rambal
04-04-2003, 01:41 PM
'பள்ளி மாணவி
கற்பழித்துக் கொலை'
தலைப்புச் செய்தி கண்டு
அதற்கு மேல் படிக்கச் சகிக்காமல்
செய்தித்தாள் மூடும்..
வீட்டை விட்டு வெளி வந்து
'அம்மா தாயே'
குரலை அலட்சியம் செய்து
வண்டி ஏறிப் புறப்படும்..
சிகப்பு விளக்கு கண்டு
நிற்கையில்
பின் வந்த வாகனம்
என்னை தேச குற்றம் செய்து
விட்டதாய் கத்திவிட்டு
சாலை விதி மீறி செல்லும்..
காத்திருந்த சிவப்புவிளக்கு
காணச்சகியாமல்
முகத்தைத் திருப்புகையில்
பிறந்த குழந்தையை
மருத்துவமனையில் இருந்து
களவாடி வந்து
பிச்சை கேட்பவளைக் கண்டு
அடக்க முடியா ஆத்திரம் வரும்..
விழுந்து விட்ட பச்சை விளக்கு
கண்டு வாகனத்தை உயிர்ப்பித்து
நகர்வதற்குள்
பின் இருந்து பல ஒலிகள்
காதைக் கிழிக்கும்..
சீரான வேகத்தில்
போவது தவறு என்று
பின்னால் வரும்
பல்லவன் ஓரமாய்
ஒதுக்கிவிட்டுப் போகும்..
அலுவலகம் போய் சேர்ந்து
அமர்கையில்
அந்தப் பகுதி கரை வேட்டிகள்
வந்து நின்று
கூட்டம் நடத்த 'மாமூலாய்'
பணம் கேட்கும்..
கேட்ட பணம் கொடுத்த பின்னே
செல்லும்...
மதிய உணவிற்கு
உணவு விடுதி நோக்கி
நடக்கையில்
குப்பைத்தொட்டியில் வந்து விழும்
இலைக்கு சண்டை
நடப்பது கண்டு
உண்ணாமல் திரும்பும்..
வருமானவரிக்கு
காட்டிய கணக்கு பொய் என்று
ஒரு கும்பல் அழகாய் ஆடை அணிந்து
மிரட்டி பணம் பறிக்கும்..
பறித்த பின்பு
'எங்களையும் அப்பைக்கப்ப கண்டுக்கிடனும் சார்'
என்று ரகசிய எச்சரிக்கையும்
விடுத்துப் போகும்...
அண்ணாசாலையில் அரைகுறை
ஆடையோடு புதிய படத்திற்கு போடப்பட்ட
பூஜையை கண்டு காணச்சகியாமல்
போகையில்
வெள்ளையும் காக்கியும்
சீருடை அணிந்து
வழிப்பறி கும்பல் ஒன்று
காத்திருப்பது கண்டு
பாதை திருப்பும்...
ஸ்பென்சர் கடக்கையில்
லேசாய் தலை திருப்பியும் பார்க்கும்..
நாகரிக விழா நடக்காமலேயே
அங்கு ஒரு
இளமைக் குவியல்கள்
கொட்டிக் கிடப்பதைக் கண்டு
வியந்து போகும்..
உடலை பரிசோதனை
செய்ய மருத்துவமனைக்குள்
புகுந்தால்
அங்கு ஒரு பகல் கொள்ளை
நடப்பதைக் கண்டு
கண்ணும் கொஞ்சம் கலங்கும்..
எல்லாம் முடிந்து
கிறுக்கிக்கொடுத்த
மருந்து சீட்டை
எதிரே இருக்கும்
மருந்துக் கடையில் கொடுக்கையில்
அங்கு கொடுக்கப்பட்ட
காலாவதியான மருந்து கண்டு
சண்டையும் போடும்...
காக்கி சீருடை அணிந்த
ஒரு கொள்ளைக்காரன் வந்து
சமரசம் என்ற பெயரில்
ரூபாய் ஐம்பதையும்
வாங்கி விட்டு
'பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்கே
உனக்கு என்னத்துக்கு இந்த வேலை'
என்று அறிவுரையும் சொல்லி விட்டுப் போகும்..
வீடு போய் சேர்ந்தால்
நிம்மதி என்று
வீடு போகும்...
மின்சாரம் இல்லாத
வீடு கண்டு
வந்த கோபம் அடக்கும்..
வந்து விட்ட தண்ணீர் வண்டியில்
தண்ணீர் பிடிக்க கையில்
வாளியை எடுத்துக் கொண்டும் ஓடும்..
தண்ணீர் பிடிக்க வந்த
இரு பெண்கள்
மாறி மாறி அடுத்தவர் குடும்ப மானத்தை
கப்பலேற்றிக் கொண்டிருப்பதை
சகித்துக் கொண்டு
தண்ணீரும் பிடிக்கும்...
மின்சாரம் இல்லாதபோது
மட்டும் அதைக் கண்டுபிடித்த
அறிவியல்வாதியின்
பெயரும் ஏனோ
நினைவிற்கு வரும்...
தூக்கம் வராது
தவிக்கும் பொழுது
மனசாட்சி மிருகம்
கொஞ்சம் சத்தமாய்
கேட்கும்..
'இதுதான் இந்தியா..
இதுக்கு
நீ என்னத்தை செஞ்சு கிழிச்ச'
துயரம் தாங்காமல்
சில விசும்பல்களை பதிலாய்
கொடுத்துவிட்டு
தூங்கும்...
