PDA

View Full Version : இட்லித் திருவிழா ஓடிவாங்கோவ்...!!



பூமகள்
16-04-2008, 03:35 PM
சூடா சுடச் சுட இட்லித் திருநாள் வாழ்த்துக்களை சொல்லிட்டு.. ஒவ்வொரு வீட்டுக்கா இட்லித் திருவிழாவுக்கு அழைக்க பூவும் மலரும் போறோம்..!:icon_good:

அங்க நடக்கும் காட்சிகள் உங்கள் முன் கற்பனையாக..!!:062802photo_prv:

முதல்ல யாரு வீட்டுக்கு போறோம்னா.. நம்ம அமரத்துவ கவிதைகள் எழுதி எல்லாரையும் அமர்ந்து யோசிக்க வைச்சிருக்கும் அமரன் அண்ணா வீட்டுக்கு போறோம்..!!:icon_wacko::icon_shades:

(பூவும் மலரும் அழைப்பு மணி அடிக்கிறோம்)

பூ: பார்த்தியா மலரு.. அழைப்பு மணி கூட புரியாத தமிழில் தான் சத்தம் எழுப்புது..!!:rolleyes:


மலர்: அக்கா.. வித்தியாசமானவர்களிடம் இருக்கும் எல்லாமே வித்தியாசமா தான் இருக்கும் அக்கா..!!:icon_tongue::icon_shout:

அமரன்: அட.. மலர்களின் கூட்டம் எம் இல்லம் தேடி வந்துவிட்டதே..!! வாங்கள் வாங்கள் தங்கைகளே..!!:shutup:

பூ: இட்லித் திருவிழா இன்று இரவு 10 மணிக்கு நம்ம தாமரை அண்ணாவின் இல்லத்தை நடக்கறதால நீங்க அவசியம் வந்து அமர்ந்து நாலு கருத்துக் கவிதைகளை புரியாம சொல்லி.. இட்லி சாப்பிட்ட அனைவருக்கும் சீரணம் ஆக்குட்டுத்தான் போனும்..!!:082502now_prv::icon_cool1:

மலர்: ஆமாம் னா..அவசியம் வந்துடுங்க..!!:p

அமரன்: ஹா ஹா..!! :lachen001::lachen001:(இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்னு அவருக்கு தான் வெளிச்சம்!!:icon_ush::icon_ush:)

ஒருவழியா அமரன் அண்ணாவிடம் அடி வாங்காம அடுத்த வீட்டிலிருக்கும் அக்னி வீட்டுக்கு போறோம்..!!:icon_shades:

அக்னி: என்ன செய்யுறீர்கள்.. என் வீட்டு சுவற்றுக்கு அருகே நின்றுட்டு..??!!:rolleyes::cool:

பூ: அக்னி அண்ணா... உள்ளே ஏதும் காமிரா வைச்சிருக்கீங்களா?? நாங்க இப்ப தானே வந்தோம்..அதுக்குள்ளே கண்டுபிடிச்சிட்டீங்களே..!!??:icon_clap:

மலர்: அக்கா.. வந்த வேலையை பாருங்க.. சும்மா கேள்வி கேட்டுட்டே இருந்தா எப்படி அழைப்பு கொடுப்பதாம்??:icon_nono::icon_shok::huh:

பூ: சரி சரி எனதன்பு தங்கச்சி..!! இன்னிக்கி இரவு இட்லித் திருவிழா கொண்டாட நம்ம சொற்சிலம்பர் வீட்டுக்கு இரவு 10 மணிக்கு கட்டாயம் வந்துடுங்க..!! கூடவே.. இத்தியாதி இத்தியாதிகளை கொண்டு வர மறந்துடாதீங்கன்னு சொல்லுவேன்னு நினைப்பீங்க..:icon_wink1: அதான் இல்ல.. கொண்டு வந்தீராதீங்கோவ்...!!:icon_nono::smilie_flags_kl:

அக்னி: தங்கச்சி உத்தரவு...:traurig001::traurig001:

அடுத்து போவது.. சிவா அண்ணாவின் வீடு..!!

