PDA

View Full Version : சக்கரம்



நாகரா
13-04-2008, 03:03 AM
முடிவு
தொடக்கம்
இவற்றுக்கிடையில்
முன்னேற முயலாது
முடங்கிய சக்கரம்.
வழி தெரியும்.
செல்லவும் முடியும்.
ஆனாலும்
வலிகளை நினத்து
வழியை விட்டு
விலகி நிற்கிறது
இந்த சக்கரம்.

“உருண்டு சென்றால்
உண்டு போதனை.
உறங்கி நின்றால்
நித்திய வேதனை.
கற்களும் முட்களும்
சேரவேண்டிய முடிவின்
முரட்டு இதழ்க்ளே!
முத்த வேதனை
பாதையில் உண்டு.
சித்த சேதமே
மூலையில் உண்டு.
பாதையா?
மூலையா?”
...........................................
...........................................
...........................................
அதோ!
சக்கரம்
கடக்கும் ஓசை
கேட்கிறது

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

அனுராகவன்
13-04-2008, 05:02 AM
நன்றி நாகரா அவர்களே!!
சக்கரம் ஒரு வண்டிக்கு முக்கியம்.
எத்தனை சோதனை வந்தாலும்
சக்கரங்கள் பிரியமுடியுமா..
என் நன்றி....
தொடர்ந்து தாருங்கள்!!

நாகரா
13-04-2008, 05:15 AM
உம் ஊக்க வார்த்தைகளுக்கு நன்றி அனு.

சாலைஜெயராமன்
13-04-2008, 06:57 AM
நல்ல பாதையே நமக்கு வேண்டும். காலச் சக்கரத்தின் வேகத்தில் சிக்குறாது சீரான பாதையை நோக்கி சிந்தனைகள் செல்ல வேண்டும். அற்புத சொல்லோசை திருமிகு நாகரா,

நாகரா
13-04-2008, 07:12 AM
உமது பின்னூட்டத்துக்கு நன்றி சாலை ஜெயராமன் ஐயா.