்
பில்லா

shanthija
05-05-2008, 09:35 PM
நன்பரே உங்கல் கவி பத்து வரியாய் இருந்தாலும் பார்க்க அழகாய் உள்ளது வாழ்த்துக்கல் ..

அன்புடன்
லதுஜா

அனுராகவன்
06-05-2008, 12:39 AM
நன்றி நண்பரே!!
நம்பி படிக்கலாம்;நம்பிகோபாலனின் கவியே!!
நறுக்கென்று நாழுவரி...
நன்றி தொடரட்டும் உங்கள் பணி..