lenram80
14-04-2008, 06:41 PM
ரோஜாப் பூவில் வண்டு!
அவள் உதட்டில் மச்சம்!
நிலவில் நீர் துளி!
அவள் நெற்றியில் வியர்வைத் துளி!
மத்தாப்பாய் அவள் சிரிப்பு!
வருடம் முழுதும் எனக்குத் தீபாவளி!
அவள் உதட்டில் ஐஸ்க்ரீம்!
வழிகிறது என் இதயம்!
நான் அவளைப் பார்க்க ஆசைப் பட்டதால்
பொழுது விடியும் இந்த பூமி!
நான் விட்ட மூச்சுக் காற்றால்
அவள் மேல் மழை பொழியும் மேகம்!
எனக்குப் போட்டியாக அவளுக்கு நகை செய்ய
கடல் நீரை தங்கமாக்கும் மாலைச் சூரியன்!
அவள் பேச்சைக் கேட்ட பிறகு
குயில்களுக்கு ஒரு சந்தேகம்!
அவை குயிலினமா? மனித இனமா? என்று!
குயிலினம் என்றால், அது பரிமாண வளர்ச்சி!
மனித இனம் என்றால், அது பரிணாம வளர்ச்சி!
சொர்க்கத்தைத் தொட்ட பூக்கள்!
அவள் கைவிரல்கள் பட்ட பூக்கள்!
சொர்க்கத்தில் பூத்த பூக்கள்!
அவள் கூந்தல் கொண்ட பூக்கள்!
திடீரென்று அல்லி பூக்களில் வாசமில்லை!
அவள் இதுவரை அந்தப் பூவை தொட்டதில்லையாம்!
கொடிது! கொடிது! தீண்டாமை கொடிது -
என அவளுக்கெதிராய் அல்லிப் பூ நடத்தும்
மணம்தராப் போராட்டம் தான் காரணமோ?
இதை எப்படியோ தெரிந்து கொண்ட என் வீட்டு உப்பு
"அவள் வந்து என் பூவைத் தொடவேண்டும்"
என்று ஒரே உப்பாய் கரிக்கிறது!
"நீ உண்மையில் பூ இல்லை" என்றால்,
"பொய் சொல்லாதே. அப்பறம் என் பெயர் எப்படி பூ
என்று முடிகிறது?" என்கிறது!
அட, பெயர் வைத்த பெரியோர்களே!
காரணம் என்னவென்று சொல்லுங்களேன்!
அதே சமயம்,
என் வீட்டு அடுப்புக்கு மட்டும் அதன் பூவான
நெருப்புவின் மேல் ஒரு வித வெறுப்பு!
அவள் தொடாமலிருந்தும்
"தீண்டாமை கொடிது" என்று சொல்ல முடியாததால்!
மழை காய்க்கும் மேகம்!
மேகக் குலைகளாய் அவள் தேகம்!
தேகத்தில் - தேன் சரிபாதி பாகம்!
எல்லா உயிருக்கும் அவள் மீது மோகம்!
தூதுக்கு கிடைக்கவில்லையே எனக்கொரு காகம்!
சோழர் கால காவிரியாய் என் ஆசைகள்!
கட்டிப் போட்ட கல்லணையாய் அவள் வெட்கம்!
அவள் ஒரு- உடைகளுக்குள் நிரப்பப்பட்ட இனிய அமுதம்!
அதைத் தின்னத் துடிக்கிறது என் இதயக் குமுதம்!
அவள் ஒரு - தலையில் பூச்சூடி மணக்கும் மலர் மாலை!
அவளை மணக்க என்று மலரும் எனக்கொரு காலை?
அவள் உதட்டில் மச்சம்!
நிலவில் நீர் துளி!
அவள் நெற்றியில் வியர்வைத் துளி!
மத்தாப்பாய் அவள் சிரிப்பு!
வருடம் முழுதும் எனக்குத் தீபாவளி!
அவள் உதட்டில் ஐஸ்க்ரீம்!
வழிகிறது என் இதயம்!
நான் அவளைப் பார்க்க ஆசைப் பட்டதால்
பொழுது விடியும் இந்த பூமி!
நான் விட்ட மூச்சுக் காற்றால்
அவள் மேல் மழை பொழியும் மேகம்!
எனக்குப் போட்டியாக அவளுக்கு நகை செய்ய
கடல் நீரை தங்கமாக்கும் மாலைச் சூரியன்!
அவள் பேச்சைக் கேட்ட பிறகு
குயில்களுக்கு ஒரு சந்தேகம்!
அவை குயிலினமா? மனித இனமா? என்று!
குயிலினம் என்றால், அது பரிமாண வளர்ச்சி!
மனித இனம் என்றால், அது பரிணாம வளர்ச்சி!
சொர்க்கத்தைத் தொட்ட பூக்கள்!
அவள் கைவிரல்கள் பட்ட பூக்கள்!
சொர்க்கத்தில் பூத்த பூக்கள்!
அவள் கூந்தல் கொண்ட பூக்கள்!
திடீரென்று அல்லி பூக்களில் வாசமில்லை!
அவள் இதுவரை அந்தப் பூவை தொட்டதில்லையாம்!
கொடிது! கொடிது! தீண்டாமை கொடிது -
என அவளுக்கெதிராய் அல்லிப் பூ நடத்தும்
மணம்தராப் போராட்டம் தான் காரணமோ?
இதை எப்படியோ தெரிந்து கொண்ட என் வீட்டு உப்பு
"அவள் வந்து என் பூவைத் தொடவேண்டும்"
என்று ஒரே உப்பாய் கரிக்கிறது!
"நீ உண்மையில் பூ இல்லை" என்றால்,
"பொய் சொல்லாதே. அப்பறம் என் பெயர் எப்படி பூ
என்று முடிகிறது?" என்கிறது!
அட, பெயர் வைத்த பெரியோர்களே!
காரணம் என்னவென்று சொல்லுங்களேன்!
அதே சமயம்,
என் வீட்டு அடுப்புக்கு மட்டும் அதன் பூவான
நெருப்புவின் மேல் ஒரு வித வெறுப்பு!
அவள் தொடாமலிருந்தும்
"தீண்டாமை கொடிது" என்று சொல்ல முடியாததால்!
மழை காய்க்கும் மேகம்!
மேகக் குலைகளாய் அவள் தேகம்!
தேகத்தில் - தேன் சரிபாதி பாகம்!
எல்லா உயிருக்கும் அவள் மீது மோகம்!
தூதுக்கு கிடைக்கவில்லையே எனக்கொரு காகம்!
சோழர் கால காவிரியாய் என் ஆசைகள்!
கட்டிப் போட்ட கல்லணையாய் அவள் வெட்கம்!
அவள் ஒரு- உடைகளுக்குள் நிரப்பப்பட்ட இனிய அமுதம்!
அதைத் தின்னத் துடிக்கிறது என் இதயக் குமுதம்!
அவள் ஒரு - தலையில் பூச்சூடி மணக்கும் மலர் மாலை!
அவளை மணக்க என்று மலரும் எனக்கொரு காலை?