மதி
24-03-2008, 02:31 PM
மனசே சரியில்ல. பின்ன வீட்டுல ஜாலியா மூணு நாள் கொட்டமடிச்சுட்டு இப்போ மறுபடி ஊருக்குப் போகணும்னா? ஸ்கூலோ காலேஜோன்னா கட்டடிக்கலாம். ஆபிஸுக்கு சொல்லாம கொள்ளாம கட்டடிக்க முடியாதே. அதுவும் இந்த நேரத்துல. ரிலீஸ் டைம் வேற. அரை மனசோட பெங்களூருக்கு கிளம்பி விட்டேன்.
வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு பயணம். பஸ் ஸ்டாப் வரை அப்பா வந்து வழியனுப்பினார். வரும் வழியில் வீட்டுக் கதை. பத்து மணிக்கு பஸ். திருச்சி பேருந்து நிலையத்திற்கு வந்து சேரும் போது ஒன்பது ஐம்பது. எங்க பாத்தாலும் ஒரே கூட்டம். சென்னைக்கும் பெங்களூருக்கு மாத்தி மாத்தி வண்டி போய்கிட்டு இருந்தது. ஹ்ம். இந்த ஏரியாலேர்ந்து எல்லோரும் படையா கிளம்பி ஐ.டி.க்கு வந்துட்டாங்க.
நான் பதிவு பண்ணியிருந்தது கர்நாடக அரசு பேருந்தில் கும்பகோணத்திலிருந்து வர வேண்டும். வருவதற்கு எப்படியும் பத்தேகால் பத்தரை ஆகுமென்று முதுகில் மடிக்கணினியை சுமந்தவாறே சுற்றலானேன். அங்கிருந்த மற்ற பெங்களூர் வண்டிகளிலெல்லாம் ஆட்கள் ஏறி விட்டனர். அப்புறம் மூன்று நண்பர் குழாமொன்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் தள்ளி டீக்காய் டிரஸ் பண்ணியவாறு என் வயதையொத்த வாலிபன் ஹாண்ட்ஸ் ஃப்ரீயில் பேசிக் கொண்டிருந்தான்.
நேரம் ஆக ஆக ஒவ்வொரு வண்டியாய் கிளம்ப ஆரம்பித்தது. என் வண்டி வருவதாய் காணோம். ஆட்கள் கூட்டமும் குறைய தொடங்கியது. இப்போ இருந்தது சொச்சம் பேர் தான். அந்த மூன்று நண்பர்கள் கூட்டம், புதுசாய் வந்த நண்பர் கூட்டம், அந்த வாலிபன், மற்றும் நாலு பெண்களும் இரண்டு ஆண்களுமாய் இன்னொரு கூட்டம். தனித்தனியா ரெண்டு மூணு பேர் என்னை மாதிரி. எல்லோரும் அந்த பேருந்துக்காக தான் காத்திருக்கிறார்கள் போல. ஒவ்வொரு நொடியும் வாசலில் நுழையும் பேருந்தை பார்ப்பதிலேயே போனது. காத்திருத்தல் கூட சுகம் தான். முதுகில் மட்டும் சுமையில்லாமல் இருந்தால். எதுல தான் செஞ்சாங்கலோ? நல்ல கனம் கனக்குது. அரை மணி நேரம் அப்படியே திரிந்துவிட்டு கிடைத்த இடத்தில் உட்கார்ந்தேன். அப்போது தான் துப்புரவு தொழிலாளர் வர வேண்டும். அவர் பணியை செய்ய எழுந்தேன்.
இப்படியே பராக்கு பார்த்து நடக்கையில் ஒருவன் என்னருகில் வந்து,
"எக்ஸ்கியூஸ் மீ?"
திடுக்கிட்டு திரும்பினேன். ஆள் கொரிய நாட்டு இளைஞன் மாதிரி இருந்தான். சற்றுத் தள்ளி சீன முகத்துடன் ஒரு பெண். அவன் மனைவியோ தோழியோ. அதெல்லாம் நமக்கெதற்கு.
"எஸ்"
"ஆர் யூ வெயிட்டிங் ஃபார் பேங்களூர் பஸ்?" (பெங்களூர் பேரூந்திற்கா காத்திருக்கிறீர்கள்)
"எஸ்."
