சிவா.ஜி
17-04-2008, 11:31 AM
கண்டம் விட்டு கண்டம் தாண்டி பணியாற்றும் வாய்ப்பை இப்போது நான் பெற்றிருக்கிறேன். ஆனால் எத்தனைக் கண்டத்தை தாண்டி வந்திருக்கிறேன் என்று இந்தப் பதிவில் உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்
கண்டம்-1
அப்போது ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். கும்பகோணம் தாலுக்காவில் உள்ள ஆடுதுறையில் இருந்தோம். எங்கள் வீட்டின் பின் பக்கத்தில் வீரசோழன் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. இப்போது போலில்லாமல் அந்தக் காலங்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும்.
ஆற்றின் இரு கரைகளும் சிமெண்ட்டால் உருவாக்கப்பட்டிருந்தது. இடையில் படித்துறைகள். அதிலொன்றில்தான் நாங்கள் வழக்கமாய் குளிப்போம். எனக்கு அப்போது நீச்சல் தெரியாது. அன்று நானும் என் தமக்கையும் குளிக்கப் போனோம். என்னைவிட ஒரு வயதுதான் மூத்தவர் அவர். நான் அமைதியாகவெல்லாம் குளித்துவிட்டு வரும் ரகமல்ல. நீச்சல் தெரியாவிட்டாலும் ஏதாவது சாகசம் செய்ய நினைத்து, படித்துறையை விட்டு கொஞ்சம் தள்ளி, சரிவாய் இருந்த கரையிலிருந்து சறுக்கிக்கொண்டுபோய் தண்ணிரில் விழுந்து, கரையைப் பிடித்துக்கொண்டே ஆற்றின் ஓட்டத்தில் அழைத்துவரப்பட்டு படி வந்ததும் அதில் ஏறிக்கொள்வது என் அன்றாட விளையாட்டு. ஆனால் படியைத்தாண்டிவிட்டால் நீரோட்டம் அதிகரிக்கும் என்னால் சமாளிக்க முடியாது. ஆபத்தை அறியாமலேயே அந்த விளையாட்டை தொடர்ந்து வந்தேன்.
அன்றும் அப்படி விளையாடினேன். அதைப் பார்த்துக்கொண்டிருந்த என் அக்காவும் அப்படி செய்ய ஆசைப்பட்டு என்னைப் போலவே சறுக்கிப்போய் தண்ணிரில் விழுந்து கரையைப் பிடித்துக்கொண்டே படி வரை வந்துவிட்டார். ஆனால் படியில் ஏற முடியவில்லை நீர் இழுத்துக்கொண்டு போகத்தொடங்கிவிட்டது. படியில் நின்றிருந்த நான் உடனே அவருடைய கையைப் பிடித்து இழுக்க முயன்றேன். சரியாக பாலன்ஸ் செய்யாததால் அவர் இழுப்புக்கு நானும் தண்ணீரில் விழுந்துவிட்டேன். அவ்வளவுதான் இரண்டுபேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டோம்.
அப்போதுதான் எங்களைத்தேடி படித்துறைக்கு வந்த எங்கள் அம்மா இதைப்பார்த்ததும் தண்ணீரில் குதித்து விட்டார். அம்மாவுக்கு நன்றாக நீச்சல் தெரியும். அம்மா குதித்ததையும், நாங்கள் அடித்து செல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருந்த கரையில் இருந்த ஒருவரும் குதித்துவிட்டார். ஆனால் அவர்களுக்கும் எங்களுக்குமான இடைவெளி அதிகமாகிவிட்டிருந்தது. அவர்கள் எங்களை நெருங்குவதற்குள் நாங்கள் ஒருவருக்கொருவர் அழுத்திக்கொண்டதில் மூழ்கி, மூழ்கி எழுந்தோம். கரையைவிட்டு அகன்று போய்விட்டதால் பிடிமானம் இல்லாமல் புரண்டபடி ஆற்று நீரோடு அடித்து செல்லப்பட்டோம்.
