நம்பிகோபாலன்
05-04-2008, 07:54 PM
இருபத்திமூன்றில் தொடங்கி
முப்பத்திரெண்டு வரை
எத்தனை ராமர்கள்
வில்லொடிக்காமல்
வந்தார்கள் போனார்கள்
எனக்குத்தான்
கல்யாணத்திற்க்கு முன்பே
அக்னிபரீட்சையோ.
மூல நக்ஷத்திரமும்
செவ்வாய் தோஷமும்
நான் கேட்ட வரமா.
உருவமும் உயரமும்
உள்ளத்தை பார்க்க
தடையாக உள்ளதோ.
என்னை பிடிக்கவில்லை
நேரில் கூறிவிடு
காத்திருப்பின் வலி
மிக கொடுமை...
கணக்காளர்
கட்டிடகலையாளர்
மருத்துவர்
மென்போருள் மேன்மயாளர்
ஏன்
எவருக்கும் புரியவில்லை
பெண் மென்மையானவள் என்று
உயர்ந்த தகுதியாய்
மனதிற்க்கு பிடித்தவன்
என்றேனும் வருவான்
காத்திருப்பேன்
அதுவரை
மனதில் வலியோடு.
முப்பத்திரெண்டு வரை
எத்தனை ராமர்கள்
வில்லொடிக்காமல்
வந்தார்கள் போனார்கள்
எனக்குத்தான்
கல்யாணத்திற்க்கு முன்பே
அக்னிபரீட்சையோ.
மூல நக்ஷத்திரமும்
செவ்வாய் தோஷமும்
நான் கேட்ட வரமா.
உருவமும் உயரமும்
உள்ளத்தை பார்க்க
தடையாக உள்ளதோ.
என்னை பிடிக்கவில்லை
நேரில் கூறிவிடு
காத்திருப்பின் வலி
மிக கொடுமை...
கணக்காளர்
கட்டிடகலையாளர்
மருத்துவர்
மென்போருள் மேன்மயாளர்
ஏன்
எவருக்கும் புரியவில்லை
பெண் மென்மையானவள் என்று
உயர்ந்த தகுதியாய்
மனதிற்க்கு பிடித்தவன்
என்றேனும் வருவான்
காத்திருப்பேன்
அதுவரை
மனதில் வலியோடு.