ஆதி
30-03-2008, 05:41 PM
ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் எழுதியக் கவிதை, எல்லையில் நடந்த ஒரு கொடுமையின் பாதிப்பால் எழுதியது
தங்கையே பேரெழில் நங்கையே - என்
தங்கமே எனைப்பிரிந்த அங்கமே
சொந்தமே இசைச் சந்தமே - தேன்
சிந்துமே நமுயர் பந்தமே
வெள்ளையர் பிரித்திட்டார் எல்லையை - அதிலுன்
பிள்ளையர் கொடுக்கிறார் தொல்லையே
அண்டையே போதுமிந்த சண்டையே - வேண்டாமே
இரண்டகம் கொண்ட வஞ்சகம்
இரத்தமும் கடும் யுத்தமும் - வெடிச்
சத்தமும் கேட்குது நித்தமும்
அயல்தேசமே போதுமுன் வேசமே - உன்
மோசத்தால்நீ தேடுவாய் நாசமே
அச்சமோ எமக்கில்லை சத்தியம் - அன்பு
அகிம்சையே எங்கள் லட்சியம்
இச்சாப் பத்தியம் எமக்கு முக்கியம் - இதை
அறிவது உனக்கு அவசியம்
இணைந்திருந்த காலங்களில்
என்னவாய் மகிழ்ந்திருதோம் - நம்
மைந்தர்களின் செயல்களால்
மகிழ்ச்சியில் களிப்படைந்தோம்
ஒருமனப் பான்மையிலே
அன்னியரை அகற்றினோம் - இன்று
இருமணப் பான்மையில்
வேறுப்பட்டு வாழ்கிறோம்
சகோதரி என்னில்
பிறந்தவள் தானேநீ - என்
எண்ணங்கள் ஒருசில
உன்னில் பதிந்திருக்களாம்
அவற்றை முன்வைத்து
இவற்றைக் கூறுகிறேன் - மடமையை
ஒழி மறைமுகத்
தாக்குதலை நிறுத்து!
போர்முனைப் புதிதல்லஎன் மைந்தருக்கு - அது
ஓர்பொழுது போக்கே எமக்கு
வீரமரபினில் வந்தவர் என்னோர் - சிறு
சலசலப்புக்கு அஞ்சுவார் இல்லை!
வந்தே மாதரமென
வாளெடுத்து வருவோம்
தந்தோம் ஆயிரம்
உயிரெனத் தருவோம்
சிந்தாபாத் என்றே
குருதியும் சிந்துவோம்
அசையும் ஜெயக்கொடி
ஜெயஹிந்தே சொல்லும்
கயமையைவிடு கட்டுப் பாடாயிரு - உடன்பிறப்பே
களமழைத்து காணாமல் போய்விடாதே
இந்திய ராணுவம் திரண்டு வந்தால்
உந்தன் ராஜ்ஜியம் இருண்டு போகும்!
அன்புடன் ஆதி
தங்கையே பேரெழில் நங்கையே - என்
தங்கமே எனைப்பிரிந்த அங்கமே
சொந்தமே இசைச் சந்தமே - தேன்
சிந்துமே நமுயர் பந்தமே
வெள்ளையர் பிரித்திட்டார் எல்லையை - அதிலுன்
பிள்ளையர் கொடுக்கிறார் தொல்லையே
அண்டையே போதுமிந்த சண்டையே - வேண்டாமே
இரண்டகம் கொண்ட வஞ்சகம்
இரத்தமும் கடும் யுத்தமும் - வெடிச்
சத்தமும் கேட்குது நித்தமும்
அயல்தேசமே போதுமுன் வேசமே - உன்
மோசத்தால்நீ தேடுவாய் நாசமே
அச்சமோ எமக்கில்லை சத்தியம் - அன்பு
அகிம்சையே எங்கள் லட்சியம்
இச்சாப் பத்தியம் எமக்கு முக்கியம் - இதை
அறிவது உனக்கு அவசியம்
இணைந்திருந்த காலங்களில்
என்னவாய் மகிழ்ந்திருதோம் - நம்
மைந்தர்களின் செயல்களால்
மகிழ்ச்சியில் களிப்படைந்தோம்
ஒருமனப் பான்மையிலே
அன்னியரை அகற்றினோம் - இன்று
இருமணப் பான்மையில்
வேறுப்பட்டு வாழ்கிறோம்
சகோதரி என்னில்
பிறந்தவள் தானேநீ - என்
எண்ணங்கள் ஒருசில
உன்னில் பதிந்திருக்களாம்
அவற்றை முன்வைத்து
இவற்றைக் கூறுகிறேன் - மடமையை
ஒழி மறைமுகத்
தாக்குதலை நிறுத்து!
போர்முனைப் புதிதல்லஎன் மைந்தருக்கு - அது
ஓர்பொழுது போக்கே எமக்கு
வீரமரபினில் வந்தவர் என்னோர் - சிறு
சலசலப்புக்கு அஞ்சுவார் இல்லை!
வந்தே மாதரமென
வாளெடுத்து வருவோம்
தந்தோம் ஆயிரம்
உயிரெனத் தருவோம்
சிந்தாபாத் என்றே
குருதியும் சிந்துவோம்
அசையும் ஜெயக்கொடி
ஜெயஹிந்தே சொல்லும்
கயமையைவிடு கட்டுப் பாடாயிரு - உடன்பிறப்பே
களமழைத்து காணாமல் போய்விடாதே
இந்திய ராணுவம் திரண்டு வந்தால்
உந்தன் ராஜ்ஜியம் இருண்டு போகும்!
அன்புடன் ஆதி