rocky
31-03-2008, 03:34 PM
நீ அழகென்று ஆயிரம்
கவிதைகள் சொல்வேன்
உன்னிடம்,
நீ வெட்கப்பட்டு சிரிக்கும்போது
கவிதைக்கு பொய்தான் அழகு
என்றுகூறி பரிகாசம்
செய்வேன்,
நீ உடனே கொள்ளும்
ஊடலையும், செல்லச் சண்டையையும்,
ஐந்து நிமிடங்கள் மட்டும்
ரசிப்பேன்,
பின் அதற்காக அறைமணி
நேரம் கெஞ்சுவேன், நீ
சிரித்தால் ஆறுமணி நேரம்கூட
கொஞ்சுவேன்,
நீ கொஞ்சிக் கொஞ்சியே
என்னைக் கொல்லப்போகிறாய்
என்பாய்
இல்லை உன்னைக் கொஞ்சிக்
கொஞ்சித்தான் காதலை சாகாமல்
காப்பேன் என்பேன்
நான்,
கவிஞனின் மனைவி வறுமையால்
கஷ்டப்படுவாளென்று செல்லம்மாவாள் உலகம்
அறியும்,
கவிஞனின் காதலியும் காதலால்
கஷ்டப்படுவாளென்று உன்னால்தான் உலகம்
அறியும்.
கவிதைகள் சொல்வேன்
உன்னிடம்,
நீ வெட்கப்பட்டு சிரிக்கும்போது
கவிதைக்கு பொய்தான் அழகு
என்றுகூறி பரிகாசம்
செய்வேன்,
நீ உடனே கொள்ளும்
ஊடலையும், செல்லச் சண்டையையும்,
ஐந்து நிமிடங்கள் மட்டும்
ரசிப்பேன்,
பின் அதற்காக அறைமணி
நேரம் கெஞ்சுவேன், நீ
சிரித்தால் ஆறுமணி நேரம்கூட
கொஞ்சுவேன்,
நீ கொஞ்சிக் கொஞ்சியே
என்னைக் கொல்லப்போகிறாய்
என்பாய்
இல்லை உன்னைக் கொஞ்சிக்
கொஞ்சித்தான் காதலை சாகாமல்
காப்பேன் என்பேன்
நான்,
கவிஞனின் மனைவி வறுமையால்
கஷ்டப்படுவாளென்று செல்லம்மாவாள் உலகம்
அறியும்,
கவிஞனின் காதலியும் காதலால்
கஷ்டப்படுவாளென்று உன்னால்தான் உலகம்
அறியும்.