மதி
23-03-2008, 08:58 AM
பேருந்து மெதுவா போய் கொண்டிருந்தது. மாட்டு வண்டி கூட இதைவிட வேகமா போகும். வண்டி முழுக்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடைவிடாது பெய்த மழை இப்போது நின்றிருந்தது. சாலைக்கு இருபக்கமும் வயக்காடு. மழையினால் புத்துணர்ச்சியோடு தலையாட்டின நெற்கதிர்கள். ரம்மியமான சூழ்நிலை. இயற்கையை அனுபவிக்கும் யாரையும் மெய்மறக்கச் செய்யும். ரவியும் அப்படிப் பட்டவன் தான். ஆயினும் அவன் மனம் எதிலும் நிலைக்கவில்லை. காரணம் அப்பா.
ரவியும் அவன் தம்பியும் சிறுவர்களாக இருக்கும் போதே அவர்கள் தாய் செத்துப் போனாள். அப்போது ஊருக்குள் பரவியிருந்த விஷக் காய்ச்சல் அவளுக்கும் வந்து காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. அப்போது ரவிக்கு பத்து வயதிருக்கும். சின்னவன் குமாருக்கு ஏழு வயது. அதன் பின் அப்பா தான் எல்லாமே. கொஞ்சம் கொஞ்சமாய் விவரம் தெரிய ஆரம்பித்திருந்த நேரம். அப்பா விவசாயம் செய்தார். சொந்தமா ரெண்டு ஏக்கர் இருந்தது. அதை வைத்து தான் ஜீவனம்.
அம்மா இறப்பதற்கு முன் அப்பா கோவக்காரராய் இருந்தார். எதற்கெடுத்தாலும் அம்மா கூட சண்டை போடுவார். அப்போதெல்லாம் அம்மாவை அப்பாக்கு பிடிக்காதோன்னு ரவிக்கு தோன்றும். ஆனால் அம்மா இறந்த பிறகு சுத்தமா மாறிட்டார். அமைதியான பேச்சு. நிதானமான பார்வை. அதுக்கப்புறம் உறவுக்காரங்க எவ்வளவோ சொல்லியும் ரெண்டாம் கல்யாணம் செய்துக்க முடியாதுன்னு சொல்லிட்டார்.
வயசாக ஆக ரவிக்கு அப்பா அம்மா மேல் வைத்திருந்த அன்பு புரிபட ஆரம்பித்தது. தனி ஆளாய் பிள்ளைகளுக்கு சமைத்து போட்டு விவசாயம் பார்த்து படிக்க வைத்தார். ரவியும் குமாரும் விளையாட்டுப் பிள்ளைகள். எதுக்கெடுத்தாலும் சண்டை பிடித்துக் கொள்வார்கள். அப்போதெல்லாம் அப்பா கோவப்படாமல் இருவரையும் சமாதானப் படுத்துவார். பக்கத்து வீட்டு செல்வம் அம்மா, செல்வம் தப்பு செஞ்ச போதெல்லாம் அடிக்கறப்போ அப்பா மட்டும் அடிக்காதது அவனுக்கு ஆச்சர்யமா இருக்கும். அப்பா மேல கொஞ்சம் கொஞ்சமாய் ஈர்ப்பு வந்தது.
இருவரும் காலேஜுக்கு போன பிறகு தான் அப்பாவை பிரிய நேர்ந்தது. வெளி உலகை காண நேர்ந்தது. அப்பாவின் அரவணைப்பிலே இருந்த சுகம் உறைக்க ஆரம்பித்தது. உலகம் நினைத்தது மாதிரி வாழ அவ்வளவு சுலபமில்லை. ஏகத்துக்கும் சண்டை போட வேண்டியிருக்கிறது. அப்போதெல்லாம் அப்பா தான் நினைவுக்கு வருவார். எதனால் அவருக்கு கோவமே வருவதில்லை? எனக்கு இவ்ளோ கோவம் வருது. நாம நல்லது பண்ண நினைச்சாலும் நமக்கு கெட்டது தானே நினைக்கறாங்க.
வேலைக்கு சேர்ந்து ஒரு முறை அப்பாவை பார்க்க போன போது கேட்டே விட்டான்.
“அப்பா நீங்க ஏன்ப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கல?”
“வேணும்னு தோணல”
“உங்களுக்கு கோவமே வராதாப்பா?”