"ஓ. ஹாய் யூ ரிசர்வ்ட் டிக்கெட்ஸ்? வில் பஸ் ஸ்டாப் ஹியர்" (நீங்க முன்பதிவு செஞ்சிருக்கீங்களா? பேருந்து இங்கேயா நிற்கும்)
"எஸ். பஸ் வில் கம் ஹியர். பட் ஆல் ஆர் ரிசர்வ்ட். அச் இட்ஸ் சண்டே இட்ஸ் டிஃப்பிகல்ட் டு கெட் டிரைக்ட் பஸ் டு பேங்களூர்" (பஸ் இங்க தான் வரும். ஆனா எல்லா டிக்கெட்டும் ரிசர்வ்ட். இன்னிக்கு ஞாயித்துக்கிழமைங்கறதால உங்களுக்கு பெங்களூருக்குப் போக நேரடிப் பேருந்து கிடைப்பது கடினம்)
"தட் கவுண்டர் கை ஆல்ஸோ டோல்ட் த சேம் திங். ஓக்கே வீவில் செக்" (அந்த கவுண்டரில் இருந்தவனும் அத தான் சொன்னான். சரி. நாங்க பாத்துக்கறோம்)
"ஓக்கே"
அந்த பெண்ணை அவன் கூட்டிக் கொண்டு வேறொரு பக்கம் போனான். பத்தரை மணிக்கு மேல அந்த பெண் கூட மொழி தெரியாத ஊரில என்ன கஷ்டப் படப் போறானோ? ஒரு வேளை அவன் மட்டும் தனியே வந்திருந்தால் என் டிக்கெட்டை குடுத்து போக சொல்லியிருக்கலாம். பஸ் மாற்றிப் போவது எனக்கு புதுசா என்ன? போகிறவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.
ம்ஹும். பஸ் வருவதாய் தெரியவில்லை. என்னாச்சு பஸ்ஸுக்கு? மணி பதினொன்றாகப் போகுது. சரி. வரும் போது வரட்டும். தூக்கம் கண்ணை கட்டியது. சரி. இத்தனை பேர் இங்கிருக்கையில என்னை மட்டும் ஏன் வந்து கேட்டான்? ஒருவேளை நான் மட்டும் நல்லவனா தெரியறேனோ?
கண்டதையும் அசை போட்டபடி வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன். ஆச்சு. மணி பதினொன்னேகால். அதோ வந்துவிட்டது பேருந்து. எங்கிருந்தோ மக்கள் கூட்டம் ஓடி வந்தது. பேருந்து நான் நிற்கும் அருகில் வந்தது. இரண்டாம் ஆளாய் டிக்கெட்டை காட்டினேன். ஆனால் ஏற்விடாமல் ரெண்டு பேர் நடுவில் நின்று அவர்கள் டிக்கெட்டை சரி பார்த்த பின் எல்லோரையும் ஏறவிட்டனர். ரிசர்வ் பண்ணினாலும் இது தான்.
வண்டியில் ஏறி இடம் பாத்து உட்கார்ந்தாச்சு. அப்போ தான் கவனித்தேன். அந்த நான்கு பெண்களும் எனக்கு பின் வரிசையில். அதற்கு அடுத்த வரிசையில் இரு ஆண்கள். ஒரே அரட்டையாய் இருந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இப்படித் தான். எப்போதும் நான் டிக்கெட் எடுத்ததில்லை. சூரியாவோ புவனாவோ ப்ரீத்தாவோ யாரோ ஒருவர் எடுப்பாங்க. முன்கூட்டியே பிளான் போட்டு ரயிலில் முன்பதிவு செஞ்சிடுவாங்க. எனக்கும் சதீஷுக்கும் வேலை ஓடிப் போய் ரயிலில் ஏறுவது மட்டும் தான். ஒரே கம்பெனினாலும் வெவ்வேறு டீமில் இருப்பதால் கதையோ கதையா இருக்கும். அடுத்தவங்ககிட்ட திட்டு வாங்கிட்டு தான் தூங்கப் போறதே. இப்போ எல்லோருக்கும் கல்யாணம் ஆயாச்சு. அதான் கடைசி நேரத்துல் பஸ்ல புக் பண்ணி தனி ஆளா கிளம்பறேன். சதீஷ் வேற ஆன்சைட் போயிட்டான். அதெல்லாம் ஒரு காலம்.
எம்பி3 ப்ளேயரை எடுத்து ஒரு காதில் மாட்டிவிட்டு அவர்கள் பேச்சை கவனிக்கலானேன். பையன் பேச ஆரம்பித்தான்.
"ஏய் ராதிகா. இந்தா உன்னோட குடை. இது தான் அன்னிக்கு காப்பாத்துச்சு. ஒசூர்ல செம மழை.."
"ஆமா எத்தன மணிக்கு கிளம்பின?"