மலர்: அக்கா.. இந்த வீட்டைப் பார்த்தியாக்கா.. எத்தனை அழகா செதுக்கு செதுக்கி கட்டியிருக்காங்க.. :huepfen024:

பூ: வாயைப் பிளக்காதே மலரு.. :icon_shout::icon_shades::icon_drunk:இது நம்ம சிவா அண்ணா வீடு தான்.. அப்போ நம்ம வீடு தானே.. சீர்வரிசையா வாங்கிக்கலாம் கவலைய விடு..!!:p:cool:

மலர்: ஆஹா.. அக்கா அட்வான்ஸா போறியேக்கா..:icon_shok::aktion033: பெரிய அறிவாளி தான் நீயி..!!:grin::thumbsup:

பூ: ஓஹ்.......:innocent0002: நீயாவது ஒத்துக்கிட்டியே மலரு.. :traurig001::traurig001:

சிவாஜி: அஹா..பாசமலர்கள் என் வீட்டு வாசலுக்கு வந்து நின்னு வரம் கொடுக்க காத்திருக்கோ??!!:angel-smiley-026::angel-smiley-004:

பூ&மலர் (கோரஸ்): அண்ணா.................சிவா அண்ணாஆஆஆஆஆஆஅ...!!:icon_shout::whistling:

சிவாஜி: வாங்க வாங்க பாச தங்கைகளே..!! :icon_give_rose:

(திரும்பவும் அழைப்பு சொல்லி அவரையும் வர வழைக்க கொஞ்சம் பாச மழை பொழிஞ்சி விடைபெறுகிறோம்.!!:wub::icon_36:)

அடுத்தது நம்ம ஓவியன் அண்ணா வீட்டுக்கு..!!:icon_35::love-smiley-008:

(வெளியில் சமையல் செய்யும் வாசம் நல்லா வருது..:getimage::food-smiley-011:)

மலர்: பூவக்கா.. நம்ம ஓவி அண்ணா வீட்டில் என்ன குழம்புன்னு கண்டுபிடிச்சிட்டேன்..!:food-smiley-010::food-smiley-007:

பூ: மலரு.. அண்ணி சமைச்சிருப்பாங்க.. மதியம் ஆயிடிச்சி.. ஒரு பிடி பிடிக்கனும்..!!:sport-smiley-013::sport-smiley-014:

மலர்:நாவில் எனக்கு இப்பவே எச்சி ஊறுதுக்கா.. வாங்க வாங்க போவோம்..!!:sport-smiley-018::sport009:

ஓவியன்: பூமலர்கள் என் வீட்டுக்கு விஜயம் மா??:icon_shok::grin: வாங்க வாங்க பாசக்கார தங்கைகளே..(மனசுக்குள் பாசப்பிசாசுகளேன்னு ஒரு திட்டு.. பின்னே இப்படியா டிஸ்டர்ப் பண்ணுவது??:sauer028::sauer028::ohmy:)

அழைப்பு விவரம் சொல்லி அண்ணியோடு தம்பதி சகிதமாக வரச் சொல்கிறோம்..!!:080402cool_prv::smartass:

மலர்: அண்ணா.. என்ன சமையல்?? அண்ணி சமைச்சாச்சா??

ஓவியன்::1:வாங்க வாங்க சாப்பிடுங்க.. அதெல்லாம் ரெடிமா..!! :feiertag014:

பூவும் மலரும் ஒரு பிடி பிடிச்சி.. அவுங்க சமைச்ச அத்தனையும் ஒன்னு விடாம காலி செய்துட்டோம்..!!:icon_dance::icon_dance:

ஓவியன் அண்ணா :party009: தன் அன்பான இன்முகத்துடன் வழி அனுப்புகிறார். (அப்பாடா ரெண்டு குட்டி பிசாசுகளையும் அனுப்பியாச்சு ஒரு வழியான்னு நிம்மதி பெருமூச்சு விடுகிறார்..!!:whistling:)

அடுத்து யவனி அக்கா வீட்டுக்கு..!!:icon_08::209:

நாங்க அக்காவை தேடி சவுதி கிளம்பி வீட்டுக்கு போக.. அங்கே பூட்டிய வீடிருக்க.. அடடா. இந்தியா வந்துட்டாங்களே நாம இங்கு வருவதற்குள்ளே அப்படின்னு முகம் வாடி திரும்புகிறோம்..!!
நாங்க இந்தியா வந்து வீட்டைக் கண்டுபிடிச்சி.. போயி நிக்கவும் அக்கா ஹேன்பேக்கும் சகிதமா வெளியில் அம்ரூவுடன் கிளம்பவும் சரியா இருந்தது..!!:auto003:

யவனி: பூவு... மலரு.. .என்ன ஆச்சர்யம்?? எப்படி இருக்கீங்க..?? ஏ மலரு.. ஏன் பேஸ் மாட்டீரே..?? போனில் என்ன வாங்கு வாங்குவே..??! அம்ரூ நீ பேசுவியே பூ அக்கா .. அது இவுங்க தான்..!!:medium-smiley-065:
(அம்ரூ ஒரு வித்தியாசமான ரியேக்சன் கொடுக்கிறான்..அதன் அர்த்தம் அவனுக்கு தான் விளங்கும்..!!)

இட்லித் திருவிழா பற்றி சொல்லிட்டு விடைபெற நுரை அண்ணாவும் வந்துவிடுகிறார்..!!:medium-smiley-042:

நுரை: :medium-smiley-051:ஆஹா.. வாங்க வாங்க.. பூவு.. மலரு.. எப்படிம்மா இருக்கீங்க??