“வரும்ப்பா.. நிறைய வரும். அதெல்லாம் அப்போ. உங்கம்மா போனபிறகு வாழ்க்கையின் அர்த்தம் புரிய ஆரம்பித்தது. வாழ்க்கையே தொலைத்தது போலருந்தது.”
“அப்புறம்…”
“இருந்த வரைக்கும் உன் அம்மா சந்தோசமா இருந்தாளான்னு தெரியல. போகும் போது கூட நோய்வாய்ப்பட்டு தான் போனா.”
“ம்..”
“அதுவரை எனக்குள் இருந்த ஆண் திமிர் குறைய ஆரம்பிச்சது. நான் கோவப் படறதால யாருக்கும் சந்தோஷமில்லேன்னு புரிஞ்சுது. ஏன் எனக்கும் தான். யாருக்குமே சந்தோஷம் தராததற்கு ஏன் கோபபடணும்னு தோணுச்சு. அன்னிலேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா கோவம் குறைய ஆரம்பிச்சுடுச்சு. இப்போ சுத்தமா இல்லே.”
“யார் உங்கள திட்டினாலும் கோவம் வராதாப்பா?”
“ஏன் திட்டறாங்கன்னு யோசிப்பேன். யோசிக்கற நேரத்துல கோவம் குறைய ஆரம்பிச்சுடும். கொஞ்ச நேரத்துல சுத்தமா போயிடும்”
இன்னும் அப்பா புரியாத புதிராய் தான் தெரிந்தார். ஆனாலும் அவர் மேல் இருந்த மரியாதை மிக மிக அதிகமானது. இப்படித் தான் ஒருமுறை அலுவலகத்தில் மேலாளருடன் சண்டை. கோவம் கோவமாய் வந்தது. அதிகமா உழைத்தது நான். ஆனால் பேர் இன்னொருத்தனுக்கா என்ற ஆதங்கம். குமுறிய நெஞ்சத்துடன் அந்த வாரயிறுதியில் ஊருக்கு வந்தவனை அப்பா வரவேற்றார். முகத்தில் வாட்டம் இருப்பதைப் பார்த்து வினவினார்.
“என்னப்பா.. என்னாச்சு?”
“இந்த உலகத்துல நேர்மை நியாயம் எதுவும் இல்லேப்பா. எங்க போனாலும் ஏமாத்தறாங்க. நான் கஷ்டப்பட்டு வேலை பாத்தேன். இன்னொருத்தனுக்கு பிரமோஷன் தர்றாங்க. இந்த காலத்துல எல்லாத்துக்கும் காக்கா பிடிக்க வேண்டியிருக்கு. நினைத்தது கிடைக்கலேன்னா எப்படிப்பா சந்தோஷமா இருக்க முடியும்?”
“இப்போ நீ சந்தோஷமா இருக்கியா இல்லியா?”
“எப்படிப்பா இருக்கறது? அதான் கிடைக்க வேண்டியது கிடைக்காம போச்சே..”
“அப்போ பிரமோஷன் கிடைச்சா உனக்கு சந்தோஷமா?”
“ஆமாம்ப்பா..அப்போ தானே சந்தோஷம். உழைப்பிற்கான பலன்”
“சரி. பிரமோஷம் கிடைக்குதுன்னே வச்சிக்க. அப்புறம் என்ன?”
“அதை வச்சு நிறைய சம்பாதிச்சு இன்னும் சந்தோஷமா இருக்கலாம்.”
“அப்போ பிரமோஷன் கிடைச்சாலும் அதிகமா சம்பாதியம் இருந்தா உனக்கு சந்தோஷம்…”
சுரீரென்று ஏதோ உறைத்தது போலிருந்தது. மனம், சந்தோஷத்திற்கான காரணம் என்ன என்று அறிய முற்பட்டது. அப்பா விவசாயம் பண்றார். ஆனா சந்தோஷமா தானே இருக்கார். எந்நேரமும் புன்னகை மாறாத முகம். தெளிவான பார்வை. அளவான பேச்சு. அப்பா சந்தோஷமா இல்லியா. பின்ன நான் மட்டும் ஏன் சோகமாய்..
