ராஜா
26-04-2008, 12:21 PM
பஞ்சாப் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்தை அறைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தப் பிரச்சனை தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என்று மும்பை அணி கேப்டன் ஹர்பஜனுக்கு, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஹர்பஜன் தனது தரப்பு விளக்கத்தை இம்மாதம் 28-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை போட்டி நடுவர் ஃபரூக் எஞ்சினீர் விசாரிப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஹர்பஜன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுவிடுவார்.
இதுதொடர்பான விசாரணையை மேற்கொள்ள ஐபிஎல் கமிஷ்னர் லலித் மோடி உத்தரவிட்டுள்ள நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கு இந்தச் சம்பவம் உகந்ததல்ல என்றும், இதனை முக்கியப் பிரச்சனையாகக் கருதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மொஹாலியில் நேற்று பஞ்சாப் அணிக்கும், மும்பை அணிக்கும் இடையே நடந்த போட்டியின்போது, ஹர்பஜன் சிங்குடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் மனமுடைந்து அழுதார்.
இவ்விருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டதால், பஞ்சாப் அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஸ்ரீசாந்தை, மும்பை இந்தியன் கேப்டன் ஹர்பஜன் சிங் அறைந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பிறகு, ஸ்ரீசாந்தை சமாதானப்படுத்தும் விதமாக நீண்ட நேரம் பேசி ஹர்பஜன் மன்னிப்பும் கேட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரம் தெரிவித்தன.
இந்தப் போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு ஹர்பஜனிடம், "ஹார்ட் லக்" என்று வெறுப்படையச் செய்யும் தொனியில் ஸ்ரீசாந்த் பேசியதாகவும், அது கோபமாக உருவெடுத்ததால்தான் ஹர்பஜன் அறைந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்டம் நிறைவடைந்த பிறகு, இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு, ஹர்பஜன் பதிலளிக்க மறுத்துவிட்டார். கிரிக்கெட்டைப் பற்றி மட்டும் பேசுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
அதேநேரத்தில், இப்போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ் சிங்கும், அந்த அணியின் பயிற்சியாளர் டாம் மூடியும் ஹர்பஜனின் செயலைக் கடுமையாக கண்டித்தனர்.
இந்த விவகாரம் மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளதுடன், பிசிசிஐ-யும் நடவடிக்கை மேற்கொண்டுள்ள சூழலில், பாதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் தனது நிலையில் இருந்து பின்வாங்கியுள்ளார். இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்றும் ஹர்பஜன் தனது மூத்த சகோதரர் போன்றவர் என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
ஹர்பஜன் தனது தரப்பு விளக்கத்தை இம்மாதம் 28-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை போட்டி நடுவர் ஃபரூக் எஞ்சினீர் விசாரிப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஹர்பஜன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுவிடுவார்.
இதுதொடர்பான விசாரணையை மேற்கொள்ள ஐபிஎல் கமிஷ்னர் லலித் மோடி உத்தரவிட்டுள்ள நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கு இந்தச் சம்பவம் உகந்ததல்ல என்றும், இதனை முக்கியப் பிரச்சனையாகக் கருதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மொஹாலியில் நேற்று பஞ்சாப் அணிக்கும், மும்பை அணிக்கும் இடையே நடந்த போட்டியின்போது, ஹர்பஜன் சிங்குடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் மனமுடைந்து அழுதார்.
இவ்விருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டதால், பஞ்சாப் அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஸ்ரீசாந்தை, மும்பை இந்தியன் கேப்டன் ஹர்பஜன் சிங் அறைந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பிறகு, ஸ்ரீசாந்தை சமாதானப்படுத்தும் விதமாக நீண்ட நேரம் பேசி ஹர்பஜன் மன்னிப்பும் கேட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரம் தெரிவித்தன.
இந்தப் போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு ஹர்பஜனிடம், "ஹார்ட் லக்" என்று வெறுப்படையச் செய்யும் தொனியில் ஸ்ரீசாந்த் பேசியதாகவும், அது கோபமாக உருவெடுத்ததால்தான் ஹர்பஜன் அறைந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்டம் நிறைவடைந்த பிறகு, இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு, ஹர்பஜன் பதிலளிக்க மறுத்துவிட்டார். கிரிக்கெட்டைப் பற்றி மட்டும் பேசுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
அதேநேரத்தில், இப்போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ் சிங்கும், அந்த அணியின் பயிற்சியாளர் டாம் மூடியும் ஹர்பஜனின் செயலைக் கடுமையாக கண்டித்தனர்.
இந்த விவகாரம் மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளதுடன், பிசிசிஐ-யும் நடவடிக்கை மேற்கொண்டுள்ள சூழலில், பாதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் தனது நிலையில் இருந்து பின்வாங்கியுள்ளார். இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்றும் ஹர்பஜன் தனது மூத்த சகோதரர் போன்றவர் என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)