கிளம்புறோம்னு சொல்ல... கண்டிப்பா பிரியாணி சாப்பிட்டுட்டுத் தான் போனும்னு அன்பு மழை பொழிஞ்சி இரண்டாவது முறையா சாப்பிடுவிட்டு கிளம்புகிறோம்..!!:medium-smiley-041:


அடுத்து நாங்க போவது.. தாமரை அண்ணா வீட்டுக்கு..!!:medium-smiley-080::medium-smiley-075:


அனிரூத்: டாடி.. நம்ம வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்க..!!:sport009:

தாமரை: அம்மாவை யாருன்னு பார்க்க சொல்லுப்பா.. நான் கொஞ்சம் பிசி..!!:icon_shades::icon_blush:
அண்ணி: :icon_nono:எங்களுக்கு எந்த ப்ரோடக்டும் வேணாம்மா.. போயிட்டு வாங்க..!:icon_wacko: (கதவு அடைக்கப்படுகிறது..!!)

பூ:இதுக்கு தான் சொன்னேன்.. அண்ணன் சீர் வரிசையெல்லாம் பையில் போட்டு எல்லார் வீட்டிலிருந்தும் வாங்கிட்டு வராதேன்னு கேட்டியா??:fragend005::traurig001::traurig001:

மலர்: சாரிக்கா.. அன்பா தானே கொடுத்தாங்க.. நம்மல சேல்ஸ் கேள்ர்சா நினைப்பாங்கன்னு யோசிக்கவே இல்லைக்கா..!!:icon_ush::icon_p:

பூ: சரி இரு மலரு.. அண்ணனுக்கு கால் செய்யலாம்..!!:grin:

கால் செய்து.. அண்ணனை வரவழைச்சி.. கதவு திறக்க வைக்கிறோம்..!!:smartass::icon_v:

அண்ணி ஆச்சரியமாக பார்க்க.. எங்களை அண்ணிக்கு அறிமுகம் செய்கிறார்..!!:icon_hmm::icon_shok:

அண்ணி:(சிரிப்போடே வரவேற்கிறார்..) வாங்க வாங்க..!!:grin:

பூ: அண்ணா.. ஸ்வேதாவுக்கு இட்லினா ரொம்ப பிடிக்கும் தானே..!!:huh::icon_03:

தாமரை: ஏதோ சொல்ல வர்றே.. நேரே சொல்லும்மா..!!:icon_hmm:

மலர்: அக்கா எப்பவும் இப்படித்தான்னா.. நானே சொல்றேன்..!!:icon_smokeing::aktion033::wuerg019:

இன்னிக்கி இட்லித் திருவிழா.. நம்ம வீட்டில் இன்னிக்கி இரவு 10 மணிக்கு மன்றத்திலிருந்து பெரிய கூட்டமே வரப்போவுது.. எப்படியும் ஒத்துப்பீங்கன்னு நம்பிக்கையில் எல்லாரையும் அழைச்சாச்சு..!! அண்ணியிடம் பர்மிசன் வாங்குங்க அண்ணா... இட்லி எல்லாம் நம்ம 5 நட்சத்திர ஓட்டலில் ஆர்டர் செய்தாச்சு..!!:080402cool_prv::music-smiley-012:

தாமரை: கொஞ்சம் அமைதியாக பூவையும் மலரையும் பார்த்து.. அதிர்ச்சியை மறைத்துக் கொள்கிறார்..!!:sprachlos020: :icon_hmm::shutup: :ohmy::huh:
புலம்பியபடியே..அடுப்படிக்கு சென்று அண்ணியிடம் பர்மிசன் வாங்குகிறார்..!!:thumbsup::icon_v:

பூவும் மலரும் பூரிக்கட்டைக்கு தப்பித்து.. ஓடி வந்துவிடுகிறோம் வெற்றிகரமாக..!!:auto003::sport-smiley-018:

பூ: மலரு...மன்ற மக்கள் எல்லாரையும் நேரில் சென்று அழைக்க முடியாட்டியும் சிலரையாவது அழைக்க முடிஞ்சதேன்னு நினைச்சி சந்தோசமா இருக்குமா..!!:p:p:icon_dance::icon_dance:

மலர்: தப்பிச்சோம்னு சொல்லுக்கா.. :eek::eek:இல்லாட்டி நிச்சயம் அடி வாங்கியிருப்போம்..எங்காவது ஒரு பூரிக் கட்டையில்..!! :icon_shok::grin::icon_wink1:


இதனால சகலமான மன்ற மக்களுக்கு சொல்லுவது என்னன்னா... பூவும் மலரும் உங்க எல்லாரையும் அன்புடன் இட்லித் திருவிழாவுக்கு வரவேற்கிறோம்..!! :music-smiley-009::music-smiley-009:

