radiopriyan
18-03-2008, 06:10 PM
யாழ் குடாநாட்டில் தொடர்ந்துகொண்டுள்ள படுகொலைகள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட மரணங்களினால் கணவனை இழந்து வாழும்
யாழ் குடாநாட்டில்
.விதவைகளின் எண்ணிக்கை சுமார் 29 ஆயிரம் எனக்கூறப்படுகின்றது.
இந்த விதவைகளுள் 40 வயதிற்குட்பட்டவர்கள் சுமார் 7 ஆயிரம் பேர் எனவும் யாழ் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது.
இவர்களுள் சுமார் 23 ஆயிரம் பேர் மாத வருமானமாக ஆயிரம் ரூபாவையோ அல்லது அதற்கு குறைவான தொகையினையோ மாத வருமானமாகப்பெறுகின்றனர். இவர்களில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் எவருடைய தயவுமின்றி தம் வாழ்க்கையினை நடாத்துகின்றார்கள்.
கடந்த 2006 ஆகஸ்ட் மாதம் தொடக்கம் தற்போது வரையில் 700 பேர் வரையில் விதவைகளாகியுள்ளார்கள். அதில் பெருவாரியானோர் படுகொலைகளின் காரணமாக தங்களது கணவனை இழந்தவர்களாகக் காணப்படுகின்றார்கள்.
இவர்கள் 21 வயதற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகமாககாணப்படுவதுடன், தென்மராட்சிப்பகுதியிலேயே அதிகளவிலான விதவைகள் காணப்படுவதாகவும் வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் குடும்பத்தலைவனது இறப்பின் காரணமாக அந்தக்குடும்பங்களின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகக்காணப்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகின்றது.
நன்றி சங்கதி
யாழ் குடாநாட்டில்
.விதவைகளின் எண்ணிக்கை சுமார் 29 ஆயிரம் எனக்கூறப்படுகின்றது.
இந்த விதவைகளுள் 40 வயதிற்குட்பட்டவர்கள் சுமார் 7 ஆயிரம் பேர் எனவும் யாழ் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது.
இவர்களுள் சுமார் 23 ஆயிரம் பேர் மாத வருமானமாக ஆயிரம் ரூபாவையோ அல்லது அதற்கு குறைவான தொகையினையோ மாத வருமானமாகப்பெறுகின்றனர். இவர்களில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் எவருடைய தயவுமின்றி தம் வாழ்க்கையினை நடாத்துகின்றார்கள்.
கடந்த 2006 ஆகஸ்ட் மாதம் தொடக்கம் தற்போது வரையில் 700 பேர் வரையில் விதவைகளாகியுள்ளார்கள். அதில் பெருவாரியானோர் படுகொலைகளின் காரணமாக தங்களது கணவனை இழந்தவர்களாகக் காணப்படுகின்றார்கள்.
இவர்கள் 21 வயதற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகமாககாணப்படுவதுடன், தென்மராட்சிப்பகுதியிலேயே அதிகளவிலான விதவைகள் காணப்படுவதாகவும் வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் குடும்பத்தலைவனது இறப்பின் காரணமாக அந்தக்குடும்பங்களின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகக்காணப்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகின்றது.
நன்றி சங்கதி