உள்ளுக்குள் ஏதோ முடிச்சு அவிழ்வது போலிருந்தது. அன்றிலிருந்து அவன் தேடல் மாறிவிட்டது. சந்தோஷமாய் இருக்கப் பழகி கொண்டான். பணமோ பொருளோ அவன் சந்தோஷத்தை நிர்ணயிப்பதில்லை. மனம் தெளிவாக சிந்தனைத் திறன் வளர்ந்தது. கிடைக்காததை நினைத்து வருந்திய பொழுதுகளை விட்டொழித்து இனி செய்ய வேண்டிய காரியங்களை மட்டும் யோசித்தது. அதற்கு நல்ல பலன் இருந்தது. இதுவரை அவன் கோபப்பட்டு பார்த்தவர்கள் மாற்றத்தைக் கண்டார்கள். அவன் வேலையில் வீரியம் சேர்ந்திருப்பதை உணர்ந்தார்கள். நம்பிக்கை கொண்டார்கள். சந்தோஷமாயிருந்தது.
வண்டி நின்றது. இதோ அவன் இறங்க வேண்டிய நிறுத்தம். கைப்பையை எடுத்துக் கொண்டு இறங்கினான். தெருவில் நுழையும் போது வீட்டு வாசல் முன் போடப்பட்டிருந்த பந்தல் கண்ணில் பட்டது. ஊரே திரண்டிருந்தது. இவனைப் பார்த்ததும் குமார் ஓடோடி வந்தான்.
“அண்ணா…அப்பாஆ…” அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. இவன் வருவதைப் பார்த்ததும் ஊர்க்கிழவிகளின் ஒப்பாரி அதிகரித்தது. காதில் எதுவும் விழவில்லை. பையை வைத்துவிட்டு கண்ணில் கண்ணீருடன் அப்பா கிடத்தப்பட்டிருந்த இடம் நோக்கிப் போனான். அப்பாவை கூர்ந்து கவனித்தான்.
அதே அமைதி ததும்பும் முகம். முகத்தில் மெல்லிய புன்னகை. சந்தோஷமாக இருந்ததற்கான அடையாளம் இது. அப்பா இறக்கும் போதும் சந்தோஷமாக தான் இருந்திருக்கிறார்.
மனம் சந்தோஷப்பட்டது. கண்ணீர் நின்றது. அருகில் போய் நின்று அப்பாவின் முகத்தையே கூர்ந்து கவனிக்கலானான். பள்ளிக்கூடமும் கல்லூரியும் கற்றுத் தராததை கற்றுத் தந்த போதிமரமல்லவா? ஆசை நிறைவேறி சந்தோஷமாக மரணத்தை எதிர் கொள்பவர்க்கு மறுஜென்மமும் கிடையாதாம். ஆவியாகவும் அலைய மாட்டார்களாம். அப்பா தெய்வப் பதவி அடைந்துவிட்டார்.
ரவியும் அவன் தம்பியும் சிறுவர்களாக இருக்கும் போதே அவர்கள் தாய் செத்துப் போனாள். அப்போது ஊருக்குள் பரவியிருந்த விஷக் காய்ச்சல் அவளுக்கும் வந்து காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. அப்போது ரவிக்கு பத்து வயதிருக்கும். சின்னவன் குமாருக்கு ஏழு வயது. அதன் பின் அப்பா தான் எல்லாமே. கொஞ்சம் கொஞ்சமாய் விவரம் தெரிய ஆரம்பித்திருந்த நேரம். அப்பா விவசாயம் செய்தார். சொந்தமா ரெண்டு ஏக்கர் இருந்தது. அதை வைத்து தான் ஜீவனம்.
அம்மா இறப்பதற்கு முன் அப்பா கோவக்காரராய் இருந்தார். எதற்கெடுத்தாலும் அம்மா கூட சண்டை போடுவார். அப்போதெல்லாம் அம்மாவை அப்பாக்கு பிடிக்காதோன்னு ரவிக்கு தோன்றும். ஆனால் அம்மா இறந்த பிறகு சுத்தமா மாறிட்டார். அமைதியான பேச்சு. நிதானமான பார்வை. அதுக்கப்புறம் உறவுக்காரங்க எவ்வளவோ சொல்லியும் ரெண்டாம் கல்யாணம் செய்துக்க முடியாதுன்னு சொல்லிட்டார்.