நாம என்ன அப்படியா பழகிட்டு இருக்கோம்?!! நம்ம மன்ற குடும்பத்தில் ஒரு விழா என்றால் அழைக்காட்டியும் ஓடி வந்து வேலை செய்யனும்ல..!!:cool::rolleyes: :icon_03::smilie_flags_kl:


----------------------------------------------------

இட்லித் திருவிழாவில் பரிமாறிய இட்லிகள் இதோ உங்களுக்காக..!!

http://img32.picoodle.com/img/img32/4/4/16/f_1m_8f34b39.jpg

http://img32.picoodle.com/img/img32/4/4/16/f_2m_92d739b.jpg

http://img01.picoodle.com/img/img01/4/4/16/f_3m_4ea852f.jpg

http://img37.picoodle.com/img/img37/4/4/16/f_4m_a39a3cc.jpg

http://img32.picoodle.com/img/img32/4/4/16/f_5m_85feacf.jpg

http://img26.picoodle.com/img/img26/4/4/16/f_6m_5899752.jpg

http://img34.picoodle.com/img/img34/4/4/16/f_7m_db8caa5.jpg

http://img01.picoodle.com/img/img01/4/4/16/f_8m_fa49edf.jpg

http://img01.picoodle.com/img/img01/4/4/16/f_9m_c81972e.jpg

http://img36.picoodle.com/img/img36/4/4/16/f_10m_7ffb89b.jpg

http://img33.picoodle.com/img/img33/4/4/16/f_11m_15182d5.jpg

http://img34.picoodle.com/img/img34/4/4/16/f_12m_59e7406.jpg
http://img36.picoodle.com/img/img36/4/4/16/f_13m_899763e.jpg

தாமரை
16-04-2008, 03:36 PM
பசி நேரத்தில அதுவும் அண்ணி ஊர்ல இல்லாத நேரத்தில இப்படிப் பதிவு போடறயே பூவூ!!!!

பில்லு அனுப்பி வைக்கிறேன்..

பே பண்ணிடு..

பூமகள்
16-04-2008, 03:38 PM
பசி நேரத்தில அதுவும் அண்ணி ஊர்ல இல்லாத நேரத்தில இப்படிப் பதிவு போடறயே பூவூ!!!!
பில்லு அனுப்பி வைக்கிறேன்..
பே பண்ணிடு..
ஹி ஹி ஹி..!!:D:D
அப்படியே எனக்கும் ரெண்டு இட்லி பார்சல் அண்ணாவ்..!! :lachen001::lachen001:

அன்புரசிகன்
16-04-2008, 03:58 PM
http://img34.picoodle.com/img/img34/4/4/16/f_12m_59e7406.jpg


இந்த வடையில் எண்ணை அதிகமாக சேர்ந்துவிட்டது. நான் வரல.... :icon_rollout: (அதுதான் உங்கள அழைக்கவேயில்ல என்று மலர் புத்திசாலித்தனமா விடைசொல்லப்போகுது)

பூமகள்
16-04-2008, 04:06 PM
இந்த வடையில் எண்ணை அதிகமாக சேர்ந்துவிட்டது. நான் வரல.... :icon_rollout:
ஏற்கனவே இட்லி மாதிரி தானே இருக்கீங்க?? :icon_ush::aetsch013: :D:D
உங்களை அழைச்சா.. அப்புறம் உங்களை தவறுதலா இட்லின்னு நினைச்சி பிச்சி சாப்பிட்டுட மாட்டாங்க அண்ணா???!!:cool::rolleyes:
அதான் உங்களை காப்பாற்றிட்டேன்..!!:icon_b::icon_b:

அக்னி
16-04-2008, 04:33 PM
பூவு... திருப்தியா குளுகுளுன்னு இருக்கா...
அம்மா அவிச்சு போட்ட இட்லிய முழுங்கிட்டு, போதாக்குறைக்கு சமைக்க வச்சிருந்த இரண்டு கரட்டையும் கடிச்சுக்கொண்டு,
எங்க வயிற்றில் தீயை மூட்டி, நாவிலிருந்து நீர் வடிய வைத்து அணைக்கின்றீர்களே...
நியாயமா... தர்மமா... அடுக்குமா...

இட்லி என்ற ஒன்றப் பார்த்து எவ்ளோ நாளாச்சு...
பரிமாறியமைக்கு நன்றி...

மதி
16-04-2008, 04:36 PM
இட்லி சாப்பிட்டு நாளாச்சு.. ஹ்ம்..
நல்ல திருவிழா...
அழைக்காததால என்னால வர முடியாம போச்சு... :(

அக்னி
16-04-2008, 04:42 PM
அழைக்காததால என்னால வர முடியாம போச்சு... :(
யாருங்க N...
அவரு எதுக்கு இட்லித் திருவிழாக்கு வரணும்...
வழமையா X, Y என்று குறிப்பிடுவார்கள்....