"எலக்ட்ரானிக் சிட்டி பஸ் ஸ்டாப்பில ஏறும் போது மணி ஏழேகால். காலையில திருச்சி வரும் போது அடை மழை. வீட்டுக்கு போறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. அம்மா நான் வர்றேன்னா இல்லியான்னு தவிச்சு போயிருந்தாங்க. குடைய பாத்ததும் அவங்களுக்கு ஒன்னும் புரியல.."
"என்னடா என்னிக்கும் இல்லாத வழக்கமா பையன் குடையோட வர்றானேன்னா.."
"ம்ம் அதான் பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும்."
"சரி. போதும்..ஆமா நீ ஏன் போன் பண்ணல.."
"போன் பண்ணனும்னு தான் நினைச்சேன். போனதும் நல்லா தூங்கிட்டேன். எந்திருச்சதுக்கு அப்புறம் ஞாபகம் வரல"
பேச்சு ரகளையாயிருந்தது. இது தான் ஆண் பெண் நட்பு. நம் மேல் அக்கறை காட்ட ஒரு பெண் இருக்கிறாள் என்ற எண்ணமும் நம் அக்கறையை எதிர்பார்க்கும் ஆணொருவனிருக்கிறான் என்ற எண்ணமும் தான் இந்த உறவின் பாலம்.
அந்த ராதிகா அந்த கூட்டத்திலேயே பிரபலமான பெண் போலும். நிமிஷத்துக்கு ஒரு தரம் 'ராதிகா…ராதிகா..'னு சத்தம். எல்லாம் அடங்க அரை மணி நேரமாயிற்று. அதுவரை ஒரு காதில் பாட்டு கேட்டுக் கொண்டே அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தேன். எங்கியோ தொலைந்து போயிருந்த தூக்கம் மறுபடி கண்ணை சுழற்ற எம்பி3 பிளேயரை அணைத்து விட்டு தூங்க ஆரம்பித்தேன்.
என்னடா இதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்னு யோசிக்கறீங்களா? இருக்குங்க. நிச்சயம் இருக்கு. பேருந்து நிலையத்தில் ஆண்கள் கூட்டமா நின்னு பேசிட்டு இருந்தாங்க. அவங்க என்ன பேசறாங்கன்னு கவனிக்கல. ஆனா ஆணும் பெண்ணும் கூட்டமா பஸ்ல ஏறி ஜாலியா பேசிட்டு இருந்ததை பாட்டு கூட சரியா கேக்காம கவனிக்க தோணியது. இது என் வயசுக் கோளாறில்லாம வேற என்னங்க.!
வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு பயணம். பஸ் ஸ்டாப் வரை அப்பா வந்து வழியனுப்பினார். வரும் வழியில் வீட்டுக் கதை. பத்து மணிக்கு பஸ். திருச்சி பேருந்து நிலையத்திற்கு வந்து சேரும் போது ஒன்பது ஐம்பது. எங்க பாத்தாலும் ஒரே கூட்டம். சென்னைக்கும் பெங்களூருக்கு மாத்தி மாத்தி வண்டி போய்கிட்டு இருந்தது. ஹ்ம். இந்த ஏரியாலேர்ந்து எல்லோரும் படையா கிளம்பி ஐ.டி.க்கு வந்துட்டாங்க.
நான் பதிவு பண்ணியிருந்தது கர்நாடக அரசு பேருந்தில் கும்பகோணத்திலிருந்து வர வேண்டும். வருவதற்கு எப்படியும் பத்தேகால் பத்தரை ஆகுமென்று முதுகில் மடிக்கணினியை சுமந்தவாறே சுற்றலானேன். அங்கிருந்த மற்ற பெங்களூர் வண்டிகளிலெல்லாம் ஆட்கள் ஏறி விட்டனர். அப்புறம் மூன்று நண்பர் குழாமொன்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் தள்ளி டீக்காய் டிரஸ் பண்ணியவாறு என் வயதையொத்த வாலிபன் ஹாண்ட்ஸ் ஃப்ரீயில் பேசிக் கொண்டிருந்தான்.