வயசாக ஆக ரவிக்கு அப்பா அம்மா மேல் வைத்திருந்த அன்பு புரிபட ஆரம்பித்தது. தனி ஆளாய் பிள்ளைகளுக்கு சமைத்து போட்டு விவசாயம் பார்த்து படிக்க வைத்தார். ரவியும் குமாரும் விளையாட்டுப் பிள்ளைகள். எதுக்கெடுத்தாலும் சண்டை பிடித்துக் கொள்வார்கள். அப்போதெல்லாம் அப்பா கோவப்படாமல் இருவரையும் சமாதானப் படுத்துவார். பக்கத்து வீட்டு செல்வம் அம்மா, செல்வம் தப்பு செஞ்ச போதெல்லாம் அடிக்கறப்போ அப்பா மட்டும் அடிக்காதது அவனுக்கு ஆச்சர்யமா இருக்கும். அப்பா மேல கொஞ்சம் கொஞ்சமாய் ஈர்ப்பு வந்தது.
இருவரும் காலேஜுக்கு போன பிறகு தான் அப்பாவை பிரிய நேர்ந்தது. வெளி உலகை காண நேர்ந்தது. அப்பாவின் அரவணைப்பிலே இருந்த சுகம் உறைக்க ஆரம்பித்தது. உலகம் நினைத்தது மாதிரி வாழ அவ்வளவு சுலபமில்லை. ஏகத்துக்கும் சண்டை போட வேண்டியிருக்கிறது. அப்போதெல்லாம் அப்பா தான் நினைவுக்கு வருவார். எதனால் அவருக்கு கோவமே வருவதில்லை? எனக்கு இவ்ளோ கோவம் வருது. நாம நல்லது பண்ண நினைச்சாலும் நமக்கு கெட்டது தானே நினைக்கறாங்க.
வேலைக்கு சேர்ந்து ஒரு முறை அப்பாவை பார்க்க போன போது கேட்டே விட்டான்.
“அப்பா நீங்க ஏன்ப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கல?”
“வேணும்னு தோணல”
“உங்களுக்கு கோவமே வராதாப்பா?”
“வரும்ப்பா.. நிறைய வரும். அதெல்லாம் அப்போ. உங்கம்மா போனபிறகு வாழ்க்கையின் அர்த்தம் புரிய ஆரம்பித்தது. வாழ்க்கையே தொலைத்தது போலருந்தது.”
“அப்புறம்…”
“இருந்த வரைக்கும் உன் அம்மா சந்தோசமா இருந்தாளான்னு தெரியல. போகும் போது கூட நோய்வாய்ப்பட்டு தான் போனா.”
“ம்..”
“அதுவரை எனக்குள் இருந்த ஆண் திமிர் குறைய ஆரம்பிச்சது. நான் கோவப் படறதால யாருக்கும் சந்தோஷமில்லேன்னு புரிஞ்சுது. ஏன் எனக்கும் தான். யாருக்குமே சந்தோஷம் தராததற்கு ஏன் கோபபடணும்னு தோணுச்சு. அன்னிலேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா கோவம் குறைய ஆரம்பிச்சுடுச்சு. இப்போ சுத்தமா இல்லே.”
“யார் உங்கள திட்டினாலும் கோவம் வராதாப்பா?”
“ஏன் திட்டறாங்கன்னு யோசிப்பேன். யோசிக்கற நேரத்துல கோவம் குறைய ஆரம்பிச்சுடும். கொஞ்ச நேரத்துல சுத்தமா போயிடும்”
இன்னும் அப்பா புரியாத புதிராய் தான் தெரிந்தார். ஆனாலும் அவர் மேல் இருந்த மரியாதை மிக மிக அதிகமானது. இப்படித் தான் ஒருமுறை அலுவலகத்தில் மேலாளருடன் சண்டை. கோவம் கோவமாய் வந்தது. அதிகமா உழைத்தது நான். ஆனால் பேர் இன்னொருத்தனுக்கா என்ற ஆதங்கம். குமுறிய நெஞ்சத்துடன் அந்த வாரயிறுதியில் ஊருக்கு வந்தவனை அப்பா வரவேற்றார். முகத்தில் வாட்டம் இருப்பதைப் பார்த்து வினவினார்.
“என்னப்பா.. என்னாச்சு?”
“இந்த உலகத்துல நேர்மை நியாயம் எதுவும் இல்லேப்பா. எங்க போனாலும் ஏமாத்தறாங்க. நான் கஷ்டப்பட்டு வேலை பாத்தேன். இன்னொருத்தனுக்கு பிரமோஷன் தர்றாங்க. இந்த காலத்துல எல்லாத்துக்கும் காக்கா பிடிக்க வேண்டியிருக்கு. நினைத்தது கிடைக்கலேன்னா எப்படிப்பா சந்தோஷமா இருக்க முடியும்?”