அன்புரசிகன்
16-04-2008, 04:44 PM
யாருங்க N...

:D :D :D :lachen001: :lachen001: :lachen001: :p :p :p

மதி
16-04-2008, 04:54 PM
யாருங்க N...
அவரு எதுக்கு இட்லித் திருவிழாக்கு வரணும்...
வழமையா X, Y என்று குறிப்பிடுவார்கள்....

இப்போ புதுசா N-ஐயும் சேர்த்திருக்காங்க... :)

மதி
16-04-2008, 04:54 PM
:D :D :D :lachen001: :lachen001: :lachen001: :p :p :p

இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லே.. ஹும்.. :eek::eek:

அன்புரசிகன்
16-04-2008, 04:57 PM
இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லே.. ஹும்.. :eek::eek:

அட... உங்களுக்கு வேற இந்த தொப்பி அளவாகிவிட்டதா................. எந்த புற்றில் எந்த பாம்பு ஒளிந்து கிடக்கு என்று புரியலயே..........

சிவா.ஜி
16-04-2008, 05:00 PM
M ஐயும் அழைத்ததற்கு நன்றி பூவு. ஆனா குடும்பத்தோட வந்தம்ன்னா அம்புட்டுதான்...தாமரை எமர்ஜென்ஸி லீவ்ல குடும்பத்தோட போயிடுவார். அப்புறம் அடுத்தது உங்க வீடுதான். எப்படி வசதி....?

மதி
16-04-2008, 05:06 PM
இட்லி சாப்பிட ஒரு கூட்டமே இருக்கு போல..

பூமகள்
16-04-2008, 05:08 PM
பூவு... திருப்தியா குளுகுளுன்னு இருக்கா...
அம்மா அவிச்சு போட்ட இட்லிய முழுங்கிட்டு, போதாக்குறைக்கு சமைக்க வச்சிருந்த இரண்டு கரட்டையும் கடிச்சுக்கொண்டு,
ஹி ஹி..!!:grin:
இரண்டு கேரட்டு உங்க வீட்டில் அழைக்க வருகையில் கூட சாப்பிட்டுட்டேன்னு இப்படி எல்லாம் பாசத்தோட இட்லி சாப்பிட கூப்பிட்ட தங்கச்சியை முயல்குட்டின்னு எல்லாம் சொல்லப்படாது..!! :sport-smiley-018::sport-smiley-018:

எங்க வயிற்றில் தீயை மூட்டி, நாவிலிருந்து நீர் வடிய வைத்து அணைக்கின்றீர்களே...
நியாயமா... தர்மமா... அடுக்குமா...
அடுக்குவதா?? எதையண்ணா அடுக்க சொல்றீங்க??!! ஓஹ்.. இட்லியையா..அதெல்லாம் ஆல்ரடி ஒரு டஜன் வயிற்றுக்குள் அடுக்கியாச்சு அண்ணா..!!:icon_cool1::icon_shades::icon_tongue:

அழைக்காததால என்னால வர முடியாம போச்சு... :(
ஹி ஹி.. இப்படி சொல்லியெல்லாம் தப்பிக்க முடியாது.. நம்ம திருவிழாவில் நாம வேலை செய்யாம வேற யாரு வேலை செய்வதாம்..!!:icon_shok::icon_clap:
அதெல்லாம் முடியாது :huepfen024:வந்து பரிமாறி.. சாப்பிட்டுட்டு தான் போனும்..!!:smilie_flags_kl::smartass:

பூமகள்
16-04-2008, 05:11 PM
M ஐயும் அழைத்ததற்கு நன்றி பூவு.
M ஐ, யாரு அண்ணா அழைச்சது?? நான் உங்களை அல்ல கூப்பிட்டேன்??!! :p:cool:

ஆனா குடும்பத்தோட வந்தம்ன்னா அம்புட்டுதான்...தாமரை எமர்ஜென்ஸி லீவ்ல குடும்பத்தோட போயிடுவார். அப்புறம் அடுத்தது உங்க வீடுதான். எப்படி வசதி....?ஹி ஹி..!:lachen001: வாங்க வாங்க சிவா அண்ணா..!! :p:cool:
அதான் ஆல்ரடி சொல்லிட்டோமே.. இட்லித் திருவிழாவுக்கு இட்லி 5 நட்சத்திர ஓட்டலில் இருந்து தான் வரப்போகுது..!!:D:D
சோ... எங்கு வந்தாலும் ஓக்கே..!! இட்லிக்கு பில்லு மன்ற மக்களின் குழும நிதியிலிருந்து தானே செலவாகப்போகுது..!!:cool::rolleyes::aetsch013:

சிவா.ஜி
16-04-2008, 06:23 PM
M ஐ, யாரு அண்ணா அழைச்சது?? நான் உங்களை அல்ல கூப்பிட்டேன்??!! :p:cool:

அதுவா...ஏற்கனவே மதி என்னையும் கூப்பிட்டதுக்குன்னு சொன்னதை நம்ம மன்றத்தின் பிரிச்சி மேயும் பேராசிரியர் N ஆ அது யாருன்னு கேட்டுட்டார். அதான் எம்மையும் அப்படீங்கறதை M ஐயும் சொன்னேன்.