அவ்வளவுதான் நம் கதை என்று நினைத்த போது, எங்களுக்கு முன்னால் கரையிலிருந்து வளைந்து தண்ணீரைத் தொட்டுக்கொண்டிருந்த இரண்டு மூங்கில்களைப் பார்த்ததும், அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, என் அக்காவையும் பிடித்திழுத்து மூங்கிலைப் பிடித்துக்கொள்ளச் செய்தேன். அக்கா மூங்கிலைப் பிடித்துக்கொண்டு நீரிலேயே இருக்க நான் அதன் மீது ஏறி அமர்ந்து கொண்டேன். அதற்குள் என் அம்மாவும், அந்த மற்றொருவரும் வந்து விட்டார்கள். கரையில் ஏறிக்கொண்டு எங்களையும் கரையேற்றினார்கள். கரைக்கு வந்தும் என் கால்கள் பரதம் ஆடிக்கொண்டிருந்தது. அம்மா நன்றாக என்னை நாலு சாத்து சாத்தி வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனார்.
அன்று அந்த மூங்கில் இறைவனின் கரமாகவே எனக்குத் தெரிந்தது.
கண்டம்-2
அந்த சம்பவம் நடந்து நீண்ட நாட்களுக்கு ஒன்றும் நிகழவில்லை. 1981 ஆம் வருடம் கோவையில் படித்துக்கொண்டிருந்த சமயம். நானும் என் நன்பர்களும் சித்ராபௌர்ணமிக்காக வெள்ளிங்கிரி மலையேற தீர்மானித்து சென்றோம். இரவுநேரம். அடிவாரத்தில் ஊன்றி நடக்க கம்புகளை வாங்கிகொண்டு மலையேறத்தொடங்கினோம். சரியான ஏறுபாதையில்லாத மலை அது. அதனால்தான் அந்தக் கம்பின் துணை தேவைப்பட்டது. சறுக்கல்கள் நிறைந்த பாதையில் முன்னேறி ஒரு சம தளத்திற்கு வந்து சேர்ந்தோம். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் கிளம்ப நினைத்த போது பயங்கரமான மழை பிடித்துக்கொண்டது.
மேலே போகவும் முடியாமல்,கீழே இறங்கவும் முடியாமல் வெட்ட வெளியில் மழையில் நனைந்து கொண்டே கீழே உட்கார்ந்துவிட்டோம். 20 நிமிடங்கள் ஆகியும் மழைவிட்ட பாடில்லை. ஏற்கனவே குளிர். இதில் மழை வேறு. உடம்பெல்லாம் நடுங்கத்தொடங்கிவிட்டது. எப்படியும் சாகத்தான் போகிறோம் என்ற எண்ணம் தோன்றத்தொடங்கிவிட்டது. ஆனால் அடுத்த பத்து நிமிடத்தில் மழை விட்டது. ஆனால் மேற்கொண்டு மேலே ஏறமுடியாமல் பாதையெங்கும் சிறு சிறு நீர்வீழ்ச்சிகளாக தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்ததால், கீழே இறங்க தீர்மானித்தோம்.
ஏறி வருவதைவிட சிரமமமானது இறங்குவது. அதிலும் மழையால் சகதி உண்டாகி வழுக்கிக்கொண்டிருந்தது. கம்பின் துணையால் மெல்ல இறங்கிக்கொண்டிருந்தவன் சடாரென்று கால் வழுக்கியதும், கம்பு கையிலிருந்து பறந்துவிட்டது. வெகு வேகமாக கீழே உருட்டிக்கொண்டு போகப்பட்டேன். ஒரு வினாடி எமனின் பாசக்கயிறுகூட கண்ணில் பட்டது. அங்கும் ஒரு மரம்தான் என்னைக் காப்பாற்றியது. மரத்தில் மோதி தொங்கினேன். கண்ணெல்லாம் இருட்டிக்கொண்டுவந்தது. அதற்குள் என் நன்பர்கள் வந்துவிட்டார்கள். வெகு ஜாக்கிரதையாக என்னை மரத்திலிருந்து இறக்கி இரண்டு பேர் தங்கள் தோள்களில் என் கைகளைப் போட்டுக்கொண்டு மெள்ள கீழே இறக்கிக் கொண்டு வந்தார்கள்.