“இப்போ நீ சந்தோஷமா இருக்கியா இல்லியா?”
“எப்படிப்பா இருக்கறது? அதான் கிடைக்க வேண்டியது கிடைக்காம போச்சே..”
“அப்போ பிரமோஷன் கிடைச்சா உனக்கு சந்தோஷமா?”
“ஆமாம்ப்பா..அப்போ தானே சந்தோஷம். உழைப்பிற்கான பலன்”
“சரி. பிரமோஷம் கிடைக்குதுன்னே வச்சிக்க. அப்புறம் என்ன?”
“அதை வச்சு நிறைய சம்பாதிச்சு இன்னும் சந்தோஷமா இருக்கலாம்.”
“அப்போ பிரமோஷன் கிடைச்சாலும் அதிகமா சம்பாதியம் இருந்தா உனக்கு சந்தோஷம்…”
சுரீரென்று ஏதோ உறைத்தது போலிருந்தது. மனம், சந்தோஷத்திற்கான காரணம் என்ன என்று அறிய முற்பட்டது. அப்பா விவசாயம் பண்றார். ஆனா சந்தோஷமா தானே இருக்கார். எந்நேரமும் புன்னகை மாறாத முகம். தெளிவான பார்வை. அளவான பேச்சு. அப்பா சந்தோஷமா இல்லியா. பின்ன நான் மட்டும் ஏன் சோகமாய்..
உள்ளுக்குள் ஏதோ முடிச்சு அவிழ்வது போலிருந்தது. அன்றிலிருந்து அவன் தேடல் மாறிவிட்டது. சந்தோஷமாய் இருக்கப் பழகி கொண்டான். பணமோ பொருளோ அவன் சந்தோஷத்தை நிர்ணயிப்பதில்லை. மனம் தெளிவாக சிந்தனைத் திறன் வளர்ந்தது. கிடைக்காததை நினைத்து வருந்திய பொழுதுகளை விட்டொழித்து இனி செய்ய வேண்டிய காரியங்களை மட்டும் யோசித்தது. அதற்கு நல்ல பலன் இருந்தது. இதுவரை அவன் கோபப்பட்டு பார்த்தவர்கள் மாற்றத்தைக் கண்டார்கள். அவன் வேலையில் வீரியம் சேர்ந்திருப்பதை உணர்ந்தார்கள். நம்பிக்கை கொண்டார்கள். சந்தோஷமாயிருந்தது.
வண்டி நின்றது. இதோ அவன் இறங்க வேண்டிய நிறுத்தம். கைப்பையை எடுத்துக் கொண்டு இறங்கினான். தெருவில் நுழையும் போது வீட்டு வாசல் முன் போடப்பட்டிருந்த பந்தல் கண்ணில் பட்டது. ஊரே திரண்டிருந்தது. இவனைப் பார்த்ததும் குமார் ஓடோடி வந்தான்.
“அண்ணா…அப்பாஆ…” அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. இவன் வருவதைப் பார்த்ததும் ஊர்க்கிழவிகளின் ஒப்பாரி அதிகரித்தது. காதில் எதுவும் விழவில்லை. பையை வைத்துவிட்டு கண்ணில் கண்ணீருடன் அப்பா கிடத்தப்பட்டிருந்த இடம் நோக்கிப் போனான். அப்பாவை கூர்ந்து கவனித்தான்.
அதே அமைதி ததும்பும் முகம். முகத்தில் மெல்லிய புன்னகை. சந்தோஷமாக இருந்ததற்கான அடையாளம் இது. அப்பா இறக்கும் போதும் சந்தோஷமாக தான் இருந்திருக்கிறார்.
மனம் சந்தோஷப்பட்டது. கண்ணீர் நின்றது. அருகில் போய் நின்று அப்பாவின் முகத்தையே கூர்ந்து கவனிக்கலானான். பள்ளிக்கூடமும் கல்லூரியும் கற்றுத் தராததை கற்றுத் தந்த போதிமரமல்லவா? ஆசை நிறைவேறி சந்தோஷமாக மரணத்தை எதிர் கொள்பவர்க்கு மறுஜென்மமும் கிடையாதாம். ஆவியாகவும் அலைய மாட்டார்களாம். அப்பா தெய்வப் பதவி அடைந்துவிட்டார்.