ஸ்...அப்பாடா...இவிங்கக்கிட்ட மாட்டாம இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியதா இருக்கு....முடி......................ல.

அக்னி
16-04-2008, 06:31 PM
அப்படீங்கறதை M ஐயும் சொன்னேன்.

ஸ்...அப்பாடா...இவிங்கக்கிட்ட மாட்டாம இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியதா இருக்கு....முடி......................ல.
I :D:D:D

செய்ய வேண்டியதா இருக்கு....முடி......................ல.
சரிங்க...
எனக்கும் ஒண்ணு செய்யுங்க... :redface:


பேராசி
புது ராசியா இருக்கே... மலரோடதோ... :icon_hmm:

பூமகள்
16-04-2008, 06:36 PM
I :D:D:D
சரிங்க...
எனக்கும் ஒண்ணு செய்யுங்க... :redface:
புது ராசியா இருக்கே...மலரோடதோ

ஹா ஹா ஹா..!!:lachen001::lachen001:

ஹீ ஹீ ஹீ...!!:D:D

ஹூ ஹூ ஹூ..!!:p:p

குட்டிக் கரணம் அடிச்சி அடிச்சி சிரிக்கிற ஸ்மைலியை யாராவது மன்றத்தில் சேருங்கப்பா முதலில்..!!:wuerg019::cool::rolleyes:

இந்த மாதிரி சிச்சுவேசனுக்கு சரியா இருக்குமே..!!:rolleyes::icon_rollout:

மலர்
16-04-2008, 09:43 PM
யக்கோவ் என்ன சொல்லன்னே தெரிலை...
பின்னி பெடல் எடுக்குற... போ... :icon_b: :icon_b:

பாராட்டுக்கள் பூவு...
இதெல்லாம் ரூமு போட்டு யோசிப்பீங்களோ

எது
எப்பிடியோ ரெண்டு இடத்துல புல் கட்டு கட்டியாச்சி...:D :D


ஹா ஹா ஹா..!!:lachen001::lachen001:

ஹீ ஹீ ஹீ...!!:D:D

ஹூ ஹூ ஹூ..!!:p:p
இருடியம்மா...
இங்க போடுற கல் இட்லியை ஒரு பார்சல் அனுப்பி வைக்கிறேன்...
அப்புறம் வாயே திறக்கமாட்ட

அனுராகவன்
17-04-2008, 12:57 AM
இட்லி திருவிழா அமர்க்கலம்...
தொடர்ந்து சுட சுட இருக்கட்டுமே!!

பூமகள்
17-04-2008, 03:03 AM
எது
எப்பிடியோ ரெண்டு இடத்துல புல் கட்டு கட்டியாச்சி...:D :D

அதானே பார்த்தேன்.. என்ன டா என் தங்கச்சி சாப்பாட்ட பத்தி ஒன்னுமே சொல்லலையேன்னு..!! :rolleyes::D:D
எது எப்படின்னாலும் நமக்கு அது தானே மலரு முக்கியம்..!! புவூம் மலரும் பசி தாங்குவோமா சொல்லுமா..??!!:cool::p :traurig001::traurig001:

சரி சரி.. அழப்படாது.. அக்கா செண்டிமெண்ட்டா அப்படித்தான் அப்பப்போ பேசுவேன்..! :icon_ush::D:D

இருடியம்மா...இங்க போடுற கல் இட்லியை ஒரு பார்சல் அனுப்பி வைக்கிறேன்... அப்புறம் வாயே திறக்கமாட்ட
ஏன்... ஏன்.... ஏன் இந்த கொலை வெறி??!!:traurig001::traurig001:
ஓசில இரண்டு வீட்டுல கூட்டிப் போயி சாப்பிட வடை பாசயத்தோடு சாப்பாடும்.. பிரியாணியும் சாப்பிட வைச்ச பூவை இப்படி எல்லாம் சொல்லப்படாது மலரு..!! :redface::wuerg019:
எதுனாலும் பேசித் தீர்த்துக்கலாம்..!!:eek::eek:
யவனி அக்கா வீட்டில் உனக்கு லெக் பீஸ் கொடுக்காம நான் சாப்பிட்டுட்டேன்னு இப்படி எல்லாமா பழி வாங்குவது??!! :icon_ush::rolleyes:ஹூம்..ஹூம்...ஹூம்....!!:traurig001::traurig001: :D:D