கற்பழித்துக் கொலை'
தலைப்புச் செய்தி கண்டு
அதற்கு மேல் படிக்கச் சகிக்காமல்
செய்தித்தாள் மூடும்..
வீட்டை விட்டு வெளி வந்து
'அம்மா தாயே'
குரலை அலட்சியம் செய்து
வண்டி ஏறிப் புறப்படும்..
சிகப்பு விளக்கு கண்டு
நிற்கையில்
பின் வந்த வாகனம்
என்னை தேச குற்றம் செய்து
விட்டதாய் கத்திவிட்டு
சாலை விதி மீறி செல்லும்..
காத்திருந்த சிவப்புவிளக்கு
காணச்சகியாமல்
முகத்தைத் திருப்புகையில்
பிறந்த குழந்தையை
மருத்துவமனையில் இருந்து
களவாடி வந்து
பிச்சை கேட்பவளைக் கண்டு
அடக்க முடியா ஆத்திரம் வரும்..
விழுந்து விட்ட பச்சை விளக்கு
கண்டு வாகனத்தை உயிர்ப்பித்து
நகர்வதற்குள்
பின் இருந்து பல ஒலிகள்
காதைக் கிழிக்கும்..
சீரான வேகத்தில்
போவது தவறு என்று
பின்னால் வரும்
பல்லவன் ஓரமாய்
ஒதுக்கிவிட்டுப் போகும்..
அலுவலகம் போய் சேர்ந்து
அமர்கையில்
அந்தப் பகுதி கரை வேட்டிகள்
வந்து நின்று
கூட்டம் நடத்த 'மாமூலாய்'
பணம் கேட்கும்..
கேட்ட பணம் கொடுத்த பின்னே
செல்லும்...
மதிய உணவிற்கு
உணவு விடுதி நோக்கி
நடக்கையில்
குப்பைத்தொட்டியில் வந்து விழும்
இலைக்கு சண்டை
நடப்பது கண்டு
உண்ணாமல் திரும்பும்..
வருமானவரிக்கு
காட்டிய கணக்கு பொய் என்று
ஒரு கும்பல் அழகாய் ஆடை அணிந்து
மிரட்டி பணம் பறிக்கும்..
பறித்த பின்பு
'எங்களையும் அப்பைக்கப்ப கண்டுக்கிடனும் சார்'
என்று ரகசிய எச்சரிக்கையும்
விடுத்துப் போகும்...
அண்ணாசாலையில் அரைகுறை
ஆடையோடு புதிய படத்திற்கு போடப்பட்ட
பூஜையை கண்டு காணச்சகியாமல்
போகையில்
வெள்ளையும் காக்கியும்
சீருடை அணிந்து
வழிப்பறி கும்பல் ஒன்று
காத்திருப்பது கண்டு
பாதை திருப்பும்...
ஸ்பென்சர் கடக்கையில்
லேசாய் தலை திருப்பியும் பார்க்கும்..
நாகரிக விழா நடக்காமலேயே
அங்கு ஒரு
இளமைக் குவியல்கள்
கொட்டிக் கிடப்பதைக் கண்டு
வியந்து போகும்..
உடலை பரிசோதனை
செய்ய மருத்துவமனைக்குள்
புகுந்தால்
அங்கு ஒரு பகல் கொள்ளை
நடப்பதைக் கண்டு
கண்ணும் கொஞ்சம் கலங்கும்..
எல்லாம் முடிந்து
கிறுக்கிக்கொடுத்த
மருந்து சீட்டை
எதிரே இருக்கும்
மருந்துக் கடையில் கொடுக்கையில்
அங்கு கொடுக்கப்பட்ட
காலாவதியான மருந்து கண்டு
சண்டையும் போடும்...
காக்கி சீருடை அணிந்த
ஒரு கொள்ளைக்காரன் வந்து
சமரசம் என்ற பெயரில்
ரூபாய் ஐம்பதையும்
வாங்கி விட்டு
'பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்கே
உனக்கு என்னத்துக்கு இந்த வேலை'
என்று அறிவுரையும் சொல்லி விட்டுப் போகும்..
வீடு போய் சேர்ந்தால்
நிம்மதி என்று
வீடு போகும்...
மின்சாரம் இல்லாத
வீடு கண்டு
வந்த கோபம் அடக்கும்..
வந்து விட்ட தண்ணீர் வண்டியில்
தண்ணீர் பிடிக்க கையில்
வாளியை எடுத்துக் கொண்டும் ஓடும்..
தண்ணீர் பிடிக்க வந்த
இரு பெண்கள்
மாறி மாறி அடுத்தவர் குடும்ப மானத்தை
கப்பலேற்றிக் கொண்டிருப்பதை
சகித்துக் கொண்டு
தண்ணீரும் பிடிக்கும்...
மின்சாரம் இல்லாதபோது
மட்டும் அதைக் கண்டுபிடித்த
அறிவியல்வாதியின்
பெயரும் ஏனோ
நினைவிற்கு வரும்...
தூக்கம் வராது
தவிக்கும் பொழுது
மனசாட்சி மிருகம்
கொஞ்சம் சத்தமாய்
கேட்கும்..
'இதுதான் இந்தியா..
இதுக்கு
நீ என்னத்தை செஞ்சு கிழிச்ச'
துயரம் தாங்காமல்
சில விசும்பல்களை பதிலாய்
கொடுத்துவிட்டு
தூங்கும்...