நேரம் ஆக ஆக ஒவ்வொரு வண்டியாய் கிளம்ப ஆரம்பித்தது. என் வண்டி வருவதாய் காணோம். ஆட்கள் கூட்டமும் குறைய தொடங்கியது. இப்போ இருந்தது சொச்சம் பேர் தான். அந்த மூன்று நண்பர்கள் கூட்டம், புதுசாய் வந்த நண்பர் கூட்டம், அந்த வாலிபன், மற்றும் நாலு பெண்களும் இரண்டு ஆண்களுமாய் இன்னொரு கூட்டம். தனித்தனியா ரெண்டு மூணு பேர் என்னை மாதிரி. எல்லோரும் அந்த பேருந்துக்காக தான் காத்திருக்கிறார்கள் போல. ஒவ்வொரு நொடியும் வாசலில் நுழையும் பேருந்தை பார்ப்பதிலேயே போனது. காத்திருத்தல் கூட சுகம் தான். முதுகில் மட்டும் சுமையில்லாமல் இருந்தால். எதுல தான் செஞ்சாங்கலோ? நல்ல கனம் கனக்குது. அரை மணி நேரம் அப்படியே திரிந்துவிட்டு கிடைத்த இடத்தில் உட்கார்ந்தேன். அப்போது தான் துப்புரவு தொழிலாளர் வர வேண்டும். அவர் பணியை செய்ய எழுந்தேன்.
இப்படியே பராக்கு பார்த்து நடக்கையில் ஒருவன் என்னருகில் வந்து,
"எக்ஸ்கியூஸ் மீ?"
திடுக்கிட்டு திரும்பினேன். ஆள் கொரிய நாட்டு இளைஞன் மாதிரி இருந்தான். சற்றுத் தள்ளி சீன முகத்துடன் ஒரு பெண். அவன் மனைவியோ தோழியோ. அதெல்லாம் நமக்கெதற்கு.
"எஸ்"
"ஆர் யூ வெயிட்டிங் ஃபார் பேங்களூர் பஸ்?" (பெங்களூர் பேரூந்திற்கா காத்திருக்கிறீர்கள்)
"எஸ்."
"ஓ. ஹாய் யூ ரிசர்வ்ட் டிக்கெட்ஸ்? வில் பஸ் ஸ்டாப் ஹியர்" (நீங்க முன்பதிவு செஞ்சிருக்கீங்களா? பேருந்து இங்கேயா நிற்கும்)
"எஸ். பஸ் வில் கம் ஹியர். பட் ஆல் ஆர் ரிசர்வ்ட். அச் இட்ஸ் சண்டே இட்ஸ் டிஃப்பிகல்ட் டு கெட் டிரைக்ட் பஸ் டு பேங்களூர்" (பஸ் இங்க தான் வரும். ஆனா எல்லா டிக்கெட்டும் ரிசர்வ்ட். இன்னிக்கு ஞாயித்துக்கிழமைங்கறதால உங்களுக்கு பெங்களூருக்குப் போக நேரடிப் பேருந்து கிடைப்பது கடினம்)
"தட் கவுண்டர் கை ஆல்ஸோ டோல்ட் த சேம் திங். ஓக்கே வீவில் செக்" (அந்த கவுண்டரில் இருந்தவனும் அத தான் சொன்னான். சரி. நாங்க பாத்துக்கறோம்)
"ஓக்கே"
அந்த பெண்ணை அவன் கூட்டிக் கொண்டு வேறொரு பக்கம் போனான். பத்தரை மணிக்கு மேல அந்த பெண் கூட மொழி தெரியாத ஊரில என்ன கஷ்டப் படப் போறானோ? ஒரு வேளை அவன் மட்டும் தனியே வந்திருந்தால் என் டிக்கெட்டை குடுத்து போக சொல்லியிருக்கலாம். பஸ் மாற்றிப் போவது எனக்கு புதுசா என்ன? போகிறவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.
ம்ஹும். பஸ் வருவதாய் தெரியவில்லை. என்னாச்சு பஸ்ஸுக்கு? மணி பதினொன்றாகப் போகுது. சரி. வரும் போது வரட்டும். தூக்கம் கண்ணை கட்டியது. சரி. இத்தனை பேர் இங்கிருக்கையில என்னை மட்டும் ஏன் வந்து கேட்டான்? ஒருவேளை நான் மட்டும் நல்லவனா தெரியறேனோ?
கண்டதையும் அசை போட்டபடி வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன். ஆச்சு. மணி பதினொன்னேகால். அதோ வந்துவிட்டது பேருந்து. எங்கிருந்தோ மக்கள் கூட்டம் ஓடி வந்தது. பேருந்து நான் நிற்கும் அருகில் வந்தது. இரண்டாம் ஆளாய் டிக்கெட்டை காட்டினேன். ஆனால் ஏற்விடாமல் ரெண்டு பேர் நடுவில் நின்று அவர்கள் டிக்கெட்டை சரி பார்த்த பின் எல்லோரையும் ஏறவிட்டனர். ரிசர்வ் பண்ணினாலும் இது தான்.