பூமகள்
17-04-2008, 03:07 AM
இட்லி திருவிழா அமர்க்கலம்...
தொடர்ந்து சுட சுட இருக்கட்டுமே!!
நன்றிகள் அனு அக்கா..!!:icon_b::icon_b:
இட்லியை சுடச் சுட நீங்க தான் அக்கா தரனும்..!! சுடச் சுட இட்லி ஆறிப்போச்சுன்னா என்ன செய்யலாம்??! :icon_rollout::confused:
பொடிமாஸ் செய்து சூடா பரிமாறலாம் தானே அக்கா??!!:rolleyes::cool::icon_b:
செய்து தாங்களேன்.. "அக்காகாஸ் பொடிமாஸ்"னு ஒரு புது வெரைட்டியை அறிமுகம் செய்துட மாட்டோம்..!! :lachen001::lachen001:

சிவா.ஜி
17-04-2008, 04:24 AM
நாங்கல்லாம் இட்லி ஆறிப்போனா உப்புமாத்ஹ்தான் செய்வோம். ஆனா அது சுடச்சுட இட்லி சாப்பிடறதைவிட சூப்பரா இருக்கும். எது எப்படியோ இப்பவே வீட்டுக்கு போன் பண்ணி அண்ணிக்கிட்ட சொல்லிட்டேன். தினமும் காலையில எனக்கு இட்லிதான் சிற்றுண்டி என்று. ஆனா இன்னும் ஒரு வாரம் காத்திருக்கனுமே.

இதயம்
17-04-2008, 04:58 AM
அண்ணன் கவரிமான் மாதிரி..!! ஒரு முடி உதிர்ந்தாலும் உசுரை விட்டுடுவாரு..!! அண்ணனுக்கு கௌரவம் முக்கியம்..! அண்ணன் ரொம்ப மரியாதையை எதிர்பார்ப்பாரு..! அண்ணன் அழைக்காத விருந்துக்கெல்லாம் போகமாட்டாருன்னு உங்களுக்கு தெரியாதா பூ..? (ஆமா... அது யாரு அப்படிப்பட்ட அதிமேதாவி அண்ணன்னு தான கேக்கறீங்க..??!! யோசிக்க ரொம்ப சிரமப்படாதீங்க.. அது நாந்தேன்..!! (ஹி..ஹி..!!)

எதெதுக்கோ திருவிழா எடுத்து இப்ப இட்லி, சட்னின்னு ஆரம்பிச்சிட்டீங்களா..? வெளங்கிடும்..!! (வத்தக்குழம்பு திருவிழாவுக்கு நான் கூப்பிடாமயே வருவேன். ஏன்னா அதை பாத்தா எனக்கு காது கேக்காது, கண்ணு தெரியாது, வாய் பேசாது, மூளையும் வேளை செய்யாது..!! ஆமா.. இப்ப மட்டும் வேலை செய்யுதாக்கும்னு கோக்குமாக்காவெல்லாம் கேள்வி கேக்க கூடாது.. எனக்கு பதில் சொல்ல தெரியாது..!!)

பூவுக்கு இதே வேலையா போச்சு..!! நாங்க சவுதியில் காய்ஞ்சி போய் கிடக்கிறது தெரிஞ்சும், நான் கேட்காமயே வீட்டில் என்னென்ன சாப்பாடு ஐட்டம்னு சேட்டும் (chat) போதெல்லாம் சொல்லி என் வயித்தெரிச்சரில்லை கொட்டிக்கறாங்க..! (ஆனாலும், கீழேயிருந்து 9-வது தட்டில் இருக்கிற இட்லி எனக்கு தான் வேணும். பார்க்கும் போதே கீ-போர்ட் ஈரமாகி போச்சு...!! அதை மட்டும் டி.ஹெச்.எல்-லில் அனுப்பிடுங்க ப்ளீஸ்..!!)

(நான் முக்கிய வேலையா ஜித்தா போறேன். அதான் திருவிழாக்கு போகாம இருக்க என்ன சாக்கு சொல்லலாம்னு யோசிக்கிறேன். ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்..... (யோசிக்கிறாராமா..!!) ஐடியா கிடைச்சிடுச்சி..!)

நான் திருவிழாக்கு வரலைங்க...! ஏன்னா ஆரென் அண்ணா வீட்டு இட்லியும் கலந்திருக்கும்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன (புரியாமல் முழிப்பவர்கள் அவர் தன் வீட்டு இட்லி பற்றி பற்றி வாக்குமூலம் கொடுத்த இட்லி-ஹைக்கூ கவிதை பார்க்கவும்..!!).