அன்று மூங்கில். இன்று மரம்.
கண்டங்கள் தொடரும்
கண்டம்-1
அப்போது ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். கும்பகோணம் தாலுக்காவில் உள்ள ஆடுதுறையில் இருந்தோம். எங்கள் வீட்டின் பின் பக்கத்தில் வீரசோழன் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. இப்போது போலில்லாமல் அந்தக் காலங்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும்.
ஆற்றின் இரு கரைகளும் சிமெண்ட்டால் உருவாக்கப்பட்டிருந்தது. இடையில் படித்துறைகள். அதிலொன்றில்தான் நாங்கள் வழக்கமாய் குளிப்போம். எனக்கு அப்போது நீச்சல் தெரியாது. அன்று நானும் என் தமக்கையும் குளிக்கப் போனோம். என்னைவிட ஒரு வயதுதான் மூத்தவர் அவர். நான் அமைதியாகவெல்லாம் குளித்துவிட்டு வரும் ரகமல்ல. நீச்சல் தெரியாவிட்டாலும் ஏதாவது சாகசம் செய்ய நினைத்து, படித்துறையை விட்டு கொஞ்சம் தள்ளி, சரிவாய் இருந்த கரையிலிருந்து சறுக்கிக்கொண்டுபோய் தண்ணிரில் விழுந்து, கரையைப் பிடித்துக்கொண்டே ஆற்றின் ஓட்டத்தில் அழைத்துவரப்பட்டு படி வந்ததும் அதில் ஏறிக்கொள்வது என் அன்றாட விளையாட்டு. ஆனால் படியைத்தாண்டிவிட்டால் நீரோட்டம் அதிகரிக்கும் என்னால் சமாளிக்க முடியாது. ஆபத்தை அறியாமலேயே அந்த விளையாட்டை தொடர்ந்து வந்தேன்.
அன்றும் அப்படி விளையாடினேன். அதைப் பார்த்துக்கொண்டிருந்த என் அக்காவும் அப்படி செய்ய ஆசைப்பட்டு என்னைப் போலவே சறுக்கிப்போய் தண்ணிரில் விழுந்து கரையைப் பிடித்துக்கொண்டே படி வரை வந்துவிட்டார். ஆனால் படியில் ஏற முடியவில்லை நீர் இழுத்துக்கொண்டு போகத்தொடங்கிவிட்டது. படியில் நின்றிருந்த நான் உடனே அவருடைய கையைப் பிடித்து இழுக்க முயன்றேன். சரியாக பாலன்ஸ் செய்யாததால் அவர் இழுப்புக்கு நானும் தண்ணீரில் விழுந்துவிட்டேன். அவ்வளவுதான் இரண்டுபேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டோம்.
அப்போதுதான் எங்களைத்தேடி படித்துறைக்கு வந்த எங்கள் அம்மா இதைப்பார்த்ததும் தண்ணீரில் குதித்து விட்டார். அம்மாவுக்கு நன்றாக நீச்சல் தெரியும். அம்மா குதித்ததையும், நாங்கள் அடித்து செல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருந்த கரையில் இருந்த ஒருவரும் குதித்துவிட்டார். ஆனால் அவர்களுக்கும் எங்களுக்குமான இடைவெளி அதிகமாகிவிட்டிருந்தது. அவர்கள் எங்களை நெருங்குவதற்குள் நாங்கள் ஒருவருக்கொருவர் அழுத்திக்கொண்டதில் மூழ்கி, மூழ்கி எழுந்தோம். கரையைவிட்டு அகன்று போய்விட்டதால் பிடிமானம் இல்லாமல் புரண்டபடி ஆற்று நீரோடு அடித்து செல்லப்பட்டோம்.
