pathman
28-04-2008, 08:54 AM
ஓரு இலங்கையர் செத்து நரகத்துக்குப் போனார் ஆச்சரியமாக அங்கு ஒவ்வொரு நாட்டினருக்கும் நரகம் இருப்பதைப் பார்த்தான். முதலில் ஜெர்மன் நரகம் இருந்தது அங்கு வாசலில் இருப்பவனிடம் இங்கே என்ன பன்னுவார்கள் ? என்று கேட்டார்.
அதற்கு அவன் இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணிநேரத்திற்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்பறம் முள் படுக்கையில் போட்டு ஒரு மணிநேரம் படுக்க சொல்வார்கள் பிறகு ஜெர்மானிய பேய் வந்து மீத நாள் முழுவதும் அடிக்கும் என்றான்
கேட்கவே நன்றாக இல்லை ஆகவே அவன் அடுத்த நரகத்திற்கு போனார் அடுத்தது அமெரிக்க நகரம் அங்கும் அதே முறை தான் அதன் பிறகு ருசியா,கனடா,இங்கிலாந்து .... ஆக இப்படி. ஆனால் ஆனால் அவை எல்லாம் ஜெர்மன் நரகத்தைப் போலத்தான் என்றும் தெரிந்தது.
இறுதியில் இருந்தது நம்ம இலங்கை நரகம். அதன் வாசலில் நீண்ட வரிசை வேறு. என்னடா இது நம்ம ஆட்கள் அவ்வளவு கூடி போய்விட்டார்களா என்று அருகில் போய் பார்த்தால் அங்கே நம்மவர்களோடு ஜெர்மானியர்கள், ரசியர்கள், அமெரிக்கர்கள் இன்னும் பலர் நின்று கொண்டு இருந்தனர். வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒருவனிடம் நம்மவர் கேட்டார் இங்கே என்ன பண்ணுவார்கள்?
அதற்கு அவன் இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணிநேரத்திற்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்பறம் முள் படுக்கையில் போட்டு ஒரு மணிநேரம் படுக்க சொல்வார்கள் பிறகு இலங்கை பேய் வந்து மீத நாள் முழுவதும் அடிக்கும் என்றான்.
இதுவும் மற்ற நரகங்களை போலத்தான். அப்புறம் ஏன் இவ்வளவு கூட்டம் இங்கு இருக்கின்றது ? என்று கேட்டான்
"எனெனில், இங்கு மின்சாரம் கிடையாது. ஆகவே மின்சார நாற்காலி வேலை செய்யாது முள் படுக்கையில் இருந்த முட்களை எல்லாம் யாரோ திருடிப்போய் விட்டார்கள். அப்புறம் இலங்கை பேய் அரசாங்க பணியாளன் ஆகவே அது வரும் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு கான்டீனுக்கு டீ குடிக்க போய் விடும் என்றான்"
அதற்கு அவன் இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணிநேரத்திற்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்பறம் முள் படுக்கையில் போட்டு ஒரு மணிநேரம் படுக்க சொல்வார்கள் பிறகு ஜெர்மானிய பேய் வந்து மீத நாள் முழுவதும் அடிக்கும் என்றான்
கேட்கவே நன்றாக இல்லை ஆகவே அவன் அடுத்த நரகத்திற்கு போனார் அடுத்தது அமெரிக்க நகரம் அங்கும் அதே முறை தான் அதன் பிறகு ருசியா,கனடா,இங்கிலாந்து .... ஆக இப்படி. ஆனால் ஆனால் அவை எல்லாம் ஜெர்மன் நரகத்தைப் போலத்தான் என்றும் தெரிந்தது.
இறுதியில் இருந்தது நம்ம இலங்கை நரகம். அதன் வாசலில் நீண்ட வரிசை வேறு. என்னடா இது நம்ம ஆட்கள் அவ்வளவு கூடி போய்விட்டார்களா என்று அருகில் போய் பார்த்தால் அங்கே நம்மவர்களோடு ஜெர்மானியர்கள், ரசியர்கள், அமெரிக்கர்கள் இன்னும் பலர் நின்று கொண்டு இருந்தனர். வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒருவனிடம் நம்மவர் கேட்டார் இங்கே என்ன பண்ணுவார்கள்?
அதற்கு அவன் இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணிநேரத்திற்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்பறம் முள் படுக்கையில் போட்டு ஒரு மணிநேரம் படுக்க சொல்வார்கள் பிறகு இலங்கை பேய் வந்து மீத நாள் முழுவதும் அடிக்கும் என்றான்.
இதுவும் மற்ற நரகங்களை போலத்தான். அப்புறம் ஏன் இவ்வளவு கூட்டம் இங்கு இருக்கின்றது ? என்று கேட்டான்
"எனெனில், இங்கு மின்சாரம் கிடையாது. ஆகவே மின்சார நாற்காலி வேலை செய்யாது முள் படுக்கையில் இருந்த முட்களை எல்லாம் யாரோ திருடிப்போய் விட்டார்கள். அப்புறம் இலங்கை பேய் அரசாங்க பணியாளன் ஆகவே அது வரும் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு கான்டீனுக்கு டீ குடிக்க போய் விடும் என்றான்"