வண்டியில் ஏறி இடம் பாத்து உட்கார்ந்தாச்சு. அப்போ தான் கவனித்தேன். அந்த நான்கு பெண்களும் எனக்கு பின் வரிசையில். அதற்கு அடுத்த வரிசையில் இரு ஆண்கள். ஒரே அரட்டையாய் இருந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இப்படித் தான். எப்போதும் நான் டிக்கெட் எடுத்ததில்லை. சூரியாவோ புவனாவோ ப்ரீத்தாவோ யாரோ ஒருவர் எடுப்பாங்க. முன்கூட்டியே பிளான் போட்டு ரயிலில் முன்பதிவு செஞ்சிடுவாங்க. எனக்கும் சதீஷுக்கும் வேலை ஓடிப் போய் ரயிலில் ஏறுவது மட்டும் தான். ஒரே கம்பெனினாலும் வெவ்வேறு டீமில் இருப்பதால் கதையோ கதையா இருக்கும். அடுத்தவங்ககிட்ட திட்டு வாங்கிட்டு தான் தூங்கப் போறதே. இப்போ எல்லோருக்கும் கல்யாணம் ஆயாச்சு. அதான் கடைசி நேரத்துல் பஸ்ல புக் பண்ணி தனி ஆளா கிளம்பறேன். சதீஷ் வேற ஆன்சைட் போயிட்டான். அதெல்லாம் ஒரு காலம்.
எம்பி3 ப்ளேயரை எடுத்து ஒரு காதில் மாட்டிவிட்டு அவர்கள் பேச்சை கவனிக்கலானேன். பையன் பேச ஆரம்பித்தான்.
"ஏய் ராதிகா. இந்தா உன்னோட குடை. இது தான் அன்னிக்கு காப்பாத்துச்சு. ஒசூர்ல செம மழை.."
"ஆமா எத்தன மணிக்கு கிளம்பின?"
"எலக்ட்ரானிக் சிட்டி பஸ் ஸ்டாப்பில ஏறும் போது மணி ஏழேகால். காலையில திருச்சி வரும் போது அடை மழை. வீட்டுக்கு போறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. அம்மா நான் வர்றேன்னா இல்லியான்னு தவிச்சு போயிருந்தாங்க. குடைய பாத்ததும் அவங்களுக்கு ஒன்னும் புரியல.."
"என்னடா என்னிக்கும் இல்லாத வழக்கமா பையன் குடையோட வர்றானேன்னா.."
"ம்ம் அதான் பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும்."
"சரி. போதும்..ஆமா நீ ஏன் போன் பண்ணல.."
"போன் பண்ணனும்னு தான் நினைச்சேன். போனதும் நல்லா தூங்கிட்டேன். எந்திருச்சதுக்கு அப்புறம் ஞாபகம் வரல"
பேச்சு ரகளையாயிருந்தது. இது தான் ஆண் பெண் நட்பு. நம் மேல் அக்கறை காட்ட ஒரு பெண் இருக்கிறாள் என்ற எண்ணமும் நம் அக்கறையை எதிர்பார்க்கும் ஆணொருவனிருக்கிறான் என்ற எண்ணமும் தான் இந்த உறவின் பாலம்.
அந்த ராதிகா அந்த கூட்டத்திலேயே பிரபலமான பெண் போலும். நிமிஷத்துக்கு ஒரு தரம் 'ராதிகா…ராதிகா..'னு சத்தம். எல்லாம் அடங்க அரை மணி நேரமாயிற்று. அதுவரை ஒரு காதில் பாட்டு கேட்டுக் கொண்டே அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தேன். எங்கியோ தொலைந்து போயிருந்த தூக்கம் மறுபடி கண்ணை சுழற்ற எம்பி3 பிளேயரை அணைத்து விட்டு தூங்க ஆரம்பித்தேன்.
என்னடா இதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்னு யோசிக்கறீங்களா? இருக்குங்க. நிச்சயம் இருக்கு. பேருந்து நிலையத்தில் ஆண்கள் கூட்டமா நின்னு பேசிட்டு இருந்தாங்க. அவங்க என்ன பேசறாங்கன்னு கவனிக்கல. ஆனா ஆணும் பெண்ணும் கூட்டமா பஸ்ல ஏறி ஜாலியா பேசிட்டு இருந்ததை பாட்டு கூட சரியா கேக்காம கவனிக்க தோணியது. இது என் வயசுக் கோளாறில்லாம வேற என்னங்க.!