அவ்வளவுதான் நம் கதை என்று நினைத்த போது, எங்களுக்கு முன்னால் கரையிலிருந்து வளைந்து தண்ணீரைத் தொட்டுக்கொண்டிருந்த இரண்டு மூங்கில்களைப் பார்த்ததும், அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, என் அக்காவையும் பிடித்திழுத்து மூங்கிலைப் பிடித்துக்கொள்ளச் செய்தேன். அக்கா மூங்கிலைப் பிடித்துக்கொண்டு நீரிலேயே இருக்க நான் அதன் மீது ஏறி அமர்ந்து கொண்டேன். அதற்குள் என் அம்மாவும், அந்த மற்றொருவரும் வந்து விட்டார்கள். கரையில் ஏறிக்கொண்டு எங்களையும் கரையேற்றினார்கள். கரைக்கு வந்தும் என் கால்கள் பரதம் ஆடிக்கொண்டிருந்தது. அம்மா நன்றாக என்னை நாலு சாத்து சாத்தி வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனார்.
அன்று அந்த மூங்கில் இறைவனின் கரமாகவே எனக்குத் தெரிந்தது.
கண்டம்-2
அந்த சம்பவம் நடந்து நீண்ட நாட்களுக்கு ஒன்றும் நிகழவில்லை. 1981 ஆம் வருடம் கோவையில் படித்துக்கொண்டிருந்த சமயம். நானும் என் நன்பர்களும் சித்ராபௌர்ணமிக்காக வெள்ளிங்கிரி மலையேற தீர்மானித்து சென்றோம். இரவுநேரம். அடிவாரத்தில் ஊன்றி நடக்க கம்புகளை வாங்கிகொண்டு மலையேறத்தொடங்கினோம். சரியான ஏறுபாதையில்லாத மலை அது. அதனால்தான் அந்தக் கம்பின் துணை தேவைப்பட்டது. சறுக்கல்கள் நிறைந்த பாதையில் முன்னேறி ஒரு சம தளத்திற்கு வந்து சேர்ந்தோம். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் கிளம்ப நினைத்த போது பயங்கரமான மழை பிடித்துக்கொண்டது.
மேலே போகவும் முடியாமல்,கீழே இறங்கவும் முடியாமல் வெட்ட வெளியில் மழையில் நனைந்து கொண்டே கீழே உட்கார்ந்துவிட்டோம். 20 நிமிடங்கள் ஆகியும் மழைவிட்ட பாடில்லை. ஏற்கனவே குளிர். இதில் மழை வேறு. உடம்பெல்லாம் நடுங்கத்தொடங்கிவிட்டது. எப்படியும் சாகத்தான் போகிறோம் என்ற எண்ணம் தோன்றத்தொடங்கிவிட்டது. ஆனால் அடுத்த பத்து நிமிடத்தில் மழை விட்டது. ஆனால் மேற்கொண்டு மேலே ஏறமுடியாமல் பாதையெங்கும் சிறு சிறு நீர்வீழ்ச்சிகளாக தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்ததால், கீழே இறங்க தீர்மானித்தோம்.
ஏறி வருவதைவிட சிரமமமானது இறங்குவது. அதிலும் மழையால் சகதி உண்டாகி வழுக்கிக்கொண்டிருந்தது. கம்பின் துணையால் மெல்ல இறங்கிக்கொண்டிருந்தவன் சடாரென்று கால் வழுக்கியதும், கம்பு கையிலிருந்து பறந்துவிட்டது. வெகு வேகமாக கீழே உருட்டிக்கொண்டு போகப்பட்டேன். ஒரு வினாடி எமனின் பாசக்கயிறுகூட கண்ணில் பட்டது. அங்கும் ஒரு மரம்தான் என்னைக் காப்பாற்றியது. மரத்தில் மோதி தொங்கினேன். கண்ணெல்லாம் இருட்டிக்கொண்டுவந்தது. அதற்குள் என் நன்பர்கள் வந்துவிட்டார்கள். வெகு ஜாக்கிரதையாக என்னை மரத்திலிருந்து இறக்கி இரண்டு பேர் தங்கள் தோள்களில் என் கைகளைப் போட்டுக்கொண்டு மெள்ள கீழே இறக்கிக் கொண்டு வந்தார்கள்.
அன்று மூங்கில். இன்று மரம்.
கண்டங்கள் தொடரும்