ப்ரியன்
07-04-2008, 10:10 AM
நீ பறித்து சூட
பூத்திருக்கிறது
என்னுள் காதல்!
*
குடை விட்டெரி!
உன்னில்
நனைந்திடத்தான் பொழிகிறது
மழை.
*
காய்வதேயில்லை!
நீ தந்த
முத்தங்களின் ஈரங்கள்!
*
காதுகளுக்கு
உன் பேச்சிசை!
கண்களுக்கு
உன் பேரழகு!
நாசிக்கு
உன் சுகந்தம்!
தேகத்திற்கு
தொடுகை!
என்ன பாவம் செய்தது
உதடுகள் மட்டும்;
வா!முத்தம் தந்துவிட்டுப் போ!
*
நான் ஒரு பக்கம்
உன் உடைந்த
கண்ணாடி வளையல் துண்டுகள்
ஒரு பக்கம்!
சமனாகி விடுகிறது
காதல் துலாபாரம்!
- ப்ரியன்.
பூத்திருக்கிறது
என்னுள் காதல்!
*
குடை விட்டெரி!
உன்னில்
நனைந்திடத்தான் பொழிகிறது
மழை.
*
காய்வதேயில்லை!
நீ தந்த
முத்தங்களின் ஈரங்கள்!
*
காதுகளுக்கு
உன் பேச்சிசை!
கண்களுக்கு
உன் பேரழகு!
நாசிக்கு
உன் சுகந்தம்!
தேகத்திற்கு
தொடுகை!
என்ன பாவம் செய்தது
உதடுகள் மட்டும்;
வா!முத்தம் தந்துவிட்டுப் போ!
*
நான் ஒரு பக்கம்
உன் உடைந்த
கண்ணாடி வளையல் துண்டுகள்
ஒரு பக்கம்!
சமனாகி விடுகிறது
காதல் துலாபாரம்!
- ப்ரியன்.