lenram80
09-04-2008, 09:44 PM
கற்பக மரம் இல்லை!
காமதேனு இல்லை!
இருந்தும்..
பார்த்தவை எல்லாம்
கேட்ட உடனே எனக்குச் சொந்தம்!
கேட்டவை எல்லாம்
பார்த்த உடனே எனக்கு பந்தம்!
ஒரே மகளாய் உலாவி வந்தேன்!
ராஜ குமாரியாய் பவனி வந்தேன்!
அம்மா அப்பாவின் நான்கு விழிகளில்
ஒரே மீனாய் தவழ்ந்து வந்தேன்!
என் கண்ணே! என் உயிரே! என் செல்லமே!
உன்னால் தானடி என் நாள் கூடுதடி!
உன் சிரித்த முகத்தை பார்த்தால்
என் துக்கம் சொல்லாமல் ஓடுதடி!
என்று சொல்லும் அம்மாவை கட்டி அணைத்து தூங்குவேன்!
என்று சொல்லும் அப்பாவை எட்டி முத்தம் வாங்குவேன்!
ஒரு நாள் கண் விழிக்கையில்
நான் கட்டி அணைத்திருந்தது
என் அம்மை இல்லை! பொம்மை!
எட்டிப் பார்த்தால் என் அம்மா அப்பா
அணைத்துக் கொண்டு இன்னொரு பாப்பா!
நான் என்ன தவறு செய்தேன்?
எனை விடுத்து எதற்கு இன்னொன்று?
அப்பா அருகில் வந்து
கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார்!
அந்த பாப்பாவின் கன்னத்தில்!
என் திசை பார்த்து "அக்கா பாரு" என்றார்!
நானும் திரும்பி பார்த்தேன்!
அக்கா நான் ஆனேன் என்று தெரியாமல்!
என் கண்ணே! என் உயிரே! என் செல்லமே!
உன்னால் தானடி என் நாள் கூடுதடி!
உன் சிரித்த முகத்தை பார்த்தால்
என் துக்கம் சொல்லாமல் ஓடுதடி!
இப்போது அந்த தங்கை பாப்பாவிடம்!
அம்மாவை கட்டி அணைத்திட ஏங்குகிறேன்!
அப்பாவை எட்டி முத்தமிட பெருமூச்சு வாங்குகிறேன்!
காமதேனு இல்லை!
இருந்தும்..
பார்த்தவை எல்லாம்
கேட்ட உடனே எனக்குச் சொந்தம்!
கேட்டவை எல்லாம்
பார்த்த உடனே எனக்கு பந்தம்!
ஒரே மகளாய் உலாவி வந்தேன்!
ராஜ குமாரியாய் பவனி வந்தேன்!
அம்மா அப்பாவின் நான்கு விழிகளில்
ஒரே மீனாய் தவழ்ந்து வந்தேன்!
என் கண்ணே! என் உயிரே! என் செல்லமே!
உன்னால் தானடி என் நாள் கூடுதடி!
உன் சிரித்த முகத்தை பார்த்தால்
என் துக்கம் சொல்லாமல் ஓடுதடி!
என்று சொல்லும் அம்மாவை கட்டி அணைத்து தூங்குவேன்!
என்று சொல்லும் அப்பாவை எட்டி முத்தம் வாங்குவேன்!
ஒரு நாள் கண் விழிக்கையில்
நான் கட்டி அணைத்திருந்தது
என் அம்மை இல்லை! பொம்மை!
எட்டிப் பார்த்தால் என் அம்மா அப்பா
அணைத்துக் கொண்டு இன்னொரு பாப்பா!
நான் என்ன தவறு செய்தேன்?
எனை விடுத்து எதற்கு இன்னொன்று?
அப்பா அருகில் வந்து
கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார்!
அந்த பாப்பாவின் கன்னத்தில்!
என் திசை பார்த்து "அக்கா பாரு" என்றார்!
நானும் திரும்பி பார்த்தேன்!
அக்கா நான் ஆனேன் என்று தெரியாமல்!
என் கண்ணே! என் உயிரே! என் செல்லமே!
உன்னால் தானடி என் நாள் கூடுதடி!
உன் சிரித்த முகத்தை பார்த்தால்
என் துக்கம் சொல்லாமல் ஓடுதடி!
இப்போது அந்த தங்கை பாப்பாவிடம்!
அம்மாவை கட்டி அணைத்திட ஏங்குகிறேன்!
அப்பாவை எட்டி முத்தமிட பெருமூச்சு வாங்குகிறேன்!