PDA

View Full Version : புதுமை



நாகரா
26-04-2008, 06:02 AM
இது வரை பார்த்தேயிராத
புதிய பறவைகள்
பறந்தன வானில்.
விஷயந்தேடி வந்தவனை
விரிந்த வானம்
வியப்பிலாழ்த்த
எண்ணக் கவணிலிருந்து
விடுபட்டன சொற்கள்.
சொற்களின் குறி தப்ப
வசப்படாது மறைந்தன
பறவைகள்.
விழுந்த சொற்களைப்
பொறுக்க
குனிந்த போது
இது வரை பார்த்தேயிராத
புதிய பூக்கள்
சிரித்தன மண்ணில்.
சொற்களையும் பொறுக்காமல்
பூக்களையும் பறிக்காமல்
எண்ணக் கவணைச்
சுழற்றிக் கொண்டே
மன வெளியில்
சும்மா நடந்தேன்.
இது வரை பதித்தேயிராத
புதிய சுவடுகள்
விழுந்தன தாளில்.

kavitha
26-04-2008, 09:43 AM
அடடே...அப்புறம்?

மனோஜ்
26-04-2008, 09:52 AM
சிறப்பான வரிகள்
மனதில் புதியவை தென்படுத்தும் காதல்

நாகரா
26-04-2008, 12:43 PM
உம் பின்னூட்டங்களுக்கு நன்றி கவிதா, மனோஜ்.