PDA

View Full Version : மல்லிப்பூ பார்வை



நம்பிகோபாலன்
09-04-2008, 09:07 AM
எப்படி எழுதுவது
எண்ணங்களை
இமைகள் மூடினாலும்
தெரிகிறாள்
இமைகள் திறந்திருப்பினும்
முகம் பார்த்து மறைகிறாள்
என்னாச்சு எனக்கு
தெரியவில்லை
ஒரு நிமிட பார்வையில்
ஆயிரம் ஆயிரம் மல்லிப்பூவை
கொட்டி சென்றாயோ...
பெண்ணே மீண்டும்
ஒருமுறை பார்த்தால்
என்னை பார்க்காமல்
சென்றுவிடு....
நீ பார்த்து
உயிரோடு இருக்க
என்னால் முடியவில்லை.....

மனோஜ்
09-04-2008, 11:06 AM
காதல் பார்
இதுதானோ

ஆனால் பார்வையின் அர்த்தத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்
இல்லாவிட்டால் பின்னாலில் வருத்தம் வரும்

கவிதை அருமை நன்றி

சிவா.ஜி
09-04-2008, 12:10 PM
ஆயிரத்தோடு இதுவும் ஒன்று. புதுசா ஏதாவது சிந்தியுங்க.

ஆதி
09-04-2008, 02:00 PM
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

இந்த குறளே ஞாபகம் வருகிறது நம்பி..