ராஜா
30-03-2008, 12:30 PM
http://www.hogenakkal.com/hogenakkal_falls_main.jpg
பெங்களூர்: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தமிழக அரசு ஏப்ரல் 9ம் தேதிக்குள் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் ஒரு தமிழக பேருந்தையும் கர்நாடகத்திற்குள் விட மாட்டோம். தமிழ் டிவி சானல்களை தடுத்து நிறுத்துவோம், தமிழ்ப் படங்கள் திரையிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஓகனேக்களை தங்களது மாநிலத்திற்குச் சொந்தமானது என்று கன்னட அமைப்புகள் வீம்பாக கூறி வருகின்றன. இதுதொடர்பாக அவ்வப்போது ஓகனேக்கலுக்குள் நுழைந்து போராட்டமும் நடத்தி வந்தன.
இந்த நிலையில் புதிதாக ஒரு மிரட்டலை கன்னட அமைப்புகள் விடுத்துள்ளன. இதுகுறித்து கன்ன ரக்சன வேதிகே என்கிற கன்னட அமைப்பின் தலைவர் நாராயண கெளடா பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏப்ரல் 9ம் தேதி வரை தமிழக அரசுக்குக் கெடு விதிக்கிறோம்.
அதற்குள் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். கர்நாடக மக்களின் எதிர்ப்புக்கு மாறாக தமிழக அரசு இந்தத் திட்டத்தை அமல்படுத்த முனைகிறது.
பிரச்சினைக்குரிய இடத்தில் அவசரம் அவசரமாக இவ்வாறு குடிநீர்த் திட்டத்தை அமல்படுத்த நினைப்பது கண்டனத்துக்குரியது. எனவே இந்தத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
ஏப்ரல் 9ம் தேதிக்குள் ஓகனேக்கல் குடிநீர்த் திட்டத்தை நிறுத்தாவிட்டால், கர்நாடகத்திற்குள் ஒரு தமிழக பேருந்தையும் நுழைய விட மாட்டோம். தியேட்டர்களில் தமிழ்ப் படங்களைத் திரையிட விடாமல் தடுத்து நிறுத்துவோம். கர்நாடகம் முழுவதும் தமிழ் டிவி சேனல்கள் தடை விதிக்கப்படும் என்று அவர் மிரட்டலாக தெரிவித்தார்.
Source: Oneindia
பெங்களூர்: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தமிழக அரசு ஏப்ரல் 9ம் தேதிக்குள் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் ஒரு தமிழக பேருந்தையும் கர்நாடகத்திற்குள் விட மாட்டோம். தமிழ் டிவி சானல்களை தடுத்து நிறுத்துவோம், தமிழ்ப் படங்கள் திரையிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஓகனேக்களை தங்களது மாநிலத்திற்குச் சொந்தமானது என்று கன்னட அமைப்புகள் வீம்பாக கூறி வருகின்றன. இதுதொடர்பாக அவ்வப்போது ஓகனேக்கலுக்குள் நுழைந்து போராட்டமும் நடத்தி வந்தன.
இந்த நிலையில் புதிதாக ஒரு மிரட்டலை கன்னட அமைப்புகள் விடுத்துள்ளன. இதுகுறித்து கன்ன ரக்சன வேதிகே என்கிற கன்னட அமைப்பின் தலைவர் நாராயண கெளடா பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏப்ரல் 9ம் தேதி வரை தமிழக அரசுக்குக் கெடு விதிக்கிறோம்.
அதற்குள் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். கர்நாடக மக்களின் எதிர்ப்புக்கு மாறாக தமிழக அரசு இந்தத் திட்டத்தை அமல்படுத்த முனைகிறது.
பிரச்சினைக்குரிய இடத்தில் அவசரம் அவசரமாக இவ்வாறு குடிநீர்த் திட்டத்தை அமல்படுத்த நினைப்பது கண்டனத்துக்குரியது. எனவே இந்தத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
ஏப்ரல் 9ம் தேதிக்குள் ஓகனேக்கல் குடிநீர்த் திட்டத்தை நிறுத்தாவிட்டால், கர்நாடகத்திற்குள் ஒரு தமிழக பேருந்தையும் நுழைய விட மாட்டோம். தியேட்டர்களில் தமிழ்ப் படங்களைத் திரையிட விடாமல் தடுத்து நிறுத்துவோம். கர்நாடகம் முழுவதும் தமிழ் டிவி சேனல்கள் தடை விதிக்கப்படும் என்று அவர் மிரட்டலாக தெரிவித்தார்.
Source: Oneindia