ஓவியன்
17-04-2008, 05:05 AM
ஆமா, இந்த இட்லித் திருவிழாக்கு யாரு ஸ்பான்சர்...??
என்த டிவியிலே நேரடி ஒளிபரப்பு பண்ணினாங்க...???
இனி எப்போது மறு ஒளிபரப்பு பண்ணுவாங்க...???

ஏன்னா அழைத்தும் வர முடியாத திருவிழாவை ஒரு தடவையாவது பார்த்து பசியாறணும்..!! :rolleyes:

lolluvathiyar
17-04-2008, 07:01 AM
பூமகள் மலரின் இட்லி திருவிழாவுக்கு நான் அழைக்காமலே வந்திருவேன். (ஆமா இப்படி இட்லி படம் காட்டினா வராமலா இருக்க முடியும்) ஆகா இப்பவே பசி வந்திருச்சு. என்ன அழகான இட்லி ஆகா
1. 4 இட்லி நிலகடலை பருப்பு சட்னி (தக்காளி சாஸ்)
2. 5 இட்லி தேங்காய் சட்னி ஊருகாய்
3. 3 இட்லி தேங்காய் (பொட்டு கடலை சேர்க்காமல்)
4. 4 இட்லி தேங்காய் தக்காளியை அரைத்து செய்யபட்ட சட்னி
5. 9 இட்லி தக்காளியை சட்னி, க*த்திரிகாய் சாம்பார்
6. ரவா இட்லி சட்னி
7. ஆகா அது என்ன இட்லினு தெரியல ஆனால் கிரேவி தான் தூண்டுது (முருங்ககாய் சாம்பார அல்லது கருவாட்டு குழம்பா என்று தெரியவில்லை)
கடைசி படத்தில் இருக்கும் இட்லி என்ன வித்தியாசமான சேப்பில் இருக்கு (புட்டு மாதிரி)

யாராவது ஈரோட்டு இட்லி படம் இருந்தா போடுங்க (மேல் பகுதி பிளந்திருக்கும்). சூப்பர டேஸ்டா இருக்கும், வெந்தயம் கூடுதலா கலந்தா அப்படி வரும்). குக்கரில் வைக்க கூடாது, பாத்திரத்தில் தான் வைக்கனும்

சிவா.ஜி
17-04-2008, 07:10 AM
ஆஹா...எல்லாரும் படத்தைப் பாத்து ஜொள்ளுதான் விட்டுக்கிட்டிருந்தோம். வாத்தியார் ஒவ்வொரு இட்லியையும் வகை பிரிச்சு, சட்னியைக்கூட விடாம விளக்கிட்டார். அதான் வாத்தியார். சூப்பர் வாத்தியாரே.

இதயம்
17-04-2008, 07:37 AM
ஆஹா...எல்லாரும் படத்தைப் பாத்து ஜொள்ளுதான் விட்டுக்கிட்டிருந்தோம். வாத்தியார் ஒவ்வொரு இட்லியையும் வகை பிரிச்சு, சட்னியைக்கூட விடாம விளக்கிட்டார். அதான் வாத்தியார். சூப்பர் வாத்தியாரே.

சாப்பாட்டை பத்தி பேச வாத்தியாருக்கா சொல்லிக்கொடுக்கணும்..?!! நல்லா சமைச்சிக்கொடுக்கிற பொண்ணால தான் நல்ல பொண்டாட்டியா இருக்கமுடியும்னு சொன்னவராச்சே அவர்..!!

உங்களுக்கு பிடிச்ச பாட்டு கல்யாண சமையல் சாதம்.. காய்கறிகளும் ப்ரமாதம்..!! பாட்டு தானே வாத்தியார்..?!!

lolluvathiyar
17-04-2008, 08:56 AM
உங்களுக்கு பிடிச்ச பாட்டு கல்யாண சமையல் சாதம்.. காய்கறிகளும் ப்ரமாதம்..!! பாட்டு தானே வாத்தியார்..?!!

ஆகா இப்படி பப்ளிக்கல போட்டு மானத்தை வாங்கறீங்களே, முன்னத்த மாதிரி அதிகமாமா மன்றம் வரமுடியாவிட்டாலும் நான் சாப்பாடு சாப்பிடும் அழகை பற்றி ஒரு கட்டுரை எழுதி பதித்து விடுகிறேன். (ஹி ஹி மின்னிதழலி கூட பப்லிஸ் பன்னும் அழவுக்கு எழுதபோறேனாக்கும்)

மனோஜ்
22-04-2008, 09:45 AM
இட்லி திருவிழா நடத்திய பூவுக்கும் மலருக்கும் நன்றிகள்

இனி இட்லி விட்டு சட்டினி திருவிழா எப்ப நடத்துவிங்க