PDA

View Full Version : புரட்சி பெண்கள்.........!



rshan4
18-04-2008, 07:11 PM
புரட்சி பெண்கள்.........!

கண்ணகி மரபில் மாதர் வாழ்ந்தும்
மன்னவர் சிலர் மாதவியிடமே!
இவர் அணங்கு செயல் கொண்டு
அன்பு கொள்வதா?
பிணக்குப் பொற்று பிரிந்து வாழ்வாதா?

பண்புடையார் சிலர்
பாரினில் வாழ்வதால்
விட்டுக்கொடுத்து வாழ்வதில்
வீண் குற்றம் ஏது?

வள்ளுவன் வகுத்த வரிகள் சில
வாழ்க்கைக்கு உதாரணமிங்கே.
"தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்"
பொருள் அறிந்தால்
புரிந்து கொள்வீர்.

கேளீர் பேச்சுக்காக
கீழ்ப்படிதல் கண்டு
மானிடர் சிலர் மண்ணுலகில்
சிறைகாக்கும் காப்புக் கொண்டு
நிறைகாக்கும் காப்பின்
நிலமையை மறந்து விடுகின்றனர்.

உள்ளாற்றுக் கவலை கொண்டு
உள்ளம் கனத்தாலும்
கையறு நிலைதான் கடைசிவரையில்.

வடுப் பெயர் கொள்ளாது
நாண் கொண்டு
வெண்மை கெட்டு வாழ
தக்கார் யார் உண்டு?

உறவைப் பாதீடு பண்ணி
உள்ளத்தால் இணைந்து
நெஞ்சத்தில் நல்லவர்களாய்
நீடுடி வாழ்க எம்சமுதாயம்
வாழ்த்துங்கள்.

குறைகாணாதீர்
வல்லினம் - மெல்லினம்
இடை(யே) இனம்
சேர்காதீர்.

இணைந்தே செயற்படுவோம்!

- முகவன் -
:icon_b: